Thursday, November 9, 2017

இவர் செயல் தலைவரா... அல்லது செயல் முதல்வரா..?!


நேற்று முன் தினம் முழுவதும் சென்னை மழை நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்துகிறார்...

அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து, நேற்று காலை பண மதிப்பிழப்பு கருப்பு தின ஆர்ப்பாட்டத்துல கலந்து கொண்டு ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்...

அங்கிருந்து கிளம்பி தஞ்சாவூருக்கு வந்து, அங்கு திறப்பதற்கு தயாராக இருக்கும் புது பாலத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்து அம்பலப்படுத்தி ஆட்சியாளர்களை அலறவிட்டு மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்...

அங்கிருந்து புறப்பட்டு... 
சம்பா பயிர் நடப்பட்டு  பத்துப்பதினைந்து நாட்கள் ஆன நிலையில், கடந்து பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் அவை அனைத்தும் மூழ்கிப்போய், விவசாயிகள் விக்கித்து நிற்கும், திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும்... 

...பாதித்த வயல்வெளிகளையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் பெற்றுத்தர உறுதியளித்து, அதற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கி... தொடர்ந்து இரவு 9 மணியைக் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு, அவர்களுக்கு கட்சியினர் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கியவாறும் பயணித்துக் கொண்டிருக்கின்றார்...!

திமுகவினர் அவரை தங்கள் கட்சியின் செயல் தலைவராகத்தான் நியமித்திருக்கின்றார்கள்...

ஆனால் காலமும், மக்களும் அவரை இன்றைக்கு தமிழகத்தின் செயல் முதல்வராகவே மாற்றிவிட்டிருக்கின்றது..!

இவருக்கும் வயது 64 ஆகின்றது... ஆனால் நேற்று முன் தினம் ஒருவருக்கு 64 வயது ஆகி அந்த நாளையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவும் கொண்டாடித் தீர்த்து, அவர் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்று கேள்வி எழுப்பி, முதல்வர் ரேஸில் கிட்டத்தட்ட முந்துவதாகவெல்லாம் பில்ட்டப் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே மீடியாக்கள் ஜெயலலிதாவுக்கும் இப்படி பில்ட்டப் கொடுத்துத்தான் தமிழகத்தை இன்றைக்கு கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றார்கள்.

நியாயமாக பார்க்கப்போனால்..

மக்கள் பிரச்சினைகளுக்காக மட்டுமே தொடர்ந்து இப்படி தமிழகம் முழுக்க பயணித்து ஆட்சியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கும்... தமிழகத்தின் ஆகப்பெரிய கட்சியின் செயல்தலைவர் பற்றி... அவரது இந்த இடையறாத உழைப்பினைப் பற்றி இந்த ஊடகங்கள் விவாதங்கள் நடத்தியிருக்க வேண்டும். அவரது உழைப்பினை வெளிச்சம் போட்டுக்காட்டி இந்த ஆட்சியாளர்களை இன்னும் அலற விட்டு வேகமாக வேலை செய்ய வைத்திருக்க வேண்டும். அது தான் ஊடக தர்மம்..!

ஆனால் இந்த ஊடகங்கள் அதையெல்லாம் செய்யாது. அவர்களுக்கு சன் டீவியின் சீரியல்களுக்கும் மற்ற பொழுது போக்கு சேனல்களுக்கும் போட்டியாக தங்கள் செய்திகளையும் கவர்ச்சியாக மக்களிடம் சேர்க்க வேண்டும். அதற்காக சினிமா பிரபலங்கள் விடும் மூச்சுக்காற்றை ... பின்பக்கக் காற்றையும் கூட செய்தியாக்குவார்கள்...!

மக்கள் தான் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த முறை திமுகவை கை விட்டால், பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது...! பீகார், உபியை விட கேவலமாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது. கவர்ச்சி அரசியலையும், சாதி அரசியலையும், தமிழர்கள் கொஞ்சகாலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்..!




No comments: