Saturday, January 17, 2015

ஐ!!!!! பைசா வசூல்...!!!!!

நேற்று ஒரு வழியாக ஐ படம் பார்த்தாச்சு....

என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை நல்ல படம்ன்னு சொல்லனும்ன்னா அதற்கான தகுதியாக என்னைப் போன்ற சினிமா வாழ வேண்டும்...  என்று எண்ணுகிற சினிமா ரசிகனை தியேட்டரில் போய் உட்கார்ந்தது முதல் படம் முடிகிற வரை... நைட் ஷோவிலும் கொட்டாவி கூட விடாமல் வாயை பிளந்து பார்க்க வைக்க வேண்டும்....!!

அந்த வகையில் ஐ என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம்...!!

தியேட்டர்ல செம கூட்டம். ஞாயிற்றுக் கிழமை வரை டிக்கெட் விற்றாகிவிட்டது. டிக்கெட் விலை ரூ. 250.  ஏசி இல்லாமல், சீட்டெல்லாம் உடைந்து கிழிந்து கிடக்கும், துப்புறவு இல்லாத தியேட்டரில் இந்த விலை கொடுத்து இந்தப் படத்தைப் பார்க்க ஐந்து நாட்களுக்கு ஃபுல் என்றால்...   தமிழ் நாட்டில் மட்டுமே இந்நேரம் இந்தப் படம் 150 கோடி வசூலை தாண்டியிருக்கும் என்பது என் சிற்றறிவு சொல்லும் கால்குலேஷன்...!!!  ஆக இந்தப் படம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப் படமே...!!!

டைட்டில் போடும் போதே மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வரும் அளவிற்கான விசில் சத்தம் ஷங்கர் பெயர் வரும் போது வந்தது ஒரு பெரிய ஆச்சர்யம்.  அந்த விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் படம் நெடுகிலும் படம் முடிந்து எழுந்து வரும் போது வரை வருவது தான் படத்தின் வெற்றி...!!!

எனக்கு உன் சமையல் அறையில் படமும் பிடிக்கும்....   இந்த ஐ படமும் பிடித்திருக்கிறது....!!   நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்...  படிப்பு சரியா வராமல் ஸ்போர்ட்ஸில் கோல்ட் மெடல் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்...!!   இவனிடம் விளையாட்டுத் திறன் இல்லை என்று திட்ட மாட்டேன்.... அவனுக்கு படிப்பு வரவில்லை என்று காதைப் பிடித்து திருகவும் மாட்டேன்...!!!  அவரவருக்கான தளத்தில் சிறப்பாகச் செய்கின்றார்களா என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும்...!!!

அந்த வகையில் ஷங்கர் ஏமாற்றவில்லை. தியேட்டருக்கு வந்திருந்த 90 சதவிகிதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தட்டாமல் நிறைவேற்றியிருக்கின்றார்.

முதலில் பி.சி. ஸ்ரீராம்.... எனக்குத் தெரிந்து அவருக்கு இந்தப்படம், ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்...!!! கர்நாடிக்கில் வெளுத்து வாங்கும் ஒரு நபர் வெஸ்டர்னிலும் அடித்து தூள் கிளப்புவதைப் போல தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்திருக்கின்றார்.  சீனா சைக்கிள் சண்டையும், ரயில் சண்டையும் இன்னமும் கண்ணில் அப்பிக்கோண்டேயிருக்கின்றது...!!! சீனத்து இயற்கைக் காட்சிகளும், அந்த அற்புதமான பூக்களூம்.... கிடக்கட்டும்....    சென்னையின் ஹவுசிங் போர்ட் தெருக்களையும், பின்பக்கத்து சாக்கடைகளையும் தியேட்டரில் அப்படியே மணக்க வைத்து விட்டிருக்கிறார்....!!!

ஏ,ஆர், ரஹ்மான இன்றைய இளைஞர்களின் லேட்டஸ்ட் டேஸ்ட்டுக்கு தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு விட்டார்....!!! இனி சம கால இளைஞர்களும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பின்னனி இசையை படத்தின் நான்கு தளங்களிலும் அததற்கானதை கொடுத்து பட்டையைக் கிளப்பி விட்டிருக்கின்றார்...!!  பாடல்களின் இசைக் கோர்வைகள் மற்றும் தாளக்கட்டுக்களில் அராஜகம், அதகளம் பண்ணியிருக்கின்றார். சம கால இசையமைப்பாளர்கள் அதில் நிறையை படிக்க வேண்டும்.

ஷங்கர்....  எல்லோரிடமும் வேலை வாங்குவது தான் அவர் வேலை. அதில் அவர் எப்பொழுதுமே தெளிவாக இருக்கின்றார். சுஜாதா, பாலகுமாரன் இல்லாமல் தவிப்பதாக சிலர் எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படியெல்லாம் எதுவும் புலப்படவில்லை.  ஏனெனில் கதை மற்றும் வசனங்கள் பற்றி அவர் அவ்வளவாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.  காட்சிக்குக் காட்சி படம் பார்ப்பவர்களை குஷிப்படுத்த வேண்டும், பரவசமடைய வைக்க வேண்டும், சொக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், பரிதாபப்பட வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்.....  என்ற வரிசைப்படி அடுத்தடுத்து காட்சிகளை வைத்து...., சஸ்பென்ஸ், டிவிஸ்ட் என்றெல்லாம் வைப்பது ஓல்ட் ஸ்டைல் என்றெண்ணி, படத்தின் கதையை முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே மக்களிடம் சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்து பார்க்க வைக்கின்றார்.

அதனால் தான் படம் முடிந்த பிறகும் ஒரு மூன்று நிமிடங்கள் எண்ட் கார்ட் போடும் போதும் ஒருவர் கூட சீட்டை விட்டு எழுந்திராமல் உட்கார்ந்து விக்ரம் மீண்டும் உருமாறுவதை ஆவலுடனும், ஏக்கத்துடனும் பார்த்துவிட்டு.... கைகளை சந்தோஷத்துடன் தட்டிவிட்டு எழுகின்றனர்....!!  இந்த இடத்தில் தான் டைரக்டர் ஷங்கரின் வெற்றியும், ரசிகர்களின் நாடித்துடிப்பை அவர் பிடித்து வைத்திருப்பதையும் உணர முடிகிறது.!!

எம் என் சி கம்பெனிகளுக்கான விளம்பரங்கள் மட்டுமின்றி பிளாட் புரொமோட்டர்ஸ் விளம்பரம் வரையிலும் அடித்து தூள் கிளப்பியிருக்கும் ஷங்கருக்கு விளம்பரத் துறையிலும் நல்ல எதிர்காலம் இருப்பதை இந்தப்படத்தின் குறியீடாகக் கொள்கிறேன். சில விளம்பரங்கள் நம்மையறியாமல் சபாஷ் போட வைக்கின்றது.... தியேட்டரில் சென்று பார்த்து அனுபவித்தால் தான் புரியும். அவற்றில் பிசி. ஸ்ரீராமும், ரகுமானும், டூ பீஸில் வரும் ஹீரோயினியையும் சேர்த்து வைத்து ஷங்கர் அதகளம் பண்ணியிருக்கின்றார். ராஜீவ் மேனனே கூட ஜெலுஸில் சாப்பிட்டிருப்பார்...!

அடுத்ததாக ஒன் அண்டு ஒன்லி விக்ரம். கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் அவர். மனுஷன் நீண்ட காலம் வாழ வேண்டும். தயவு செய்து, அதி மேதாவித்தனமாக விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவருடைய உழைப்பை யாரும் குறை சொல்லாதீர்கள். நல்ல கலைஞனை காயப்படுத்தும் சமூகம் உறுப்படாது!! விக்ரம் உழைப்பிற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம் என்றிருக்கின்றேன். இந்தப்படத்தில் விக்ரம் நடிப்பு பற்றி எழுத ஆரம்பித்தால் இது மாதிரி இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டியிருக்கும்.... அது பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டி, ஏமாற்றத்தைக் கூட தரலாம்.... ஆகவே சாதாரணமாக எந்த முன் முடிவும் இன்றி சென்று இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும்......

நிச்சயம் பைசா வசூல்....!!!

Tuesday, January 13, 2015

ஜல்லிக்கட்டுன்னா.... ஏன் மல்லுக்கட்டுறாஆஆஆ??!!


ஒவ்வொரு வருஷமும் ஜல்லிக்கட்டு நடக்கும் போது சொம்ப தூக்கிக்கிட்டு அம்பிகளும் அவா ஆத்து ஆண்ட்டிகளும் வந்து குந்திகிடுறாய்ங்க. டீவில பேப்பர்ல, கோர்ட்லன்னு ஒரே புலம்பல்.... மாடுகளை எல்லாம் கஷ்டப்படுத்துறதா...!!!
எனக்கு நினைவு தெரிஞ்சி, ஜல்லிக்கட்டு நடக்கறச்சே எல்லாம், மாட்டுக்கு அடிபட்டு காயமாயிடிச்சி, மாடு செத்துப்போச்சின்னு வந்த செய்தியை விட, இத்தனை இளைஞர்கள் மாடு முட்டி காயமடைந்தனர், இத்தனை இளைஞர்கள் உயிரிழந்தனர்ன்னு தான் செய்தி வருது....!!!
ஒரு இனம் தன்னுடைய வீரத்தை, மன உறுதியை, தைரியத்தை, மனக்கட்டுப்பாட்டை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும், உலகத்திற்கு எடுத்துக்காட்டவுமான களம் அல்லது தளம் அது...!!!
அதில் இவர்களுக்கு என்ன வந்தது??? எவனும் எங்கேயும் வீரத்தைக் காட்டிடக் கூடாது... ஹிந்தி கத்துண்டா வேலை கிடைக்கும்ன்னு நம்பிட்டிட்டிருக்குற சொம்பைகளாகத் தான் எல்லோரும் மாற வேண்டும்... எல்லோருமே தன் சொந்த ஊரில் இருந்து மாற்றுப் பிரதேசத்தில் இருந்தால், முதலில் மொழியை அடமானம் வைக்கும் போதே தன்மானம், வீரம், போராட்ட குணம் இவை அத்தனையும் கூடவே அடகு போய்விடும் என்பது தான் சூத்திரம்...!!
இந்த அடமானத்திலிருந்து அவற்றையெல்லாம் மீட்க, அவனவன் சொந்த ஊரில் நடக்கும் இது மாதிரியான வீர விளையாட்டுக்களும்,,பாரம்பரிய விழாக்களும் தான் ஒரே உந்துசக்தி!!!
அதையும் அடித்து நொறுக்கிவிட்டால், இவன் காலம் முழுவதும் சொம்பையாகவே இருக்க வேண்டியது தான். ஒரு மூன்று பேர், இவனைப் போன்ற 97 சொம்பைகளை எப்பொழுதும் அடிமையாகவே வைத்து ஆளலாம்...!!!
ஜல்லிக்கட்டை முடக்கியாச்சின்னா, அடுத்தடுத்து, வீரன் பூஜை, முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கிறது, சுடலைமாடனுக்கு படையல் போடுவது, மாரியம்மனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துறது.... இப்புடிக்கா போயி பொங்களுக்கு விடுமுறை இல்லன்னு அறிவிக்கிறது வரைக்கும் போயி நின்னு... கடேசில திரும்பிப் பார்த்தா, நம்ம அடையாளமே இல்லாம அம்மணமா நிக்க வேண்டியிருக்கும்...!!!

இது ஒட்டுமொத்த தமிழகத்தின்..., தமிழர்களின் பிரச்சினை...!!

இதெல்லாம் வேண்டும்.... தடைசெய்யக் கூடாதுன்னெல்லாம் போராட்டம் செய்வதை விட... உலகறிய கபடித் திருவிழாவை நடத்திடுவோம்.... தமிழகத்தின் சிறு சிறு கம்பெனிகளில் துவங்கி... படிப்படியாக பெரிய நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஸ் பிடித்து, வருடத்திற்கு ஒரு முறை ஒன்னரை மாதங்களுக்கு கபடி லீக் மேட்ச் நடத்தி, கிரிக்கெட்டை ஓரம் கட்டுவோம், கபடியை மக்கள் மன்றத்தில், இளைஞர்கள் மட்டத்தில், பெண்களை ஈர்க்கும் வகையில் பிரமோட் செய்வோம்...!
கிரிக்கெட் விளையாடி நிறைய பேர் உயிரிழந்திண்டிருக்கா... அதுனால கிரிக்கைடை தடை செய்வோம்ன்னு ஒரு ரிட்டும் போட்டு வைக்கலாம். கிரிக்கெட் அடிவாங்கும் போது அலறித்துடிப்பார்கள்... நம்மை நோண்டுவதை விட்டுவிட்டு, அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்தை திசை திருப்புவார்கள்.

ஒரு கோட்டை சின்னதாக்க அதை அழிக்க வேண்டாம்... அதனருகில் நாம் ஒரு பெரிய கோட்டை போடுவோம்...!