Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Monday, August 26, 2019

பொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்..!


இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் செய்தியாளர்களைச் சந்தித்து சில சீர்திருத்த அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார்... இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இது ஏதோ திடீரென்று வந்த பிரச்சினை போலவும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சில வரிச்சலுகைகளையும், ஜி எஸ் டி குளறுபடிகளில் ஒன்றிரண்டை சரி செய்வதாக அளித்த வாக்குறுதிகளும் இப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று, பொருளாதார வல்லுநர்கள் பலர் கூறுவது ஊடகங்களால் தற்செயலாக மறைக்கப்படுகின்றனவா? அல்லது திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்றே புரியவில்லை..!

உடல் உபாதைக்காக மருத்தவரிடம் செல்லும் பொழுது அப்பொழுதையை வலியை நீங்கள் உணராமல் இருக்க தற்காலிக மரப்பு மருதைக் கொடுப்பார். ஆனால் அது நிரந்தர தீர்வு அல்ல... அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் அந்த வலி வந்து விடும். திரும்பத் திரும்ப அதே மரப்பு மருந்தைக் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றி உயிரிழக்க நேரிடும்.

ஆனால் அந்த உடல் உபாதை அல்லது வலி எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு தான் எக்ஸ் ரே, ஸ்கேன் போன்றவை எடுக்கப்பட்டு, நோயை கண்டுபிடித்து அதற்கு தேவையான மருந்துகளையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்டால், அந்த நோயிலிருந்தும் உடல் உபாதையிலிருந்தும் நிரந்தரமாக மீண்டு வரலாம்.

அதேப் போன்ற தற்காலிக மரப்பு மருந்து தான் நம் நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் சில சலுகைகள் அறிவிப்பும். அவருக்கே அது நிரந்தர தீர்வல்ல என்று தெரிவதனால் தான் அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும் என்று கூறியிருக்கின்றார்.
வெறும் அறிவிப்புகள் மட்டும் அடுத்தடுத்து கொடுப்பதற்கு முன்பாக பக்காவாக ஸ்கேன், எக்ஸ் ரே எடுப்பது தான் புத்திசாலித்தனம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்தான பெரும் குழப்படியான ஜி எஸ் டியும் தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது ஸ்கேன் பண்ணினால் தான் புரியும்.

மோடியோ, நிர்மலா சீத்தாராமனோ உண்மையாகவே அவர்கள் கூறிக்கொள்வது போல உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் என்றால் எந்த ஈகோவும் இல்லாமல் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எதோ ஒரு ஆர்வத்தில் கூட அவசரகோலத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளையும் மோடி எடுத்திருக்கலாம். அது பலன் தராமல் போய் விட்டது. ஆனாலும் மீண்டும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் முழு பலத்தோடு உங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அந்த மக்களை உங்கள் ஈகோ காவு வாங்கிவிடக் கூடாது..!

நல்லதை நினைத்து அதைச் செய்தோம் ஆனால் அது பலன் தரவில்லை. ஆகவே மாற்று ஏற்பாட்டினை இன்னும் வேகமாகச் செய்கின்றோம் என்று மக்களிடம் வெளிப்படையாகச் சொன்னால், அதை மக்கள் புரிந்துகொள்வார்கள்... ஏற்றுக்கொள்வார்கள்... முன்னை விட இன்னும் கூடுதலாக உங்களை நம்புவார்கள்..!

  • இந்தப் பிரச்சினையின் அடிநாதமே, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது தான்...
  • அதற்கு காரணம் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் மத்தியதர தொழில்கள் பாதிக்கப்பட்டது தான்...
  • அதற்கு காரணம் பண மதிப்பிழப்பும், தவறான ஜி எஸ் டி நடைமுறையும் தான்..!


இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த இரண்டு பிரச்சினைகளில் இருந்தும் (GST & Demonitisation) அவர்கள் தட்டுத் தடுமாறி அதை இதை பிடித்து எழுந்து வரும் நிலையில்....

ஃபைனான்ஷியல் டிஸிப்ளின் என்ற கோஷத்தோடு வங்கித் துறையினர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அதை அவர்கள் இந்த சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் மீது பாய்ச்சியதும் தான், இன்றைக்கு பல லட்சம் MSME தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட காரணமாக அமைந்து விட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உயிரைப் பிடித்து போராடி வந்த அந்த நிறுவனங்கள், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உயிர்விட ஆரம்பித்து விட்டன... அதாவது இழுத்து மூடப்பட்டு வருகின்றன..!

இப்படி மூடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சமாக பத்து முதல் அதிக பட்சமாக 200 பேருக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பினை நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தவை தான்..! விவசாயத்தை விட மிக அதிகமான வேலை வாய்ப்பினை இந்த MSME நிறுவனங்களே மக்களுக்கு வாரி வழங்கி வந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இங்கே வரும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மிக அதிக பட்சமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்தாலே பெரிய விஷயம். ஆனால் அவர்களுக்கு நம் அரசுகள் செய்து கொடுக்கும் நன்மைகளோ ஏராளம்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் இப்பொழுது ஏற்பட்டிருப்பது போல... லாபக்குறைவு ஏற்பட்டால்... நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது ஆட்குறைப்புச் செய்வதாகச் சொல்லும் நிறுவனங்கள் இன்னும் நட்டமடையவில்லை. மாறாக லாபம் குறைந்துள்ளது, அதை ஈடு கட்ட உற்பத்தியைக் குறைத்து பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என்றும் விடுமுறை அளித்து பெஞ்சில் வைப்பேன் என்றும் கூறுகின்றன..!

உடனடியாக அரசும் பணிந்து போய் அவர்களுக்கு பல வரிச்சகலுகைகளையும் தொழில் ரீதியான சில கால அவகாச சலுகைகளையும் (உதாரணத்திற்கு BS 6 வாகனங்கள் விற்பனைக்கான கால அளவை நீட்டித்து உதவுவது) வழங்குகிறது.
உடனே அந்த நிறுவனங்கள் எங்களை மேம்படுத்து ஒரு லட்சம் கோடி ஃபண்ட் ஒதுக்குங்க என்று கேட்கிறார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம், ரூபாய் 1 கோடியிலிருந்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படும் MSME நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி முதலீட்டில்.... கிட்டத்தட்ட 1000 நிறுவனங்களுக்கு மேல் உருவாகும்.

அவற்றின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கின்றன. இதில் இருக்கின்ற பல்வேறு முக்கிய நல்ல பலன்கள் என்னவென்றால்...

  1. இவை அனைத்துமே இந்தியர்களின் நிறுவனங்கள். ஆகவே இதன் மூலம் கிடைக்கின்ற லாபம் முழுவதும் இந்தியாவிலேயே இருப்பதால் இந்திய பண மதிப்பீட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை..!
  2. அடுத்ததாக இந்த நிறுவனங்கள் எதற்கும் அரசு எந்தவொரு சிறு சலுகையும் அளிப்பது இல்லை. அதனால் அரசு பட்ஜெட்டில் இதன் பொறுட்டு எந்த துண்டோ போர்வையோ விழவே விழாது..!
  3. மூன்றாவதாக, இந்த நிறுவனங்களில் படித்தவர்கள், பொறியாளர்கள், ப்ரொஃபஷனல்கள் என்றில்லாமல் கிராமப்புற மக்களுக்கும், ஸ்கில்ட் லேபர்களுக்கும், அதிகமான பெண்களுக்கும்... அதாவது வெகு வேகமாக குறைந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய புகலிடமாக இருக்கின்றன..!
  4. நான்காவதாக, வங்கிகளின் மிகப் பெரிய லாபங்களே இந்த நிறுவனங்களுக்கு அவை வழங்கியிருக்கின்ற கடன்கள் மூலமாகத்தான். இன்னும் சொல்லப் போனால் பெறு நிறுவனங்களுக்கு இந்த வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டிக்கும் இந்த MSME நிறுவனங்களுக்கான வட்டிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
  5. மேலும் இந்த சிறு குறு நிறுவனங்கள் தான் இந்தியாவின் கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை நல்கி வருகின்ற நிலையில்...

இந்த நிறுவனங்களின் அழிவானது பல கோடி வேலை இழப்புக்களையும், அரசுக்கான ஜி எஸ் டி வரி இழப்பையும், வங்கிகளுக்கான வட்டி இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு... புதிதாக பல கோடி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினையும் தடுத்துள்ளது.

இன்றைய பொருளாதார மந்தநிலையை ஸ்கேன் செய்தால்... இது இது இது.... இந்த நோய் தான் நிதி அமைச்சருக்கு கண்ணில் படும்..!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் துவங்கி இந்த கடைசி மூன்று மாததில் நாடு முழுவதும் பல கோடிப் பேர்... குறிப்பாக கிராமத்து மற்றும் இரண்டாம் நிலை நகரத்து சாமான்ய மக்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்... இதைத் தவிர கட்டுமான தொழிலில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியினால் அமைப்பு சாரா தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமானோருக்கு மாதத்தில் 10 நாட்களுக்கான வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது..!

இந்த மக்களை நம்பித்தான் கிராமப்புற வணிகமும்... அதனை நம்பியுள்ள FMCG துறை சார்ந்த Self Employed எனப்படும் பல கோடி சுய தொழில் முனைவோரும் இருந்தனர்..!
அது தான் இப்பொழுது பெரும் பாதிப்புள்ளாகி இருக்கின்றது..!

இவர்கள் கைகளில் பணப்புழக்கம் நின்று விட்ட நிலையில் அல்லது குறைந்து போய்விட்ட நிலையில்...

இந்தியாவின் மதிப்பே அதன் வாங்கும் திறன் தான்...! அதாவது அதன் சந்தை தான்..! அதன் மனித வளம் தாம்..! உழைப்பதற்கும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை... அதேப் போன்று வாங்கி உபயோகிக்கவும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை..!

ஆகவே தான் ஒரு ரூபாய் சாஷே பாக்கெட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் கார்கள் வரை இங்கே ஜஸ்ட் லைக் தட் விற்பனை ஆகின்றன..! அதன் பொருட்டே உலகின் எத்தனை பெரிய நிறுவனமும் இங்கே கால் பதிக்க தயங்குவதில்லை..!

இந்தியாவின் மக்கள் தொகை தான் அதன் பலவீனம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில்... மனித வளம் தான் இந்தியாவின் சொத்து என்பதை 1999க்குப் பிறகு பன்னாட்டு வர்த்தக உலகம் நம்பிற்று... அதை இந்திய ஆட்சியாளர்களும் அங்கீகரித்தனர்..!

இன்றைக்கு அந்த மக்கள்.... இந்தியாவின் அடித்தட்டு மக்கள் உழைபதற்கான வழியின்றி, வாங்குவதற்கான தகுதியின்றி மாறிப் போயிருப்பதன் காரணமே இந்த பொருளாதார மந்தநிலை..!
இதைச் சரி செய்வது தான் இன்றைக்கு மிக மிக அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவை..!

இப்பொழுது உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் MSME நிறுவனங்களுக்கு ஜி எஸ் டியை சரி செய்தால் போதாது,...

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நல்ல நிலையில் செயல்பட்டு வந்து அரசுக்கு வரி கட்டி வந்து... இந்த ஜி எஸ் டி மற்றும் வங்கிக் கடன் பிரச்சினையால் கடந்த ஓராண்டில் இழுத்து மூடப்பட்ட சிறு குறு மற்றும் மத்தியதர நிறுவனங்களை அழைத்துப் பேசி அவர்களுக்கும்...

வங்கிக் கடனில் ரீ ஸ்ட்ரக்சர் மற்றும் தேவைப்பட்டால் ரீ ஃபைனான்ஸிங், வட்டித் தள்ளுபடி அல்லது அதற்கான விடுமுறைக் காலம் என்று அறிவித்து... ஜி எஸ் டி தொடர்பான அத்தனை பிரச்சினைகளையும் இலகுவாக்கி...

அவர்கள் இருந்தால் தான், தொழில் செய்தால் தான் அரசுக்கு வரி வருமானமே வரும் என்ற உண்மையை உணர்ந்து அரசாங்கம் அவர்களோடு இணைந்து பயணிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்..!

இந்த நாட்டில் மீண்டும் சிறு குறு மற்றும் மத்திய தர நிறுவனங்கள் புத்தெழுச்சியோடு செயல்பட துவங்கினால் மட்டுமே இந்தியாவும் இந்தியர்களும் செழிப்படைய முடியும்..!
கொக்கரக்கோ சௌமியன்
25-08-2019

Monday, February 18, 2019

திமுக - காங்கிரஸ்.... வெற்றிக் கூட்டணியா?!


திமுக - காங்கிரஸ் என்பது வெற்றிக் கூட்டணியா?!

இந்த கேள்விக்கான பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியிடம் தான் இருக்கின்றது. 

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் எடுத்து வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஃபுல் ஸ்வீப் அடிக்கும் என்றே தெள்ளத் தெளிவாக பதிவு செய்தன. ஆனால் ஓரிரு நாட்கள் முன்பாக டீவி விவாதம் ஒன்றில் பேசிய சுமந்த் சி ராமன் இரண்டு மாதங்கள் முன்பாக அப்படியொரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு... என்று பல்வேறு காரணங்களை அடுக்குகிறார். அவர் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது எனினும், அது மாதிரியான ஒரு ஃபீல் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு, அது மக்கள் மனதில் பதிவதையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஆகவே, இக்கட்டுரைத் தலைப்புக் கேள்விக்கான விடை காண, தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இக் கூட்டணி உருவான கால கட்டத்தையும் அதிலிருந்து இன்று வரையிலான பதினான்கு வருட கால சிறு வரலாற்று நிகழ்வுகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து அலசினாலே போதும். அதை தான் இபபொழுது நாம் செய்யப் போகிறோம்.




அது 2004 பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளின் உச்சத்தில் தேர்தல் கமிஷன் உட்பட அனைத்து கட்சிகளும் இருந்த நேரம். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால்  வேரோடும் வேரடி மண்ணோடும் இந்திய அரசியலில் இருந்து பிடுங்கி எரியப்பட்டுவிடும் என்ற நிலை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற விவாதப் பொருளுக்குள் கூட ராகுல் வராத நேரமது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்கா தான் அரசியலுக்கு வருவார் என்று கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட காலம்.

கலைஞர் முயற்சியால் வி.பி.சிங் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய முண்ணனியிடம் தோற்றுப் போய் ராஜீவ் காந்தி பறிகொடுத்த காங்கிரஸ் ஆட்சி,  ராஜீவ் இறப்பு அனுதாப அலையில் 91 -96 இல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அது நரசிம்மராவின் செயல்பாடுகளால் ஒரு உறுதியான தலைமையை காங்கிரஸுக்கு காட்ட முடியாமல் காங்கிரஸையும் பலவீனப்படுத்தி...  அதன் பிறகு எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிக்கே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செல்வாக்கான கட்சிகளை கூட்டணிக்காக தேடி அலையும் பரிதாபமான நிலை சோனியா காந்திக்கு. இந்த நிலையில் தான் தமிழகத்திலிருந்து தி.மு.க வின் சார்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக தெள்ளத்தெளிவான குரலை அழுத்தம் திருத்தமாக எழுப்புகிறார் கலைஞர்..! 

அவர் சொன்ன அந்த மந்திரச் சொல் தான்...   

இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க..! 

அதுதான் ஆரம்பம், அதன் பிறகு எல்லாமே அமர்க்களம் தான் காங்கிரஸுக்கு..!
2004 ல் காங். க்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த கலைஞரின் குரலாகட்டும், தேர்தலுக்குப் பின் காங். தலைமையில் ஆட்சி அமைய புதுடெல்லி சென்று தங்கி அவர் செய்த அரசியல் அதிரடி சித்து வேலைகளாகட்டும், பின்னர் சில பல கூட்டணி கட்சிகளால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னுடைய உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி அதை முறியடித்த பாங்காகட்டும், இவைகளெள்லாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிறந்த நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தித் தந்ததோடு... சோனியாவையும் இந்திய ஆட்சி அதிகாரத்தின் ஏக போக தலைவியாக்கியது. 

காங்கிரஸின் இந்த வளர்ச்சி நிலை தான் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டு, புலிகள் அழிப்பு, பிரபாகரன் இழப்பு என்று போய் கடைசியில் முள் வேலி சித்ரவதை வரை கொண்டு வந்து நிறுத்தியது! இது தான் ஈழத் தமிழர்களின்/ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

அடுத்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வரலாற்றின் இரண்டாவது அத்தியாயம் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு ஆரம்பமாகிறது. இதில் தான் நம்முடைய முதல் பாரா கேள்விகளுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தின் 'நெகடிவ் ஹீரோ' தான் ராகுல். அவரைச் சொல்லி குற்றமில்லை..., 

கடந்த முறை அதிகமான கட்சிகளின் துணை மற்றும் வெளி ஆதரவோடு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், இந்த முறை குறைந்த அளவிலான நல்ல (நெருக்கடி கொடுக்காத) கட்சிகளுடைய ஆதரவோடு நிம்மதியான ஆட்சி செய்கிறது.  இந்த நிலையில் தான் ராகுலுக்கு கட்சியை வளர்ப்பதற்கான முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்படுகிறது. 

கூட்டணி ஆட்சி அமைக்கவே அவரது அன்னை சோனியா மாநிலக் கட்சிகளோடு எந்த அளவிற்கு கீழிறங்கி வந்து சமரசம் செய்து கொண்டார். அவருடன் அணி சேர்ந்த திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் அந்த  கூட்டணி ஆட்சியை வெற்றிகரமான ஆட்சியாக மாற்றிய கலைஞர் போன்றவர்கள் எப்படி அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதையெல்லாம் ராகுல் அறிந்திருக்கவில்லை.

ராகுலுக்கு முன்பாக இருந்த கனவு / ஆசை எல்லாம் காங்கிரஸை தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவாக்கி தனிக்கட்சி ஆட்சியை மத்தியில் கொண்டு வர வேண்டும் என்பது தான். துரதிருஷ்டவசமாக அந்த கனவுக்கு தடையாக இருப்பது தங்கள் நண்பர்களான பிராந்தியக் கட்சிகள் மற்றும் கலைஞர் என்று அவர் நம்பியதன் விளைவு தான் மீண்டும் காங்கிரஸின் மாபெரும் வீழ்ச்சிக்கும், பாஜகவின் தனிக்கட்சி ஆட்சிக்கும் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது..!

தமிழகம் வந்தால் கலைஞரை அவர் சந்திப்பதில்லை அதனால் கூட்டணிக்குள் குழப்பம் என்றார்கள்..!   அது தவறு, அவர் கலைஞரை சந்திக்காததால் தான் கூட்டணி அப்பொழுது உடையாமல் இருந்தது! தமிழகத்தில் இந்த வெற்றி கூட்டணியை விளங்காத கூட்டணி லெவலுக்கு கொண்டு சென்றதில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது. 

2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கூட்டணி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றதற்கு காரணம் இலங்கை பிரச்சினையில், சம்பந்தப்பட்ட பிராந்திய கூட்டணி கட்சியான திமுகவின் வழிகாட்டுதல் / கோரிக்கைகளை மதிக்காமல் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தாந்தோன்றித்தனமான வெளியுறவு கொள்கை தான். அதற்கு மேல் திமுக அழுத்தம் கொடுத்தால், அதிமுகவின் 12 எம்பிக்களின் ஆதரவை ஜெயலலிதா அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்ததை ராகுல் காந்தி பயன்படுத்த தயாரானதும் தான்..! 

கூட்டணி தர்மம் மற்றும் இன்னபிற கருமாந்திர காரணங்களுக்காக இப் பிரச்சினையில் மெளனம் காத்ததற்கான விலையை தி.மு.க வும் கொடுத்தது. இல்லையென்றால், 2009இலும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது அடித்திருக்கும்..!

அதன் பிறகு மற்ற கூட்டணி பிராந்திய கட்சிகள் மீதான இவரது ஆட்டம் ஆரம்பமாக... 

காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதகளப்பட்டு, பீகாரில் புரட்டி எடுக்கப்பட்டு, கேரளாவில் கலகலத்து, குஜராத்தில் கொஞ்சம் கூட முன்னேராமல்... இப்படியே இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.  அவர் தொட்டது எதுவுமே துலங்கவில்லை என்றும், பப்பு என்ற பட்டப்பெயரும்  அவரை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையே நிலை குலையச் செய்து விட்டது..!

அதற்கெல்லாம் பிறகும் கூட....   இவருக்கு திமுக மீது என்ன கோபமோ.....  இவர் அனுமதி கொடுத்ததாலோ அல்லது அடக்கி வைக்காததாலோ, 2011 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக காங்கிரஸ்  (தரு)தலைகள் அடித்த கூத்துக்கள் தான் அந்த தேர்தலில் இக் கூட்டணியின் வெற்றியை பதம் பார்த்து அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றது.  ஈவிகேஎஸ். இளங்கோவனில் ஆரம்பித்து, தனித்து ஒரு தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க அருகதையற்ற தமிழக காங்கிரஸ் பிரதான கோஷ்டியின் தலைவர் வாசன், அவருடைய அடிப்பொடி இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், குபீர் குபீர் என பொங்கி அடங்கும் கார்த்திக் சிதம்பரம் இப்படியாக இன்னும் பல கோமாளிக் கூட்டம் வரை அடித்த கூத்துக்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் விபரீத நிலையை இக் கூட்டணிக்கு ஏற்படுத்தி விட்டன.



அப்பொழுது சீமான் என்ன காரணத்திற்காக தி.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க வை ஆதரிக்கிறார் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இந்த த(வளை)லைகள் காங்கிரஸை அ.தி.மு.க அணிக்கு கொண்டு செல்ல முயன்றது,  அகில இந்திய காங். க்கு பலம் பொருந்திய தலைமை ஒன்று இருக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. 

தென் தமிழகத்தில் தமது கட்சியின் மூன்றாம் கட்ட பேச்சாளர் ஒருவர், இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறி பேசினார் என்பதற்காக கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தி.மு.க தலைமை எங்கே..?!  தமக்குத்தாமே குழி பறிப்பவர்களை தும்பை விட்டு வாலை கூட பிடிக்க முற்படாத காங்கிரஸ் தலைமை எங்கே?

இன்றைக்கு  கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே...  அயோக்கிய அதிமுக அரசை அனைத்து ஜனநாயக படுகொலைகளையும் செய்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் மோடியின் பாஜகே எங்கே....?!  

ஆனால் பொய்யான 2ஜி வழக்கை இஷ்டத்திற்கு ஆட வைத்து....  அதன் விசாரணையை மேல் தளத்திலும்...,  கூட்டணி பேச்சுவார்த்தையை கீழ் தளத்திலும் மேற்கொள்ளச் செய்த ராகுலின் ப. சிதம்பரம் வகையறாக்கள்  எங்கே..?!  அதைச் சொல்லித்தானே...  இன்னமும் கூட அனைத்து ஊடக விவாதங்களிலும் திமுக எதிர்ப்பாளர்கள் திமுகவினரை தலைகுனிய வைக்கின்றார்கள்..!

அதன் பிறகு...  அதாவது 2011 தேர்தலுக்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக நடப்பது எல்லாம், அனைவருக்கும் சமீப காலம் என்பதால் நன்றாக நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். 

ராகுல் காந்தி அதுவரை செய்து வந்த காரியங்கள் அனைத்தும் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலையில் மொத்தமாக வந்து இறங்கியது. அதுவரை காங்கிரஸுக்கு ஆதரவளித்து வந்த பிராந்திய கட்சிகளில் கிட்டத்தட்ட திமுக தவிர்த்து ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பாஜகவின் தேசிய முண்ணனி கூட்டணிக்கோ அல்லது தனித்து நிற்கவோ தயாராகி தேர்தலை சந்திக்க...    காங்கிரஸோ அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் கூட எம் சீட்டை பெறாமல் போன சோகம் தான் நிகழ்ந்தது. 

காலம் கடந்து வந்த கோபத்தில்...  திமுகவும் கூட கொள்கை என்கிற நிலைப்பாட்டில் பாஜகவோடு கூட்டணி அமைக்கா விட்டாலும், காங்கிரஸை கழட்டி விட்டு தனியாகவே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது.  

இந்த அளவிற்கான ஃப்ளேஷ் பேக் போதும் என்றே நினைக்கிறேன்..!  இனி தலைப்பு மேட்டருக்கு வருவோம் 

தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்தில், தான் எடுத்த வியூகங்கள் அனைத்துமே வீணாகிப் போய்...  தன்னுடைய அன்னை தன்னை மிக மிக வறுத்திக் கொண்டு, கீழிறங்கி சமரசங்கள் செய்து மீண்டும் கட்டமைத்த காங்கிரஸ் இயக்கத்தை  தன்னுடைய தவறான வியூகம் அதல பாதாளத்திற்கு தள்ளி விட்ட அந்த பெரும் தோல்வியானது ராகுல் காந்தியை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டது.!  

மெல்ல மெல்ல அவருக்கு அரசியலும்...  அதன் சித்தாந்தமும், மக்களும், நண்பர்களும், எதிரிகளும், துரோகிகளும் புரிய ஆரம்பித்தார்கள்.  யாரை மதிக்க வேண்டும்....  எவர் அலட்சியப்படுத்தும் தகுதி கொண்டவர் என்பதெல்லாம் அவருக்கு புரிய ஆரம்பித்தது..!

விளைவு....  அடுத்ததாக வந்த பீகார் சட்டமன்ற தேர்தலில்,  மிக மிக கீழிறங்கி, தொகுதி எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், தான் அமைத்த அணி வெல்ல வேண்டும்....  அதாவது காங்கிரஸ் கூட்டணி வென்றதாக இந்தியா முழுவதும் செய்தி பரவ வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். காங்கிரஸுக்கு அதில் தனிப்பட்ட வகையில்...  அதாவது எம் எல் ஏக்கள் கிடைப்பதில் எந்த சிறு லாபமும் இல்லையென்றாலும், அகில இந்திய அளவில் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு உயிர் தண்ணீர் ஊற்றி துளிர்த்தெழச் செய்த அந்த பெரும் பலன் கிடைத்தது..!

அதேப் போன்று தமிழக 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவோடு நிறைய சமரசங்கள் செய்து....  அதாவது முன்பு போல 63 தொகுதிகள் வேண்டும், இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எல்லாம் எடுக்காமல், திமுக கொடுத்த 42 தொகுதிகளில் நின்று.... அக்கூட்டணி முன்பிருந்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.  ஆட்சியைப் பிடிக்க வெறும் 1.1 சதவிகித வாக்குகளே அக்கூட்டணிக்கு குறைவாகிப் போனதற்கு வைக்கோ, திருமா, கம்யூனிஸ்ட்டுகள் அமைத்த மக்கள் நல கூட்டணி என்கிற ஜெயலலிதா நலச் சங்கமும்...  தேர்தலுக்கு முந்தின தினம் 144 போன்று தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படுத்தி அரங்கேற்றப்பட்ட அட்டகாசமான பண விநியோகமும் தான் காரணம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று...!

அதற்குப் பிறகு ஜெயலலிதா மரணமும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் அடித்த கூத்துக்களும். சசிகலா சிறை சென்றதும், அதிமுக நெட்டுக்குத்தாக பிளவுபட்டு தினகரன் தலைமையில் சென்றிருப்பதும், மக்கள் நல கூட்டணி திமுகவோடு தோழமையாகியிருப்பதும், விஜயகாந்த் மிகப்பலமாக பலவீனப்பட்டுப் போயிருப்பதும்.....  அனைத்திற்கும் மேலாக அதைச் செய்வார், இதைச் செய்வார் என்று பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட மோடி, முழுமையாக ஏமாற்றமளித்ததும்....

இப்படியாக அனைத்து நிகழ்வுகளும், அடுத்ததாக எந்த தேர்தல் வந்தாலும் அது திமுக - காங்கிரஸ் கூட்டணியை அமோகமாக வெற்றியடையச் செய்யும் என்ற பொதுப்புத்தியை ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனதிலும் ஆழமாக பதிய வைத்து விட்டது. 

இதற்கு முன்னதாக கலைஞர் உடல்நலம் குன்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில்...   அதற்கு முன்பு பத்து ஆண்டுகள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற ஒரு மூத்த அரசியல் தலைவரை ஒரே ஒரு முறை கூட அவர் இல்லத்திற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ வந்து நேரில் சந்தித்திராத....  இன்னும் சொல்லப்போனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக கட்டிட திறப்பு விழாவுக்கு சென்னை வந்திருந்த பொழுது... அவர்கள் உடன் வந்திருந்தும்,  விமானநிலையத்திலிருந்து நேரடியாக காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அந்த ராகுல் காந்தி..... ஓராண்டுக்கு முன்பாகத்தான் முதல் முறையாக கலைஞரை நேரில் வந்து அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெறுகின்றார். 



அதன் பிறகு தான் பப்பு என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தி....  அரசியல் அரங்கில் பாஜகவுக்கு பெரிய ஆப்பாக மாறிப்போனார்.  அதன் பிறகு ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அவர் ஆடிய தனி ஆவர்த்தனம் தான் அவரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்..!  பின்பு குஜராத்தில் பாஜகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, காங்கிரஸை வளர்த்திருக்கின்றார்...  கர்நாடகவில் பாஜகவின் தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியிலும் மிகப் பெரிய சமரசம் செய்து பாஜக ஆட்சி அமைப்பதை தவிடு பொடியாக்கியிருக்கின்றார். சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மூன்றில் பாஜகவை விரட்டி அடித்து காங்கிரஸை வெற்றி வாகை சூட வைத்துள்ளார். 

ராகுலின் கடந்த ஓராண்டு ப்ராக்ரஸ் தான்....  தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று மார்தட்டிக் கொண்டிருந்த பாஜகவை மெகா கூட்டணிக்காக எடப்பாடி காலில் எல்லாம் விழ வைத்திருக்கின்றது..!

இந்த மாற்றம் ஒரு மாயை போல திடீரென்று ஒரே வருடத்திற்குள்ளாக எப்படி நிகழ்ந்தது?!  அவர் கூற்றின் வாயிலாகவே இதற்கான விடையை நாம் கண்டு பிடித்துவிடலாம். ஆம், கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது,  தலைவர் கலைஞரை முதன் முதலாக சந்திக்க அவர் இல்லம் செல்கின்றேன்.  நான் எண்ணியிருந்தேன் அதிக காலம் முதல்வராக இருந்தவர், மத்திய ஆட்சியில் வெகுகாலம் பங்கேற்ற கட்சித் தலைவர், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி....  அவரது இல்லம்....  எப்படியெல்லாமோ இருக்கும் (ராகுலின் பாடி லாங்குவேஜ்...  அந்த இல்லம் மும்பையில் உள்ள அம்பானி வீட்டினைப் போல் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல) என்று எண்ணியிருந்தேன்.....    ஆனால் அவரது இல்லமோ, ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து மனிதரின் வீட்டினைப் போன்று, நிறைய வீடுகள் அடுத்தடுத்து இருக்கின்ற ஒரு தெருவில்  இருக்கின்ற இன்னொரு வீடு போல் தான் இருந்தது என்கிறார். அவர் மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார், மக்களுக்காகவே போராடியிருக்கின்றார்.....  இப்படியாக ராகுல் காந்தி அவர்கள் வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டே சென்று.... 

அதற்கு முன்னதாக கலைஞர் பற்றி தனக்கு இருந்த மதிப்பீடு சுத்தமான பொய்...  அன்று அவர் பார்த்த கலைஞர் என்பது தான் நிஜம் என்று உணர்ந்தவராய்...  அவரைப் போலத்தான் இனி தன்னுடைய அரசியலை முன்னெடுப்பேன் என்று பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே அறிவித்தார்..!

கலைஞர் தரிசனத்திற்குப் பிறகு ஞானம் பெற்று வெற்றிகளை ஈட்டும் தகுதியோடு இருக்கும் அந்த ராகுல் காந்தியைத் தான் அன்றைக்கு அதே மேடையில் திமுகழக தலைவர் ஸ்டாலின் அவர்கள்...  வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக தங்கள் கட்சியின் சார்பாக அறிவித்தார். காங்கிரஸே கூட இன்று வரையிலும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்குகின்ற ராகுலை...  ஸ்டாலின் அவர்கள் பகிரங்கமாக அன்று அறிவித்தார். அதன் பிறகு காட்சிகள் தேசிய அளவில் மெல்ல மெல்ல மாறின... முதலில் எதிர்ப்புகள் ஆங்காங்கே முளைத்தாலும்...  இன்றைக்கு ஆந்திரா, கர்நாடகா, பீகார் என்று ஒவ்வொன்றாக அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள துவங்கிவிட்டனர்..!

ஆனால் அதற்கான விதையைப் போட்டது திமுக..!

இப்பொழுது வருவோம் இந்த கட்டுரையில் தலைப்புக் கேள்விக்கு...!

திமுக - காங்கிரஸ் இம்முறை வெற்றிக் கூட்டணியா என்றால்...   ஆம் அது வெற்றிக் கூட்டணி தான்....  ஆனால் அது ராகுல் காந்தியின் செயல்பாட்டில் தான் ஒழிந்துகொண்டுள்ளது என்பது தான் நிதர்சனமான பதில்..!

ஆம்...  கடந்த சட்டமன்ற தேர்தலையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில்  52 சதவிகித இடங்களில் (89/173) வென்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸோ  தான் நின்ற தொகுதிகளில் வெறும் 19 சதவிகித இடங்களில் மட்டுமே (9/42) வெற்றி பெற்றுள்ளது. 

இன்னுமொரு கணக்கையும் கூட நாம் பார்க்கலாம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில் வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை விட 1.1 சதவிகிதம் குறைவாகவே காங்கிரஸ் ஓட்டு வாங்கியுள்ளது.  ஆகவே அதிமுக ஆட்சி அமைக்க ஏதுவான கூடுதல் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸிடமிருந்து பறிக்கப்பட்டவையே..!

இந்த இடத்தில் ராகுல் காந்தி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.  பாஜகவுக்கு கூட தமிழகம் முழுவதும்  கட்சி அமைப்புக்கள் உண்டு. ஊராட்சி மற்றும் வார்டு கிளைக்கழக அளவில் இல்லை என்றாலும் கூட பகுதி, ஒன்றிய, நகர அமைப்புக்கள் வரையிலும் உண்டு. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளிலும் பூத் கமிட்டியும் போட்டுள்ளது. இது தவிர  பாஜகவுக்கு அனைத்து வகைகளிலும் உதவிட ஆர் எஸ் எஸ், இந்துமுண்ணனி போன்ற சார்பு அமைப்புக்கள் இருக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி இருக்கின்றது, தேர்தல் கமிஷன் இருக்கின்றது, பணம் இருக்கின்றது, ஊடகங்கள் இருக்கின்றது..!

இவை எதுவுமே காங்கிரஸுக்கு கிடையாது. தமிழகம் முழுவதும் கட்சிக்கான அமைப்போ, தொண்டர்களோ கூட கிடையாது.  அவர்கள் எந்த தொகுதியில் நின்றாலும், முழுக்க முழுக்க கூட்டணிக் கட்சியான திமுகவை மட்டுமே நம்பி நின்றாக வேண்டும். திமுகவினர் இல்லாமல் அவர்களால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது. 

ஆனால் இவ்வளவு பலமும் இருக்கின்ற பீகார், கர்நாடகாவிலேயே கூட நிறைய விட்டுக்கொடுத்து நிற்கும் போது... தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கின்ற நிலையில் கூட்டணி விவகாரங்களில் ராகுல் காந்தி எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. 

ஒரு மாதம் முன்பு வரையிலும் கூட நீங்கள் இந்த மனநிலையில் தான் இருந்தீர்கள்.  அப்பொழுதெல்லாம் காங்கிரஸின் எந்த தமிழக தலைவரிடமிருந்தும் சிறு முனுமுனுப்புக் கூட வந்திருக்கவில்லை. மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் நம்பினர் இது உடைக்க இயலாத கூட்டணி என்று. 

ஆனால் இன்றைக்கு புதிய தலைவர் கே.எஸ். அழகிரி, திமுகவை கமல் விமர்சித்த பிறகும் அவரை கூட்டணிக்கு அழைத்ததும், இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று அழைப்பதும்...  வசந்த குமார், எங்களுக்கு 16 சீட்டுக்கள் வேண்டும் என்று கேட்பதும், இந்த கூட்டணி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றது. அதை தெளிவாக செய்து முடிக்க பாஜக ஆதரவு ஊடகங்களும் அற்புதமாக துணை போகின்றன. 

இன்றைக்கு இந்திய அளவில் மற்ற கட்சித் தலைவர்களை விட...  இன்னும் ஒரு படி தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களை விட...   காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியும் அதில் நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் உறுதியாகச் சொல்லக் கூடிய தலைவர் திரு மு.க. ஸ்டாலின் மட்டுமே.  அவர் தன்னுடைய நேர்மையை இன்னும் ஒரு படி மேலே சென்று....  ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கூட நாங்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்  என்று போஸ்ட் போல் முடிவையும் கூட பகிரங்கமாக அறிவித்து விட்டார். 

அப்படிப்பட்ட தெளிவான பாஜக எதிர்ப்பாளரைப் பார்த்து மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சியின் தலைவரைப் பார்த்து மோடி - அமித்ஷா கூட்டணியே அலறுகின்றது. ஆகையால் அவர்கள் வகுத்த திட்டமே, திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றாலும் கூட திமுக அதிக இடங்களில் வெல்லக் கூடாது என்பதாகும்..!

ஆனால் கள யதார்த்தமோ, வாக்கு வங்கி கூட்டல் கழித்தல்களோ சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், திமுக எத்தனை தொகுதிகளில் நின்றாலும் வெல்லும் என்பது தான். ஆகவே தான் பாஜக காங்கிரஸை பல்வேறு வகைகளில் உசுப்பேற்றி விட்டு, மற்ற சிறு, குறு கட்சிகளையும் பேச வைத்து திமுக நிற்கின்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகின்றது. அதற்காகவே அதிமுக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைப்பது போல தோற்றத்தை உருவாக்கி, அந்த அணி அமைந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்க்கு பலத்த சவாலாக இருக்கும் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி....  அதைக் கொண்டு திமுகவை குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில்  போட்டியிட வைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு...  மோடி - அமித்ஷா கூட்டணி அதை செயல்படுத்தியும் வருகின்றது..!

உங்களுக்கே கூட அந்த சபலம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் மாநில தலைவர்கள் திமுகவை வளரவிட்டால் மத்திய ஆட்சியில் நம்மை ஆட்டிப் படைப்பார்கள் அதனால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உங்களை வளைத்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், திமுகவுக்கு கிடைக்கின்ற அதிகப்படியான எம்பிக்கள் தான் மாயாவதி, முலாயம்சிங், மம்தா போன்றவர்களுக்கு கடிவாளம் போட்டு இழுக்க உங்களுக்கு உதவும்.  திமுகவின் எண்ணிக்கை குறைந்து மேற் சொன்னவர்களின் எண்ணிக்கை கூடினால், அது உங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருக்காது. அப்படியே அமைந்தாலும் அவர்களிடம் தினம் தினம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க கூட வழி வகுத்துவிடும் அபாயமும் இருக்கின்றது..!

ஆகவே மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய ராகுல் காந்தி செய்ய வேண்டியது எல்லாம், தமிழக கூட்டணி விவகாரங்களை முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலினிடமே விட்டு விடுவது தான்.  நீங்கள் எதையும் செய்யுங்கள் ஆனால் நாற்பது தொகுதிகளையும் சிந்தாமல் சிதறாமல் கொண்டு வாருங்கள் என்ற நிபந்தனையோடு, திமுகவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு,  நிம்மதியாக மற்ற மாநிலங்களில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவது தான்..!

இதைச் செய்தாலே திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி தான்..!


Friday, February 15, 2019

பண மதிப்பிழப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையா?!

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 45 இந்திய வீரர்களுக்கு #வீரவணக்கம்

மோடி ஆட்சி.... அது சொன்ன ஸ்வாட்ச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தமாக்குவது, ராமர் கோவில் கட்டுவது, கருப்பு பணத்தை ஒழித்து பொருளாதாரத்தை சீரமைத்து மேம்படுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது, தொழில்துறையை வளமாக்கிட ஜி எஸ் டியை நடைமுறப்படுத்தியது, மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவந்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்து இன்னும் ஒரே ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட கண்ணுக்கு எட்டின தூரம் தெரியாம செஞ்சது, 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் மட்டும் நாட்டிட்டு நிதி கொடுக்காம நொட்டினது....
இப்படி நாலே முக்கால் ப்ளஸ் வருஷத்துல அவர்கள் செய்வதாகச் சொன்ன ஒரே ஒரு திட்டத்தைக் கூட வெற்றிகரமாக நடத்திடாமல், அல்லது மக்கள் தலையில் மண் அள்ளிப் போடுகின்ற அளவில் தான் நடைமுறைப்படுத்தியிருந்தாலும்...
இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் சமரசமே செய்து கொள்ள மாட்டார்கள் என்றே எல்லோரும் நம்பியிருந்த நிலையில்.... அந்த நம்பிக்கையும் நேற்று தர்ந்து விட்டது..! அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தீவிரவாதிகள்... பணம் கிடைக்காமல் தீவிர வியாதியில் சிக்கிக் கொண்டார்கள் என்ற பிரச்சாரமும் பொய்துப் போயிருக்கின்றது..!
அங்க அடிப்பட்டு 45 (எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை) ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியிருக்கின்றார்கள்...
பிரியங்கா காந்தியோ இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே...
நிதி அமைச்சர் ஃபியூஷ் கோயல்... தேர்தல் கூட்டணி பற்றிப் பேச வந்துள்ளேன் என்று சிரித்தவாறே பேட்டி கொடுக்கின்றார்..!
திமுக பங்கேற்ற வாஜ்பாய் ஆட்சியில் கூட இந்தியா ஒளிர்கிறது என்று கம்பிரமாக தேர்தலுக்கு முன்பாக விளம்பரம் கொடுத்தார்...
அதற்கு ஏற்றார்போல, இன்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றாக இணைத்த தங்க நாற்கர சாலை ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
(ஒரே இந்தியா என்று சொல்லி, இந்தியாவையும் இந்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் இப்படியான திட்டங்கள் தான் உதவும்..! அதை விடுத்து ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே சாமி, ஒரே பண்டிகை, ஒரே உடை.... இப்படியெல்லாம் பேசினால் உடைந்து தான் போகும்... இல்லை என்றால் அப்படி பேசுபவர்களுக்கு இந்தியர்களின் உதை தான் கிடைக்கும்..!)
கடும் நிதி நெருக்கடியிலும், உலக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தும்..., போக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தி பாகிஸ்தானை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கே உதறல் கொடுத்து, இந்தியர்களை கொஞ்சம் கம்பீரமாக ஃபீல் செய்ய வைத்து, அந்த ஃபீலுங்குக்காகவே உலக பொருளாதார தடையால் ஏற்பட்ட சிறு கஷ்டங்களைக் கூட இஷ்டப்பட்டு ஏற்க வைத்தார்..!
அப்படிப்பட்ட வாஜ்பாயின் ஆட்சி மீண்டும் வர முடியாமல் போனதற்கு காரணமே, அந்த ஆட்சிக்காலத்தின் கடைசி ஓராண்டில் அப்போதைய ஆர் எஸ் எஸ் டார்லிங்கான அத்வானியை அனைத்திலும் மூக்கை நுழைக்க அனுமதிக்கப்பட்டதால் தான்..!
அதனால் தான் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அக்கூட்டணியில் இருந்து விலகி சோனியாவால் ஒன்றிணைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அடுத்த பத்து ஆண்டு காலம் ஆட்சி ஆளும் வாய்ப்பினைப் பெற்றன..!
மீண்டும் ஒரு முறை இந்தியர்கள் ஆர் எஸ் எஸ் டார்லிங்கான மோடிக்கு முழு அதிகாரத்துடன் ஆட்சி ஆளும் வாய்ப்பினை நல்கிய நிலையில்... அவர்கள் அனைத்து துறையிலும் கோட்டை விட்டு, இப்பொழுது ஆட்சி முடிய முப்பது நாட்களே இருக்கின்ற நிலையில் கையை பிசைந்து கொண்டு நிற்பது... இந்தியாவை உண்மையாகவே நேசிக்கும்.... இந்தியர்கள் யாராலும் ஏற்க முடியாத ஒன்று..!
தேர்தலை மனதில் வைத்து இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது, இந்தியர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு பதற்றத்தை ஏற்படுத்துவது எல்லாம், இந்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை தரவே தராது..!
புதிய தலைமுறை போன்ற பாஜக ஆதரவு ஊடகங்கள் இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் கொந்தளிப்பது போல செய்திகள் வெளியிடுவது.... இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத செயல்..!

Monday, January 14, 2019

திமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா?!


இன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரும்.....

திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி.....

என்று ஒரு கான்செப்ட்டை பலமாக முன்வைக்கின்றனர்.
இதை திமுக மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்து பார்ப்பனர்களை விட.... ஆர் எஸ் எஸ்ஸை விட.... பாஜகவினரை விட.... சங்கிகளை விட.... சங்கிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட பார்ப்பனரல்லாத பக்தாஸை விட....

ஒருபடி மேலே சிந்தித்து செயல்பட்டு முறியடிக்க வேண்டும்..!
ஏனெனில் வாக்கு வங்கி என்பது ஆதரவுக்கானது..! எதிர்ப்பு வாக்கு வங்கி என்ற பதம் முதன்முறையாக இப்பொழுது உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த... அசைக்க முடியாத ஆதரவு வாக்கு வங்கி இருக்கும். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை என்பது மட்டுமே உருவாகும். அந்த அலையானது பொதுவாக அந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடும்..!

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 91 தேர்தலில், திமுக சொல்லித்தான் விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்று மக்களை நம்ப வைத்து... திமுகவுக்கு எதிரான அலையை உருவாக்கி முதன் முறையாக பார்ப்பன லாபி அதிமுகவின் பார்ப்பன முகமாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைத்தது..!

ஆனால் இந்த தேர்தலில் அப்படியான திமுக எதிர்ப்பு அலை என்பது எதுவுமே இல்லாத நிலையில்.....

ஆளும் அதிமுகவிற்கும், மோடிக்கும் எதிரான அலை மட்டுமே மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருக்கின்ற நிலையில்....

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திமுக எதிப்பு வாக்கு வங்கி என்ற ஒரு இல்லாத கான்செப்ட்டை ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் முன்னெடுக்கின்றது..!

திமுகவின் எதிர்ப்பு வாக்கு வங்கி என்பது வெறும் மூன்று சதவிகிதமே உள்ள பார்ப்பனர் வாக்குகள் மட்டுமே..! அந்த எதிர்ப்பு வாக்கு வங்கியை மார்பில் தாங்கிய எதிரி ஆயுதத்தின் வடுக்கலாகவே திமுக சந்தோஷமாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும்..!

ஆனால் பார்ப்பனரல்லாதோரை திமுகவின் எதிர் நிலைப்பாட்டில் தொடர்ந்து நிறுத்தி... அதை நிரந்தர திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியாக நிறுவ முனையும் இந்த சதியினை திமுக முளையிலேயே கிள்ளி எரிய திமுகவும் மிகப் பலமாக தனது பிரச்சாரத்தினை முன்னெடுத்து விட்டதாகவே தெரிகிறது..!

இணையதள திமுகவினரும்.....  திமுக ஐடி விங்கும்.....கலைஞர் டீவியும்.... ஒட்டுமொத்த இணையதளத்தையும்.... அதாவது சமூக வலைத்தளங்களையும் தங்கள் கைகளில் கொண்டு வந்து, இது மாதிரியான அவதூறுகளுக்கு உடனுக்குடன் ஆதாரத்துடன் மறுத்து பல்வேறு வகைகளில் பரப்புரை செய்து வருகின்றனர்..!

திமுக தலைவரும், இரண்டாம் கட்ட தலைவர்களும்,.. அவதூறுகளுக்கு ஏற்ற வகையில் உடனுக்குடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியாகவும் அறிக்கையாகவும் வெளியிட்டு.....  அதுவும் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படுக்கொண்டிருக்கின்றது..!

மஞ்சள் பை, சர்க்காரியா, ஈழப்பிரச்சினை, 2ஜி போன்றவற்றில் அலட்சியமாக இருந்து விட்டு ஆட்சியை இழந்தது போல் இல்லாமல்....   இப்பொழுது திமுக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அத்தனை புகழும் திமுகவின் புதிய தலைவர் மு.க. ஸ்டாலினையே சாரும்..!



Wednesday, November 8, 2017

மோடியின் கலைஞர் தரிசனம்... யாருக்கு லாபம்?!


சென்னை வந்த பிரதமர் மோடி தலைவர் கலைஞரை சந்தித்தது பற்றிய ஆயிரம் ஹேஷ்யங்கள் உலவினாலும்...,
இன்றைய இந்த நிகழ்வின் மூலம் உடனடி பலனை அறுவடை செய்தது மோடியும், பாஜகவும் மட்டுமே..!

இந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால், இணையத்தில் பலமான தளமமைத்து செயல்படும் ஒரு லட்சத்திற்கும் சற்று கூடுதலான திமுகவினர்... இந்நேரம், மோடியின் ஒவ்வொரு அசைவையும், அவரது பேச்சுக்களையும்..., அவருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்ற நெருங்கிய தொடர்புகளையும் புட்டுப் புட்டு வைத்து, நீட், இந்தி திணிப்பு, மீத்தேன், ஜி எஸ் டி, பண மதிப்பிழப்பு... இப்படியாக மோடியின் ஒட்டுமொத்த தோல்விகளையும் மீண்டுமொரு முறை தெளிவாக புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் வைத்து, இணையம் முழுக்க வைரலாக்கியிருப்பர்.

ஏற்கனவே தமிழக அதிமுக ஆட்சியாளர் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில்... அதிமுக சார்பு தந்தி டீவியின் கருத்துக்கணிப்பிலேயே திமுகவுக்கு ஆதரவாக 55 சதவிகித மக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நிலையில்.... அந்த ஆட்சியாளர்களே... மோடி தான் தங்களைக் காப்பாற்றும் கடவுள் என்று மேடை போட்டு பேசி வரும் நிலையில்....

அதே அடையாளத்தோடு மோடி இங்கு வந்து சென்றால், அதிமுக ஆட்சியின் மீது பொது மக்களுக்கு இருக்கின்ற அத்தனை கோபங்களும் மோடியின் மீது ஒட்டு மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு இணையதள திமுகவினரும் பக்காவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பார்கள்.

குஜராத்திலேயே பாஜக அடிவாங்கப்போவதை இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்நேரத்தில், தமிழகத்தில் தன் கட்சி மீது கட்டமைக்கப்படும் மோசமான பிம்பம், நிச்சயமாக வட இந்திய மாநிலங்களில் இன்னும் மோசமாக எதிரொளிக்கும் என்பது மோடி வகையறாக்களுக்கு நன்றாகவே புரியும்..!

இந்த நிலையில் தான் தாங்கள் அதிமுகவுக்கும் அதன் நடப்பு ஆட்சிக்கும் பாதுகாவலர்கள் இல்லை என்பதை உறுத்திப்படுத்த... தலைவர் கலைஞரை சந்தித்த நிகழ்வானது, மோடிக்கு ஏற்படவிருந்த பெரிய பிம்ப சிதைப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றது..!

இதைத்தான் இன்றைய கலைஞர் - மோடி சந்திப்பின் முக்கிய விளைவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது..!

சரி... இதனால் திமுகவுக்கு என்ன பலன் என்று கேட்பீர்களேயானால்...
மோடிக்கு திமுகவினரால் கிடைத்த மதிப்பிழப்பு தடைக்கு கைம்மாறாக... அதிமுக ஆட்சியைக் கவிழ்த்து அல்லது கலைத்து தமிழகத்தை காப்பாற்ற பாஜக முன்வரும் என்பது தான்..!

Friday, June 24, 2016

சுதேசி, விதேசி மாய்மாலமும், பாஜகவின் தில்லாலங்கடி வேலையும்..!


நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்.... ஜனசங்கம் என்ற கட்சி உருமாறி பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் வாஜ்பாய் அவர்களை முன்னிருத்தி கால் பதித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவர்கள் சார்பாக அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீஸ்... பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கோவில்களிலும் விநியோகிக்கப்படும். அதில் ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட பாரத தாயை மீண்டும் அவர்களுக்கே அடிமையாக்க வேண்டுமா? சுதேசியை மீட்ட நாம் மீண்டும் விதேசிக்கு அடிமையாக வேண்டுமா? இப்படியாகவெல்லாம் இந்திய தேசிய உணர்வை  ஊட்டி....

சுதேசிப் பொருட்கள் எவையெவை? விதேசிப் பொருட்கள் எவையெவை என்றெல்லாம் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு....

உதாரணத்திற்கு கோல்கேட் விதேசிப் பொருளை புறம்தள்ளிவிட்டு... டாபரோ வேறு எதுவோ ஒரு பற்பசையான சுதேசிப் பொருளை பயன்படுத்துவோம் என்றெல்லாம் இருக்கும். இதில் தூண்டப்பட்ட பல இளைஞர்கள் அதைப் பின்பற்றும் வழக்கமும் ஏற்படலாயிற்று.

அப்பொழுது எல்லாம் கோகோ கோலா இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை இருந்த காலம்.

பாரதிய ஜனதா கட்சி தங்களது அடித்தளத்தை பலப்படுத்திக்கொள்வதற்காக, சுதேசி, விதேசி என்ற தளத்தில் மிகப் பலமாக நின்று அடித்து ஆடிக்கொண்டு, மத்திய அரசினை விமர்சித்து மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கி வந்த நேரம் அது...

அது அப்படியே தொடர்ந்து, அதன் பரிணாம வளர்ச்சியாக மதங்கள், கடவுள்கள் என்று அதே சுதேசி, விதேசி பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு.... சுதேசி மதமான இந்து மதத்தை ஆதரித்து விதேசி மதங்களான இஸ்லாமிய, கிருத்துவ மதங்களை புறக்கணிப்போம் என்பது மாதிரியான பிரச்சாரமாக வலுப்பெற்று... அதன் ஒரு களப்போராட்ட அடையாளமாக பாபர் மசூதி இடிப்பு வரை சென்று...

அவற்றின் பலன்களாக ஓரிலக்கத்திலிருந்து ஈரிலக்கத்திலான பாராளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் பாஜக கூலியாகப் பெற்ற வரலாறெல்லாம் நாம் அறிந்ததே...!

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பிரதமராக நரசிம்மராவ் அவர்கள் பொறுப்பேற்றவுடன், 
அவருக்கான நிதி சம்பந்தப்பட்ட அனைத்துக்குமாக மன்மோகன் சிங் அடையாளங்காணப்பட்ட நிலையில்.... 
இந்தியா என்றாலே வறுமையின் சின்னமாக உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்ட நிலையில்... 
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களில் 99.5 சதவிகிதம் பேர் அடித்தட்டு கூலி வேலைகளுக்கு மட்டுமே செல்லக் கூடியவர்களாக இருந்த நிலையில்...
அப்பொழுது இந்தியாவில் இருந்த ஆயிரத்தில் ஒரு குடும்பத்தில் மட்டுமே டீவி, வாஷிங் மெஷின், டூ வீலர்.. இத்தியாதிகள் இருந்த நிலையில்....
நூற்றில் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே, சைக்கிள், ரேடியோ, வாட்ச் போன்றவை இருந்த நிலையில்...
வேலை வாய்ப்பு உள்ளிட்ட எதுவுமே அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில்.., கிட்டத்தட்ட சரிபாதி குடும்பங்கள் மூன்றில் ஒருவேளை சாப்பாட்டை தவிர்த்து வந்திருந்த நிலையில்....
இதற்குமேல் இந்தியாவை ஒரு இஞ்ச் முன்னேற்ற வேண்டுமானாலும், வெளி உதவி தேவை என்ற நிலையில்...

உலக பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட நரசிம்மராவ் அரசு முடிவெடுத்து அதில் கையெழுத்திட்டு, உலகலாவிய வர்த்தக வாய்ப்பிற்கு அனுமதியளித்ததன் காரணமாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க காரணமாக அமைந்தார்...!!

ஆனால் அதை அவர் செய்வதற்கு அவர் என்ன மாதிரியான எதிர்ப்பை பாஜக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டோரிடம் எதிர்கொண்டார் என்றால்... அவர் இந்திய அரசியலின் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டு.... கிட்டத்தட்ட அவரது அரசியல் மற்றும் தனி நபர் வாழ்க்கையே அத்தோடு அஸ்தமனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு.....

அப்படி சுதேசி பொருட்களுக்காக, இந்தியாவின் சுயசார்பு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஆதரவான ஒட்டுமொத்த அதாரிடியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு பலப்படுத்தியதன் காரணமாக பாஜக பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களை வென்றதும் நடந்தேறியது..!

பாஜகவை நம்பி உடனடியாக மக்கள் வந்துவிடத்தயாரில்லாத நிலையில்... 96க்குப் பிறகு முதல் கட்டமாக காங்கிரஸ் அல்லாத... ஒரு கூட்டணிக்கு ஒரு முறையும், அவர்களே தம்மைத் தாமே கவிழ்த்துக்கொண்ட நிலையில், பாஜக தலைமையில் ஒரு பலவீனமான கூட்டணிக்கு ஒரு முறையும் மக்கள் வாக்களித்து... அதையும் ஜெயலலிதாவின் அகங்காரத்தில் கவிழ்த்த நிலையில்....

சரி... பாஜகவுக்கு ஒரு முறை ஓரளவிற்கு பலமான கூட்டணி அரசு அமைக்க வாய்ப்பளிப்போமே என்று மக்கள் கடிவாளத்துடன்.... 
அதிலும் பாஜகவுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட திமுகவுக்கு அந்த கடிவாளத்தைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தி ஐந்து ஆண்டுகள் ஆள மக்கள் அனுமதி கொடுத்தார்கள்..!

அதாவது இதுவரை நடந்ததை சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...

ஜனசங்க இமேஜை மாற்ற பாஜக என்ற புதுப் பெயரோடு... இந்தியா, இந்தியர்கள், இந்திய பொருட்கள், இந்திய மதங்கள், இந்திய கடவுளர்கள் என்று படிப்படியாக தங்கள் வாக்கு வங்கியை மிக மெதுவாக உயர்த்தியபடியே முன்னேறி...
ஒரு கட்டத்தில் இந்திய வளர்ச்சிக்கு காங்கிரஸ் எடுத்த முன்னேற்ற பொருளாதார நடவடிக்கையை மக்களிடம் திசை திருப்பி, குழப்பி பிரச்சாரம் செய்து..,
ஆனாலும் மக்கள் தன்னை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளாத நிலையில்... இடைக்காலமான மூன்று வருடங்களில் இரண்டு ஆட்சி மற்றும் நான்கு பிரதமர்கள் மூலம்... தங்கள் கட்சி மட்டுமே ஒரு மாற்று என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைத்து.... அப்படியும் மக்கள் நம்பாமல் போனதால், தனக்கான கடிவாளமாக தங்கள் கொள்கைகளுக்கு நேரெதிரியான திமுகவை தங்கள் கடிவாளமாக மக்கள் முன்னால் நிறுத்தி நம்பிக்கையைப் பெற்று...

முதல் முறையாக பாஜக கூட்டணி அரசை ஐந்து ஆண்டுகளுக்கு வாஜ்பாய் நடத்தினார்...!!

ஆனால் எந்த ஒரு கொள்கையை எதிர்த்து (உலக வர்த்தகமயக்கலுக்கு எதிரான சுதேசிக்கு ஆதரவான) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ... அதற்கு நேரெதிராக, இவர்கள் விமர்சித்து வெளியேற்றிய நரசிம்மராவ் இந்தியாவுக்கு அளித்த உலக பொருளாதார தடை நீக்கம் என்ற தாராளமயமாக்கலை.... தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தி.... சிறந்த பொருளாதார நிபுணரான முரசொலி மாறனை காமர்ஸ் மினிஸ்டராக அறிவித்து அவரை உலகம் முழுக்க பயணிக்க வைத்து பன்னாட்டு முதலீடுகளை இந்தியாவில் குவித்து, முதல் முறையாக இந்தியாவின்... இந்தியர்களின் தனிநபர் வருமானத்தையும், வாழ்க்கை வசதிகளையும் உயர்த்தி, ஜன்னலைத் திறந்து விட்டதன் மூலம் உலகின் விஸ்தாரத்தையும், அழகியலையும், வளர்ச்சியையும், இன்பத்தையும் காட்டிக் கொடுத்தது...!!

அதற்கு அடுத்தடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியில் அந்தப் பாதை அற்புதமாக சீர் செய்யப்பட்டு கட்டுக்கோப்புடன் செயல்பட்டு, 2008இல் உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் இந்தியாவும், இந்தியர்களும், சிறு அதிர்வைக் கூட உணராமல் காப்பற்றப்பட்ட நிலையில் தான்...

மோடியின் அரசு பதவி ஏற்றது..!

அன்றைக்கு சுதேசி விதேசி என்று சொல்லி மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த வாஜ்பாய்..., தான் எதைக் கொண்டுவந்ததால் பலியாக்கப்பட்டாரோ அதே நரசிம்மராவ் கொண்டு வந்த அன்னிய முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் ஆட்சியை பலப்படுத்திக் கொண்டு விட்டு....

அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தத்தை மிகக் கடுமையாக விமர்சித்து மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில்....

மீண்டும் அதே பாஜகவின் மோடி அவர்கள்...

மன்மோகன் சிங் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை, நிறுத்தி வைத்திருந்த பாதுகாப்பு எல்லையில் இருந்து டேஞ்சரஸ் ஸோன் என்ற நிலைக்கு உயர்த்தி....

அதாவது.... அம்பானி, அதானி, மல்லையா போன்றோருக்கும், வெளிநாட்டினருக்கும் மட்டுமே பயனளிக்கும் நிலைக்கு....

பெருவாரியான துறைகளில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிப்பதன் மூலம்.... அதிலும் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு கதவைத் திறப்பதன் மூலம்... இந்திய பொருளாதார சிற்பியான ரகுராம் ராஜனை சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று நகர்த்துவதன் மூலம்...

கிட்டத்தட்ட இந்தியா என்பது ஒரு அபாயத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்திவிட்டார்..!

ஒரு கட்சி தான் ஆட்சி அமைக்க யாருடன் வேண்டுமானாலும் மாறி மாறி கூட்டணி அமைக்கலாம். ஆனால் அக் கட்சியே தான் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை கட்டியம் கூறும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாமா?!

திமுக என்ற கட்சி எந்தக் காலத்திலும் தன்னுடைய சமூகநீதி கொள்கையை எப்படி கை விடாமல் நிற்கிறதோ... அதேப் போன்று தானே பாஜகவும் தனது சுதேசிக் கொள்கையில் நின்றிருக்க வேண்டும்?!

சரி... ஆரம்பத்தில் தாங்கள் எதிர்த்த விதேசி பொருட்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும் மோடியும், விதேசி நிறுவனங்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும், மோடியும்....
அதேப் போன்று விதேசி மதங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுமா?! ஏற்றுக்கொள்வார்களா?!

டாட்..!