Thursday, November 16, 2017

மாயவரம் தேர்...


எங்க ஊர் பெரிய கோவில் தேர் ரெடியாகிட்டிருக்காங்க...! எங்க ஊர் தேரினை உயிரும், உணர்வும் கலந்த சக ஊர்வாசியாகவே நாங்கள் பார்ப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன்..!


ஒரு பக்கம் இவிங்களுக்கு அலங்காரம் நடக்குது.... 

கோவிலுக்குள்ள சாமி - அம்பாளுக்கு (அவயாம்பாளுக்கு) அலங்காரம் நடந்துக்கிட்டிருக்கு... 

நாலு வீதிலயும் சைடுல நின்னு எட்டிப்பாக்குற மரங்களோட கிளைகள் எல்லாம் கழிக்கப்படுது... 

ரோட்டுல இருக்குற குண்டு குழி எல்லாம் கப்பி போட்டு நிரப்படுது... 

மாயவரத்து பொண்ணுங்க எல்லாம் பீரோல இருக்குற தாவணிய எடுத்து வெளில வச்சு, மேச்சிங் பிளவுஸ் தேடிக்கிட்டிருக்கு.... 

பொடியனுங்க எல்லாம் சின்னச்சின்ன விளையாட்டு சாமான், திண்பண்டங்கள் வாங்க காசு தேத்திக்கிடிருக்காய்ங்க... 

வயசு பசங்க எல்லாம் முகத்துக்கு ஃபேஷியல் போடுறது, தாடிய டிரிம் பண்றது, கிராப்பு வெட்டுறது, பைக்கை சரி பண்றதுன்னு பிஸியா இருக்காங்க... 

வயசானவங்க எல்லாம் சுத்தபத்தமா கோவிலுக்கு போக ரெடியாகிட்டிருக்காங்க.... 

என்னைய மாதிரி ஆளுங்க எல்லாம் கூட்டத்துக்கு முன்னாடி முழுசா தேரை ஒரு தரம் பாத்துடனும்ன்னு வந்து ஃபோட்டோ எடுத்திட்டிருக்காங்க...

இதுக்கு நடுப்புற மேகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தேர் பார்க்க வந்து கூடிக்கிட்டிருக்கு.... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை...!

காவிரி ஆத்துக்கு இந்தப்பக்கம் வந்தா வள்ளலார் கோவில் தேர், பெருமாள் கோவில் தேர் எல்லாம் ரெடியாகிட்டிருக்கு....

மாயவரமே பரபரப்பா இருக்கு...! இது தான் வருஷா வருஷம் இங்க நடக்குற செம்மையான செலிப்ரேஷன்...!

ஹாங்... இன்னோன்னு.... 

இன்னிக்கு தேர் முடிஞ்சோடுன தான் நாளைக்கு மாயவரத்துல உண்மையான காவிரி புஷ்கரம் நடக்கும்...! ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்ல.... ஆனந்தத்தை விரும்புபவர்கள் அனைவரும் மாயூரம் வருக...!

அப்படியே காவிரி தாயையும் நாளை முழுக்கு நேரத்திற்குள் மாயூரம் வந்துவிடும்படி அழைக்கின்றோம்...!  ஏன்னா இந்த நிமிடம் வரை இவ்ளோ மழையிலயும் காவிரி இங்கே காய்ந்து தான் கிடக்கிறது...!




No comments: