Tuesday, November 24, 2015

பள்ளிக்கூடங்கள் உண்மையிலேயே பலன் தருகின்றனவா?! #1


டீவின்னா ஒன்லி சினிமா நிகழ்ச்சிகள் அல்லது போகோ, கார்ட்டூன் மட்டுமே என்று அட்ராசிடி பண்ணி மற்றவர்களை ஓரம் கட்டிவிட்டு பார்க்கும் பள்ளிக் குழந்தைகள்...

கடந்த 15 நாட்களாக செய்தி சேனல்களையும், குறிப்பாக ரமணன் அறிவிப்புகளையும் மட்டும் கண்கொத்திப் பாம்பாக பார்த்துகொண்டிருப்பது பற்றி பல்வேறு மீம்ஸ் மற்றும் உற்சாக பதிவுகள் இணையம் முழுக்க சுற்றி வருகிறது.

இதை வெறுமனே சிரித்துக் கடந்துவிடும் விஷயமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு உள்ள குழந்தைகள் மட்டுமல்ல, நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கூட, இந்த மழைக்காலங்களில் தெருவில் ரேடியோ இருகின்ற ஒரே ஒரு வீட்டில் தெருப் பிள்ளைகள் எல்லாம் குவிந்திருப்போம். தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை என்று சொன்னால் தான் குஷியோடு சத்தம் போட்டு மழையில் நனைந்தவாறே கிளம்புவோம்....!

இதே கல்வி பாடத்திட்டம் தொடர்ந்தால்... இப்பொழுது உள்ளதற்கு அடுத்த தலைமுறை கூட இப்படித்தான் மழைக்கால விடுமுறை குறித்த அறிவிப்புக்களுக்கு துள்ளிக் குதிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிறந்த குழந்தை ஒன்று மூன்று வருடத்தில் எல் கே ஜியில் தன் பயணத்தைத் துவங்கினால், ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டுமானாலே 17 வருடங்கள் தொடர்ந்து தோல்வியுறாத வெற்றியுடன் படிக்க வேண்டும். அதாவது பிறந்தில் இருந்து மிகக் குறைந்த பட்சமாக இருபது வருடங்கள் தனது அற்புதமான குழந்தைப் பருவம் உள்ளிட்ட ஆரம்ப இளமைக்காலங்களை இந்த கொடூரமான கட்டுப்பாட்டிலேயே கழிக்க வேண்டியதிருக்கிறது.
அந்த 20 அல்லது 23 வருடத்திற்குப் பிறகான தனது மீதம்முள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கே இந்த தண்டனை என்று அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மிகப் பலமாக நம்புவதாலேயே அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதாலேயே தான் இந்தியக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை எல் கே ஜி படித்தாலும், டிகிரி மூன்றாமாண்டு படித்தாலும்... அதையும் அரசு, நகராட்சி, மாநகராட்சி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் படித்தாலுமே ஒரு மாணவருக்கான சீறுடை, புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், சார்ட் வகைகள், பள்ளி அல்லது கல்வி சார்ந்த இன்ன பிற செலவினங்கள், பள்ளிக்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவைகளை கூட்டினாலே ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 20 ஆயிரம் வரை செலவாகும். அதாவது 17 வருடங்களுக்கு மிகக் குறைந்தபட்சமாக இந்த அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலும் மாணவர் 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய்களையாவது கண்டிப்பாக செலவு செய்தே தீர வேண்டும். இதுவே தனியார் பள்ளி கல்லூரி என்றால் அந்த மாணவர் இன்னும் கூடுதலாக 5லிருந்து 20 லட்சம் வரையிலும் கூட செலவு செய்வதை தவிர்க்க முடியாது.

இதெல்லாமே நான் சொல்வது பிஏ, பிஎஸ்ஸி, பிகாம் போன்ற படிப்புக்கள் வரை படிப்பதற்கு மட்டுமே..! ஆனாலும் தன் சராசரி வாழ்வில் மூன்றில் ஒரு பங்கினை விரயம் செய்தும், பெரும் பணத்தை கொட்டி அழுதும், கடும் சிறைவாசம் போன்ற வாழ்வு நிலையை அனுபவித்தும் வெளியேறும் பொழுது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அல்லது ஏதோ ஒரு விருப்பமுள்ள தொழிலைச் செய்து தன் மீதமுள்ள வாழ்க்கையை வேறு யாருடைய பொருளாதார உதவியுமின்றி சுயசார்புள்ளவராக நடத்திட தகுதியுள்ளவராய் இருக்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் பதில்...!

பிகாம் படித்து சான்றிதழை பெற்ற மாணவர் அடுத்த நாள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அக்கவுண்ட்ஸ் வேலையை உடனடியாக தன் பொறுப்பாக செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றாரா? கெமிஸ்ட்ரி படித்தவர் அடுத்த நாள் ஒரு ஆய்வுக் கூடத்தில் பணிக்குச் சேர்ந்து உடனடியாக தன் பொறுப்பாக அந்த வேலையைச் செய்யும் நிலையில் இருக்கின்றாரா? அவருக்கு சொந்தமாக ஒரு கார் வாங்கி டிரைவராக பணியாற்றி தன் வருமானத்திற்கு வழி கோலிக்கொள்ள முடியுமா? வேறு ஏதாவது தொழில் செய்து தன் சுய வருமானத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது என்ற பதிலே கிடைக்கிறது.

பிறகு எதைத்தான் 20 வருட கால பள்ளிக், கல்லூரி வாழ்க்கை அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றது என்றால்... கிட்டத்தட்ட, பேந்த பேந்த முழிக்கின்ற நிலைதான் இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கின்றது.

நேற்று ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பொழுது அங்கே பயிற்றுனராக வந்திருந்த ஒரு நபர் பேசியதும்... அவரது பேச்சை உறுதிப்படுத்தி டி சி எஸ் ஸின் துணைத்தலைவர் பேசியதும் என்னை ஒரு நிமிடம் உறைய வைத்து விட்டது. பி ஈ எலக்ட்ரிகல் முடித்து நேர்காணலுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு வோல்டேஜ் என்றால் என்ன என்பதற்கு கூட சரியான பதில் தெரியவில்லை... பதில் சொன்னாலும் அதற்கான துணைக் கேள்விக்கு புரிதல் இல்லாத மனப்பாட வாந்தி எடுத்தல் தான் இருக்கின்ற காரணத்தால் முட்டுச் சந்தில் முட்டி நிற்பது போல நின்று விடுகின்றார்கள் என்று சொன்ன போது தான் அதிர்ந்து போனேன்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை அல்லது சுய தொழில் செய்து சம்பாதிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தாங்கள் 20 வருடம் பயின்ற பள்ளிக் கல்லூரி கல்வி அல்லது பயிற்சியினைக் கொண்டு அந்த வேலையினைச் செய்து சம்பாதிக்கின்றார்கள்? வெறும் பத்து சதவிகிதத்தினர் கூட இருக்கமாட்டார்கள் என்பது தான் என் கணிப்பு.

எதற்குமே உதவாத இந்தக் கல்வி முறை தான் எதற்கு?


தொடர்ந்து அலசுவோம்.....


Monday, November 23, 2015

ஜூவி சர்வே.... என்ன தான் சொல்கிறது?

ஜூனியர் விகடன்ல ஒரு சர்வே...

முதலமைச்சராக ஜெயலலிதாவின் செயல்பாடு எப்படி?... என்று

சூப்பர்..ன்னு 27.95 சதவிகிதம் பேரும்..

மோசம்..., மிக மோசம்ன்னு 32.68 சதவிகிதம் பேரும்...

சுமார் தான் என்று 39.37 சதவிகிதம் பேரும்...
வாக்களித்திருக்கின்றார்கள்.

இதை நேரடியா நாம எப்படி புரிஞ்சிக்கலாம்ன்னா....
சூப்பர்ன்னு சொன்னவங்க அதிமுக ஆதரவாளர்கள்ன்னும்...
மோசம், மிக மோசம்ன்னு சொன்னவங்க திமுக ஆதரவாளர்கள்ன்னும்...
சுமார்ன்னு சொன்னவங்க எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள்ன்னும்...

எடுத்துக்கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால்...

தற்பொழுதைய நிலையில்...

திமுகவின் வாக்கு வங்கி 32.68 சதவிகிதமாகவும்
அதிமுகவின் வாக்கு வங்கி 27.95 சதவிகிதமாகவும்

இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதாவது அதிமுகவை விட திமுகவின் வாக்கு வங்கி 4.73 சதவிகிதம் கூடுதலாக இருப்பது அப்பட்டமாக பதிவாகியிருக்கிறது.

மீதமுள்ள அந்த 39.37 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் அதிக அளவில் எந்தப் பக்கம் சாய்கின்றார்களோ அந்த அணி ஆட்சி அமைக்கும் என்பது தான் யதார்த்த நிலை.

இந்த இடத்தில் தான் நாம் சற்று கவனமாக ஆராய வேண்டும். இந்த நடுநிலையாளர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியின் மீது திருப்தி இல்லாத காரணத்தால் தான் சுமார் என்று சொல்லியுள்ளார்கள். அதனால் அவர்களது வாக்குகள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு எதிராகவே விழும்... அல்லது அதிமுகவுக்கு விழாது என்று சொல்லலாம்.

அப்படியான அதிருப்தி நடுநிலையாளர்கள் திமுகவுக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஆளுங்கட்சியின் ஏற்பாட்டில் வைக்கோ தலைமையில் மக்கள்நல கூட்டியக்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுவதாக பெரும்பாலான அரசியல் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாகவே கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.

அது உண்மையாகவே இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். எப்படி இருந்தாலும், அந்த நடுநிலையாளர்களை நாம் ஏ பி சி என்ற மூன்று தரப்பாக பிரித்துக் கொள்ளளாம். (அப்படித்தான் பிரிவார்கள்) அந்த மூன்று பிரிவினரும் சற்றேரக் குறைய சம அளவு சதவிகிதத்தில் தான் பிரிந்து நிற்பாகள். 

அதில் ஏ என்ற பிரிவினர் பல்வேறு காரணங்களால் திமுக மீதும் கூட வெறுப்பில் இருப்பவர்களாக இருக்கக் கூடும். அப்படியான குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஜெயலலிதா நல்லாட்சி தரவில்லை என்றாலும் பரவாயில்லை, திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் மனநிலையில் வேறு வழியின்றி அதிமுகவுக்கே மீண்டும் வாக்களிப்போம் என்று எண்ணுகிற அந்த நிலையினை.....
...அந்த நிலையினைத்தான் தற்பொழுது உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கம் தவிடு பொடியாக்கியிருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் மேற்படி மனநிலை கொண்ட... அதாவது ஜெயலலிதா ஆட்சி பிடிக்கா விட்டாலும் வேறு வழியின்றி அதிமுகவுக்கே வாக்களித்து தொலைய வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடிய அந்த குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்களுக்கான புகலிடமாகத்தான் இந்த மக்கள் நல கூட்டியக்கம் மாறப்போகின்றது...!!

அதாவது ஜெயலலிதா - வைக்கோ வின் இந்த ரகசிய ஏற்பாடு, சேம் சைடு கோல் அடித்த கதையாகத்தான் முடியும் என்பது என் அனுமானம்.

அந்த 39.37 சதவிகித நடுநிலையாளர்களில் இன்னொரு பிரிவான பி பிரிவினர்... இயல்பாகவே ஜெயலலிதா ஆட்சி சரியில்லை... அதனால் மீண்டும் திமுகவுக்கே வாக்களிப்பது தான் சரி. வேறு கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்களும் வெற்றி பெற முடியாது, மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வந்து விடும், ஆகையால் அதிமுகவுக்கு பதில் இந்த முறை திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவினை தெளிவாக எடுத்து விடுவார்கள்.

இதில் மூன்றாவது பிரிவான சி பிரிவினர் தான் கிட்டத்தட்ட உண்மையான அப்பாவி நடுநிலையாளர்கள். இந்த பிரிவினர் எப்பொழுதுமே நடப்பு ஆட்சி தனிப்பட்ட முறையில் தனக்கு சாதனையைத் தந்ததா? வேதனையைத் தந்ததா? என்ற நேரடிக் கேள்விக்கான பதிலின் அடிப்படையில் தான் வாக்களிப்பர்.
ஜெயலலிதா ஆட்சி சுமார் என்று சொன்ன காரணத்தினாலேயே இந்த பிரிவினரில் பெரும்பான்மையாயானவர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவைத்தான் எடுக்க முடியும். அப்படி எடுக்கும் பொழுது தங்களது வாக்குகள் எக்காரணம் கொண்டும் விரயமாகக் கூடாது என்பதில் தான் இந்தப் பிரிவினர் மட்டும் குறியாக... கவனமாக இருப்பார்கள்.

ஸோ.... அவர்கள் மூன்றாவது அணிக்கு வாக்களித்து விரயமாக்குவதை விட ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவையே எடுப்பார்கள்.

இன்னும் கொஞ்சம் புளி போட்டு விளக்க வேண்டுமானால்.... நடுநிலையாளர்கள் மூன்றாக பிரிந்து அதில் ஒரு பிரிவு மக்கள் நல கூட்டியக்கத்திற்கும், ஒரு பிரிவு திமுகவுக்கும் பெரும்பான்மையாக வாக்களிக்க... மூன்றாவது பிரிவில் பெரும்பான்மை திமுகவுக்கும் சிறுபங்கினர் அதிமுகவுக்கும் என்று வாக்களிப்பர். மூன்றில் 1.60 திமுகவுக்கும் 0.40 அதிமுகவுக்கும், 1.00 மக்கள் நல கூட்டியக்கத்திற்கும் வாக்களிப்பர்.

ஆக மொத்தம் திமுக 46 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று (மேற் சொன்ன கணக்குப்படி 52 சதவிகிதம் பெற வேண்டும்) அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

ஏனெனில் ஆண்ட்டி இன்கம்பன்ஸி என்கிற ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிமுகவுக்குத்தான் இருக்கின்றதே தவிர.... அதாவது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருந்த காரணத்தால் தான் காங்கிரஸும், அதன் தமிழக கவுண்டர் பார்ட்டாக இருந்த திமுகவும் மண்ணைக் கவ்வின. அதன் பலனை அதிமுக முழுமையாக அறுவடை செய்தது.....! அதே போலத்தான், வரும் சட்ட மன்ற தேர்தல் நடப்பு மாநில ஆட்சிக்கான தேர்வு என்பதால், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதன் பலனை அதிமுகவின் நேரடி எதிரியான திமுகவுக்கு வழங்கும்.

இந்த மனநிலையை மக்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றார்கள் என்றால்..... அதே ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வியான யார் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற கேள்விக்கு.....

திமுக தலைவர் கலைஞருக்கு ஆதரவாக 41.7 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். கலைஞருக்கு அடுத்தபடியாக விஜயகாந்துக்கு அதாவது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகாரம் தந்த மக்களே... தற்பொழுது வெறும் 13.81 சதவிகித வாக்குகளை மட்டுமே தந்திருக்கின்றார்கள். கலைஞருக்கும் விஜயகாந்துக்குமான வித்தியாசமே 27.89 சதவிகிதம் இருக்கின்ற போது....

மக்கள் தற்பொழுதைய மனநிலையில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவை மட்டுமே முன்நிறுத்துகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

ஆக 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறுதி...!!! உறுதி...!!! உறுதி...!!!




Wednesday, November 18, 2015

மழை பாதிப்புக்கு திமுகவும் காரணமா?!

ஆஹா.... ஒவ்வொரு அதிமுக அடிவருடியும் என்னமா எழுதுறாங்கப்பாஆஆ??!

இந்த ஒரு வார மழையில் வட மாவட்டங்களும், சென்னையும் பாதிக்கப்பட்டதுக்கு, அதிமுக ஆட்சியின் செயல்படாத நிலையும், வடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த பெருமளவிலான முறைகேடுகளும் தான் காரணம் என்பதையும்...,

இந்தத் தவறுகளால் ஏற்பட்ட சேதங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிப்பதையும் கூட இந்த அரசு ஒட்டுமொத்த அமைச்சரவை, அதிகாரிகளை களமிறக்கி (அதாவது இடைத்தேர்தலுக்காக அந்தத் தொகுதிகளில் செய்வது போல) மத்திய பாதுகாப்புப் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் என்று அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வைத்து....

மத்திய அரசு, பெரிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவிகளைப் பெற்று... பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உரிய நிவாரணங்களை செய்து முடித்து நிலைமையை... மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் செய்யத் தவறிய ஒரு அரசினை, அதன் ஆட்சியாளர் மேல் தனக்கிருக்கும் ஏதோவொரு பாசம் அல்லது ஈர்ப்பு அல்லது சிலபல பலன்களைக் குறிவைத்ததன் காரணமாக கண்டித்து, குறைகூறி, விமர்சித்து எழுதாமல், பேசாமல் கை கட்டி, வாய் மூடி மௌன சாட்சியாய் ஊடகங்கள் நின்று கொண்டிருக்கின்ற நிலையில்...

நடுநிலையாளர் முகமூடி அணிந்து அதிமுகவின் விசுவாசிகளாக உலாவரும் அதிமுக அடிவருடிகள் சமூக வலைத்தளங்களில் அதிமுக அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களை அப்பாவி பொது மக்கள் மற்றும் இளைஞர்களிடம் சென்றடையாமல் மடைமாற்றும் முயற்சியாக எழுதுவதையெல்லாம் பார்த்ததும் தான் இந்தப் பதிவின் முதல் பத்திக்கான காரணமாக அமைந்தது...!

ஒருத்தர் எழுதறார்... அமெரிகாவுல எல்லாம் புயல் வந்துச்சின்னா, ஒரு வாரம் கரண்ட் இருக்காதாம்... அப்பக் கூட மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேத்திக்குவாளாம்..., அரசாங்கம் செய்யவில்லை என்று அங்கலாய்க்க மாட்டார்களாம்... தமிழ்நாட்டு மக்களும் அப்படித்தான் இருக்காங்களாம்... ஆனா, எதிர்க்கட்சிகள் தான் அரசியலுக்காக அலப்பறை செய்கின்றார்களாம்...!

இன்னொருத்தர் எழுதறார்... பிரிட்டிஷ் கால வடிகால் வசதிகளைத் தவிற வேற எந்த கழக ஆட்சியிலும் வசதியே செய்யவில்லையாம்... அதனால், இதற்கு அதிமுகவை மட்டும் குற்றம் சொல்லவே முடியாதாம்...!

ஒரு கேணையன் எழுதறான், வெள்ளத்தைப் பார்வையிடச் செல்லும் ஸ்டாலின் நீரில் நனையாத முழங்கால் அளவு ஷூ போட்டுட்டு போறாரம்... அதனால இது அரசியல் நாடகமாம்....

ஏய் பண்ணாட, ஃபோட்டோவுக்கு போஸ் குடுத்து ஷோ காமிக்க மட்டும் போறவன் தாண்டா, நீ சொல்ற மாதிரி எல்லாம் போவான். இவரு ஆளுங்கள கூட்டிக்கிட்டு, ஒவ்வொரு இடமா போயி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போகும் போது, அதுக்கு ஏத்த மாதிரி இலகுவா வேலை செய்யற மாதிரியான ஆடைகள், உபகரணங்களோட போனாத்தான் வேலை செய்ய முடியும். மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போனா இப்படித்தான் போகனும், வேன்ல போறதுக்கே தண்ணி நிக்காத இடத்துக்குத்தான் போவேன்னு அடம்பிடிச்ச உன் ஆத்தா மாதிரியா போவாங்க... லூஸு பயலே...!

சாக்கடைய சுத்தம் பண்ண போறவன் சாராயம் குடிக்கிறது, அவன் ஜாலிக்காக இல்லடா. அந்த நாற்றம் அவனுக்குத் தெரியாம இருக்கனும், அருவறுப்பு அவனை அண்டாம இருக்கணும்ங்கறதுக்காக தாண்டா.

இன்னொருத்தன் எழுதறான்.... மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூனே நாள்ல பேய்ஞ்சிடிச்சாம்...! அதுனால எந்த ஆட்சியா இருந்தாலும் எதுவும் செய்ய முடியாதாம்.

இத மாதிரி திரும்பத் திரும்ப நீங்க சொன்னா மக்களை நம்ப வைத்து விடலாம் என்ற எண்ணமா? தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பரை மையப்படுத்தி மூன்று மாதங்களுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இயற்கை விதி தான். அதில் குறிப்பாக ஒரு பத்து நாட்கள், ஒன்றோ இரண்டோ அல்லது மூன்று புயல் சின்னங்களுக்கான அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், அந்த புயல் சின்னம் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆந்திரா, ஒடிசா என்று சென்று கரையைக் கடப்பதும், நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழகத்தை செம்மையாக பதம் பார்ப்பதும் என்பது நாம் காலம் காலமாக கண்டு அனுபவித்து வரும் ஒரு நிகழ்வு தான்.

புயல் காற்று அல்லது சுனாமி போன்ற பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அதற்கு நிவாரணம் தான் செய்ய முடியும் என்றாலும்...

எப்படிப் பட்ட கன மழை பெய்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கையோடு இருந்தால் நிச்சயம் உயிர்ச் சேதங்களை முற்றிலும் தவிர்க்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்தலாம். இதற்கெல்லாம் மேலாக அந்த மழை நீரை நல்ல விதமாக பாசனத்திற்கும், குடிநீருக்குமாக அடுத்து வரும் கோடைக்காலத்திற்காக பயன்படுத்தவும் முடியும்

இதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, காவிரி மற்றும் கொள்ளிடம் நீர்ப்பாசன பகுதிகளில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இருக்கின்றவற்றை சுத்தமாக இந்த அரசு தூர் வாறியிருக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளையும், குளங்களையும், வடிகால் வாய்க்கால்களையும் சுத்தமாக தூர்வாறி, வடிகால்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் மற்றும் பழுதுகளை மாநகர நிர்வாகம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எப்பொழுதுமே இது போன்ற பேரழிவுகள் அதிமுக ஆட்சி நடக்கின்ற போது மட்டுமே ஏற்படுகின்றனவே? என்ற கேள்வியை இந்த நடுநிலை நாதாறிகள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிமுக அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதில்லை என்பது தான் இதற்கான காரணம். அதை மறைத்து விட்டு பொத்தாம் பொதுவாக இந்த அவலங்களுக்கு அதிமுகவோடு சேர்த்து திமுக ஆட்சியையும் குற்றம் சொல்வது அயோக்கியதனத்தின் உச்சம்.

மேலும் ஒரு அப்பாடக்கர் சொல்கிறார், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், உறைவிடப் பள்ளிகளும் தான் பெரும்பாலான ஏரிகளை ஆக்கிரமித்துள்ளதாம், அதனால் தான் இந்த மழையினாலான பாதிப்பாம். அந்த கல்வி நிலையங்கள் எல்லாம் திமுக அதிமுகவினரின் ஊழல் பணத்தில் வந்ததாம், அதிலும் கடந்த 15 ஆண்டுகளில் வந்தது தானாம்...!!

அட லூஸு பன்னாட, தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பொற்காலமே எம் ஜி ஆர் ஆட்சி தான். அன்றைக்கு துவங்கப்பட்ட கல்லூரிகள் தான் இன்றைக்கு பல்கலைக் கழகங்களாக உருவெடுத்து இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களை கபளீகரம் செய்து நிற்கின்றன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எழுதுகின்றார்கள்.

சரி அனைத்துக் கல்லூரிகளையும் வேண்டாம், திமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டு கட்டப்பட்ட கல்லூரிகளில் இது போன்ற ஏரி, குளம் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா அதை உடனடியாக கையகப்படுத்திவிடலாமே?! ஆட்சி ஜெயலலிதா கைகளில் தானே இருக்கிறது? இந்தக் கோரிக்கையை முன்வைத்து இந்த கூமுட்டைகள் எழுதலாம் அல்லது போராட்டம் கூட நடத்தலாமே?!

1996 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், காவிரி மற்றும் அதன் முப்பதுக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாய்க்கால்களை மூன்று மாதகாலத்தில், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் வேலைக்கு உணவு திட்டங்களின் மூலம் தூர் வாறி, நவீன ராஜராஜ சோழன் என்று மக்களும் ஊடகங்களும் அவரை புகழ்ந்த உன்னதமான நிலையை அடைந்தார்.

ஏன்? இன்றைக்கு சென்னையில் இவ்வளவு பெரிய அழிவிலும் மக்கள் ஓரளவிற்கு போக்குவரத்தை தொடர முடிகின்றது என்றால், திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட 42 தரமான பாலங்கள் தான் காரணம் என்பதை சென்னையில் முப்பாதாண்டுகளாக வசிக்கின்ற எந்த உண்மையான நடுநிலையாளராலாவது மறுக்க முடியுமா?

மக்கள் நலனுக்கான இயக்கம் நடுத்துறோம்ன்னு சொல்ற ஒரு கருங்காலி ஒன்று... அரசை இந்த நேரத்தில் குறை சொல்லக் கூடாதுன்னு, பொத்தாம் பொதுவாகப் பேசி..., அதிமுக ஜெயலலிதா அரசினை மக்கள் கோபத்திலிருந்து விலக்கி வைக்கும் மாமா வேலையை தன் அளவிற்கு செய்து ராஜ விசுவாசத்தை காண்பித்திருக்கின்றது.

ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், திமுகவும், அதன் தலைவரும், வருங்காலத் தலைவரும், மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் தான், களத்தில் இறங்கி நின்று மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி, நிவாரண உதவிகளை உடனுக்குடன் தேவைப் படுவோருக்கு, தேவை அறிந்து வழங்கி, அரசுக்கும் ஒத்துழைப்பு தருவதாக அறிவித்து...., செம்மையாக சேவைபுரிந்து வருகின்றார்கள்.

இதை உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். அறிவுஜீவிகளாக காட்டிக்கொண்டு, நடுநிலை போன்று நடித்துக்கொண்டு;;;, வெளிநாடுகளிலும், ஏஸி ரூமில் அமர்ந்து காசுக்காக எழுதும் கட்டுரையாளர்களாலும்..., நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்களால் வீசப்படும் கணைகளை திமுக பக்கமும் திருப்பி விடச்செய்யும் முயற்சி ஒருக்காலும் பலிக்காது.


Friday, November 13, 2015

நமக்கு நாமே நாடகம்

நமக்கு நாமே நாடகத்தின் நேற்றைய சீன்...

ஸ்டாலின் சீன் ஸ்பாட்டுல வந்து நிக்குறாரு. நாளஞ்சு குடிசை வீடு பிய்ந்து போன நிலையில் அங்கே செட் போடப்பட்டிருக்கு, ஐந்தாறு பேர் கிராமத்து கெட்டப்பில் அழுக்கு வேட்டி, சட்டையுடன் நிற்கிறார்கள், கேமெரா லைட்டிங் எல்லாம் ரெடியா? என்று இயக்குனர் சபரீஷ் கேட்கிறார், ரெடி சார்ன்னு குரல் வந்தவுடன், இயக்குனர் கை அசைக்க, வரிசையாக நான்கு டேங்கர்களில் மினரல் வாட்டர் அங்கு கொட்டப்படுகிறது....
இப்பொழுது அந்த இடம் வெள்ளம் சூழ்ந்த குடிசைப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இயக்குனர் ரெடி ஆக்‌ஷன் என்றவுடன்...
அந்த ஐந்தாறு பேரும் ஸ்டாலினிடம் ஏதேதோ பேசுவது போல் பாவனை செய்கிறார்கள்..., அவரும் அதைக் கேட்பது போல பாவனை செய்கிறார். இந்தக் காட்சியை பல்வேறு கோணங்களில் ஸ்டில் மற்றும் மூவி கேமராக்கள் பதிவு செய்கின்றன. எல்லாம் திருப்தியாக முடிந்தவுடன் இயக்குனர் கட் சொல்கிறார்.
இந்தக் காட்சியின் ஒரு படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கின்றீகள். நமக்கு நாமே படத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் காட்சி தான் மேலே நடந்த உண்மைச் சம்பவம்....!!!
கடலூர்ல என்னவோ மழை பேஞ்சுதாமா... அங்க வெள்ளக்காடா ஆயிட்டுதாமா.... மக்கள் வீடுகள் எல்லாம் இடிஞ்சி போயி ரோட்டுல நிக்கிறாங்களாமா... சாப்பாடுக்கே வழி இல்லாம அல்லாடுறாங்களாமா... அமைச்சருங்க, அதிகாரிங்க எல்லாம் அவங்கள வந்து பார்க்கலயாமா.... இவரு மட்டும் போயி பார்த்தாராமா...

யாருட்ட காது குத்துறீங்க...! தமிழ் நாட்டுல பாலாறும், தேனாறும் ஓடுறது எங்களுக்குத் தெரியாதா? தெரியலன்னா போயி ஜெயா டீவி பாருங்கய்யா. தமிழ்நாட்டுல சின்னதா ஒரு தூவானம் போட்டாக் கூட, அமைச்சருங்க ஓடிப்போயி, அங்க இருக்குற மக்களுக்கு அரிசி கொடுக்குறது என்ன? பருப்பு குடுகுறது என்ன? வேட்டி சேலை கொடுக்குறது என்ன? இதெல்லாம் போய் ஜெயா டீவில பாருங்கய்யா.., அதுல தெளிவா காட்டுறாங்க.

அத விட்டுட்டு இப்புடி டிராமா போட்டுக்கிட்டு இருக்கீங்களே... இதெல்லாம் நியாயமா? இதுல ஆயிரம் பேருக்கு காசு கொடுத்து சாலை மறியல் டிராமா வேற போடுறீங்க. அதான் போலீஸ வச்சி அடி அடின்னு அடிச்சி வச்சாங்கள்ல ஆப்பு?!

இனிமே இப்புடி டிராமா கீமா போட்டீங்க... இப்புடித்தான் போலீஸ் லத்தி சார்ஜ் வரும்... ஆமா...!
இப்படிக்கு....

300 வருடங்களாக திமுகவுக்கே வாக்களித்து வந்த பரம்பரையைச் சேர்ந்த இப்பொழுதைய நட்டநடுநிலையாளர்..!!

உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...


உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...

இது எங்க ஊருல ரொம்ப ஃபேமஸான பழமொழி. அதாவது ஆட்சில இருக்குறவங்க, ஏ சி ரூமுல உட்கார்ந்துகிட்டு, அஞ்சு ஐ ஏ எஸ்ஸ அனுப்பினேன், பத்து கலெக்டர அனுப்பினேன்..., போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதுன்னு அறிக்கை மட்டும் கொடுத்தா போதாது...

அப்படி செஞ்சா, நாலு நாள் ஆனாலும் வெள்ளத்துக்கு நடுவுல தத்தளிக்கிற மக்களுக்கு குடி தண்ணி கிடைக்கல, சாப்பாடு கிடைக்கல, உட்கார வீடு கூட இல்ல, மாத்து துணி இல்ல, குழந்தைங்களுக்கு பால் இல்ல, மின்சாரம் இல்ல....

இதையெல்லாம் அங்க போற ஊடகங்களிடம் மக்கள் தெரிவிக்கிறாங்க..., கதறுறாங்க..., ஆனா அதிகாரிகள் மட்டும் இன்னும் அங்க போக முடியலன்னு புலம்புறாங்க.
இது தான் ஆட்சியாளருக்கும் (உடையவனுக்கும்) அதிகாரிகளுக்கும் (மற்றவர்களுக்கும்) உள்ள வித்தியாசம்.

இதோ..........


இப்ப ஆட்சில இல்லன்னாலும், தளபதி மு.க.ஸ்டாலின் களத்துல இறங்கிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரா வந்து நிக்கிறார். இனிமே இந்த அரசாங்கம், இறங்கி வேலை செஞ்சே ஆகணும். அதிகாரிகள் சுற்றிச் சுழன்றே ஆகணும்...!

ஏன்னா?

உடையவர்... கீழே இறங்கி விட்டார். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அதிகாரிகளை விட, மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளருக்குத் தான் பொறுப்பு அதிகம். அவர் மக்களிடம் சென்றால் தான், அதிகாரிகளும் செல்வார்கள், அரசு இயந்திரமும் முழுமையாக வேலை செய்யும்.

ஜெயலலிதா செய்ய வேண்டியதை, மு.க. ஸ்டாலின் செய்கிறார்.

இனி அந்த மக்களுக்கு எல்லாம் தானாகவே, கிடு கிடுவென நடக்கும்.

இது தான் தளபதி எஃபக்ட்...!


Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவுகளும்... ராகுல் காந்திக்கான பாடமும்...!


பீகார் தேர்தல் முடிவுகள் சொல்ற சேதிய வச்சி, யாரு பாடம் படிக்கணுமோ இல்லியோ, ராகுல் காந்தி தான் முக்கியமா படிசிக்கணும்..!

ராகுல் அரசியலுக்கு வந்ததில் இருந்து இப்பொழுது தான் முதல் முறையாக தங்கள் கட்சியின் யதார்த்த பலம் என்ன என்பதை உணர்ந்து, தங்கள் கட்சியை சுறுக்கிக்கொண்டு, பலம்மிக்கவர்களை இணைய வைத்து, அருமையாக கோஆர்டினேட் பண்ணி பீகாரில் வெற்றியை உறுதி செய்திருக்கின்றார்.

இது ஒன்றும் புது ஃபார்முலா கிடையாது. ஏற்கனவே, சோனியா காந்தி கட்சித் தலைவராக அவதாரம் எடுத்து வந்த போது, காங்கிரஸின் நிலை இருந்த கேவலத்தைப் புரிந்து கொண்டு, பிரந்திய கட்சித் தலைவர்களோடு இணக்கமாக இருந்து அவர்களது பலத்தைப் புரிந்து அவர்களுக்கான மரியாதையையும், இடங்களையும் தந்து, பாராளுமன்ற தேர்தல் வரும் போது, அவர்கள் தாமாகவே காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும் நிலையை உருவாக்கி, பிராந்திய கட்சி தலைவர்களிடம் அரசியல் கடந்து பாசமான நட்புணர்வை பலமாக்கி வைத்து இரண்டு முறை காங்கிரஸை அரியணை ஏற்றினார்.

ஆனால் இரண்டாவது முறை காங்கிரஸுக்கு கிடைத்த கூடுதல் பலத்தை மட்டுமே கண்டு அரசியலுக்குள் முழுமையாக நுழைந்த ராகுல் காந்தி, பிராந்தியக் கட்சிகளை எச்சில் துப்பி வம்பிழுத்து எட்டி உதைத்ததன் விளைவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி ஆவதற்கே காங்கிரஸுக்கு அல்லுவிட்டுப்போகும் நிலை ஏற்பட காரணமாயிற்று...!!

அதன் பிறகு இப்பொழுது தான் பீகார் தேர்தலில், சரியான முடிவை எடுத்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி என்ற பேச்சு இந்திய அளவில் எழ வழி வகுத்திருக்கின்றார். இதே நிலைப்பாட்டில் அவர் தமிழக தேர்தலிலும் செயல்பட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.

அதற்கு, தமிழகத்தில், தான் கூட்டணி அமைக்கவிருக்கின்ற....

அதாவது சில்லறைக் கட்சிகளோடு சேர்ந்து யாருமே வெல்ல முடியாத ஒரு கூட்டணியை பொழுது போக்கிற்காக அமைக்காமல்...,

வெல்லக்கூடிய வாய்ப்புள்ள, பாஜகவுக்கு எதிர்நிலையில் உறுதியாக இருக்கக் கூடிய கட்சியோடு பலமாக விட்டுக்கொடுத்து கூட்டணியை இப்பொழுது பேசி முடிவெடுத்து, அக் கூட்டணித் தலைமையோடு இணக்கமாக இருக்கின்ற மாநிலத் தலைமையையும் அமர்த்தி, காங்கிரஸ் அந்த அந்தக் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து இப்பொழுதிலிருந்தே பிரச்சாரம், போராட்டம் எல்லாம் பண்ணுகின்ற அஜெண்டாவை முன்னெடுக்க வேண்டும்

அதை விடுத்து, நாளை கூட்டணி அமைக்கவிருக்கும் கட்சியை கடைசி நாள் வரை திட்டிக்கொண்டிருந்து விட்டு, அல்லது அலட்சியமாக நடந்து கொண்டு, அந்த தலைமையினை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டு, தன் பலத்திற்கு மீறிய தொகுதிகளைக் கேட்டுக்கொண்டு....

இப்படி செய்து கொண்டிருந்தால், தானும் கெட்டு நம்பி வந்தவனையும் கெடுத்தது போலத்தான் ஆகிவிடும். கடந்த 2011 தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்றதன் காரணமே இது தான்.

புத்தியுள்ள புள்ள பொழச்சிக்கும்ன்னு எங்க பக்கத்துல ஒரு சொலவடை உண்டு...!