Thursday, December 19, 2013

மத்திய ஆளுங்கட்சியாக திமுக சாதித்தது என்ன?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தோழர் ஒருவர், திமுகவை கிண்டல் செய்யும் விதமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் மத்திய அரசில் ஆளுங்கட்சியாக திமுக இருந்திருக்கின்றது என்று நிலைத்தகவல் இட்டிருந்தார்....

உண்மை தான் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு பெரிய கட்சியின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும், அதன்பிறகு காங்கிரஸ் தலைமையில் நேருவின் குடும்ப வாரிசு இல்லாத பிரதமரைக் கொண்டு பத்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்து இந்த ஆட்சிகளில் ஆளுங்கட்சி அந்தஸ்த்தோடு திமுக பங்கேற்றிருந்ததில் மாற்றுக் கருத்து இல்லை... மேலும் இதில் கிண்டல் கேலிக்கும் அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பாக அதுவரை கிடைத்திராத பல முன்னேற்றங்கள் இந்த பதினைந்து ஆண்டு காலத்திற்குள் தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கின்றது என்பது... இன்றைக்கு முப்பந்தைந்து வயதிற்கு உள்ளாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலோ அல்லது புரிந்துகொள்ள முடியாமலோ இருக்கலாம்.....

ஆனால் நாற்பது வயதினைக் கடந்தவர்களுக்கு 98க்கு முந்தைய தமிழகத்தின் நிலையும் அதன் பிறகான இன்றைய தமிழகத்தின் வளர்ச்சி பெற்ற நிலையினையும் ஒப்பிட்டு கண்டிப்பாக இந்த பதினைந்து ஆண்டுகளில் அதற்கு முந்தி கிடைத்திருக்காத எண்ணற்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு வாய்க்கப்பெற்று பெறு வளர்ச்சியை இந்த குறுகிய காலகட்டத்தில் தமிழகம் அடைந்திருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியும்!

உட்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கொண்டாலே அதற்கு முன் குண்டும் குழியுமான ஒற்றைப்பாதை மாநில நெடுஞ்சாலைகளாக இருந்த நிலை மாறி இன்றைக்கு கிராம இணைப்புச் சாலைகள் கூட அற்புதமான அகல சாலைகளாக காட்சியளிக்கின்றன. குக்கிராமங்கள் முதல் முட்டுச் சந்துகள் வரை காங்க்ரீட் சாலைகளும், லட்சக்கணக்கான சிறு, குறு, பெரும் பாலங்களும், அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உயர்நிலை நீர் தேக்கத் தொட்டிகளும், இந்த பதினைந்து வருடங்களில் மட்டுமே தமிழகத்தின் 90 சதவிகித ரயில்வே பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டதும், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 100 சதவிகிதம் அதிக ரயில்கள் தமிழகத்தில் ஓடுவதும், பாதாள சாக்கடைத் திட்டங்கள் முதற்கொண்டு அனைத்து உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டங்களும் மத்திய அரசின் நிதியினை தாராளமாகப் பெற்று தமிழகத்தின் சாதாரண நகரங்கள், கிராமங்கள் கூட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. 

98 இல் பதினைந்து வயதிற்குள்ளாக இருந்த இளைஞர்களால் ஒரு வேளை இந்த மாற்றங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்க இயலாமல் போயிருக்கலாம். அதேசமயம் பத்து வயதிற்கு குறைவாக இருந்திருந்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....!

வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, 98க்கு முன்பாக தமிழகத்தில் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த அன்றைய இளைஞர்களுக்கு இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு நிலை எந்த அளவிற்கு கற்பனைக்கு எட்டாத அளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும். ஏனெனில் சுத்ந்திர இந்தியாவில் முதல் அரை நூற்றாண்டில் தமிழகத்தில் வந்திருந்த பெரிய தொழிற்சாலைகளை விட கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல நூறு சதவிகிதம், அதாவது பல மடங்கு அதிக தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்திருப்பதை யாரும் மறுக்கவே முடியாது. 

96இல் வெறும் மூவாயிரம் சம்பளம் உள்ள வேலை ஒன்றுக்கு கிட்டத்தட்ட முன்னூறு பேர் விண்ணப்பித்து நேர்காணலுக்கு செல்லும் நிலை இருந்ததை இன்றைக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அன்றைக்கு நம் தமிழக இளைஞர்கள் மும்பை போன்ற வட இந்திய மாநிலங்களுக்கு கூலி வேலை செய்யச் செல்லும் நிலை மாறி, இன்றைக்கு ஆந்திரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், பீகார், நேப்பால் போன்ற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வரும் அளவிற்கு மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றப்படும் உட்கட்டமைப்பு வேலை வாய்ப்புகள் உருவாகியிக்கின்றன. தொழில் துறையும் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.....

இது மட்டுமல்லாது, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 89 இல் இருந்து இரண்டாண்டுகளுக்கு மத்திய ஆளுங்கட்சியாக திமுக பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தான் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும் சாத்தியமாக்கப்பட்டதும், அதனால் இன்று வரை பயனடைந்த பல லட்சம் தமிழர்களும் மத்திய ஆளுங்கட்சியாக திமுக இருந்ததற்கான அடையாள கிரீடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள்....!!!!

திமுகவின் வளர்ச்சியின் மேல் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் செய்த அவதூறான பிரச்சாரம் தான், திமுக பசை உள்ள துறைகளாக மத்திய அரசில் வாதாடிப் பெற்றுக் கொள்கின்றது என்பது! 

தேசியக் கட்சிகளின் தமிழக பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் எப்பவாவது விபத்து போல கிடைத்தாலும் அது அலங்காரப் பதவியாகவே இருந்து வந்த நிலையில், மத்திய ஆளுங்கட்சியாக பங்கேற்று தங்கள் பிராந்தியத்திற்கான உரிமையை அழுத்தமாகக் கேட்டுப் பெற்று தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக ஓட வைத்திருப்பதில் திமுகவின் பங்கை இப்படிப்பட்ட கேவலமான விமர்சனங்கள் மூலம் நீற்றுப்போக வைத்து, மீண்டும் தமிழகத்தை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்க வைக்கத்தான் இந்த மாதிரியான விமர்சனங்கள் வழி வகுக்கும்.

வளமான துறை கேட்டு பிரதமரை காண டெல்லி சென்ற கலைஞர், சிறையில் இருந்த தன் மகளைக் காண டெல்லி சென்ற போது பிரதமரையோ, அதிகார மையத்தையோ காணச் செல்லவில்லை என்பதையாவது இந்த அவதூறுப் பேர்வழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக மாற்றியதில் திமுகவின் பங்கு தான் மிக முக்கியமானது, இதனால் பாதிக்கப்பட்ட வ்டமாநில லாபிகள் திமுகவுக்கு எதிராக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அந்த அவதூறுகளை நம்பி நம் தமிழக இளைஞர்களே ஆட்டு மந்தைக் கூட்டம் போல் தலையாட்டுவது தான் வேதனையான விடயம். இளைஞர்களே இந்த மாற்றத்தின் வித்தியாசம் உங்களுக்கு அனுபவ ரீதியாக உணர வாய்ப்பில்லை என்றால் உண்மையான வரலாற்றை தெளிவாகப் படித்து அல்லது கேட்டு ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள்.... நியாயமாக இந்த தேடலில் நீங்கள் இறங்கினால் தமிழக வளர்ச்சியில் திமுகவின் அரும் பணி உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் விழுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு வாக்காகவே அமையும் என்பதை இப்பொழுது இங்கே அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன் - கொக்கரக்கோ சௌம்யன்

3 comments:

கொக்கரக்கோ..!!! said...

நான் இந்தப் பதிவில் எந்த அநாகரீகமான வார்த்தைகளையோ விமர்சனங்களையோ திமுகவிற்கு எதிரானவர்கள் மீது வைக்காத நிலையில் ஏன் திமுக எதிர்ப்பாளர்கள் மிகக் கேவலமாக தனி மனித தாக்குதல்கள் நடத்தும் கமெண்ட்களை போடுகின்றீர்கள் என்று புரியவில்லை. உங்களின் இந்த செயலே உங்கள் தரப்பின் தோல்வியை உறுதி செய்கின்றது. மேலும் உங்கள் பதிலுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டதையும் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

Jayadev Das said...

வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழலை பண்ணி தமிழன் மானத்தை வாங்கியது.
உலகில் முன்னணி பணக்காரர்களுள் ஒருத்தரானது.

முதல், ரெண்டாவது மூணாவதுக்கு பொறந்தது எல்லாத்துக்கும், எம்பி /அமைச்சர் பதவி வாங்கினது.

பணம் கொழிக்கும் துறைகளாக மிரட்டி பிடுங்கி காசு பார்த்தது.

சாவது தமிழனாக இருந்தாலும், வாழ்வது நானும் என் பெண்டாட்டிகளும், பிள்ளை குட்டிகளும் என்ற கொள்கையை கெட்டியாக பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது.

தமிழ்காரனுங்களை குடிகாரனாகி அவனுங்க பெண்டாட்டி தா........அறுத்தது.

இப்படி எத்தனையோ சொல்லிகிட்டே போலாம்.

ராஜ் said...

//ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் விழுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு வாக்காகவே அமையும் என்பதை இப்பொழுது இங்கே அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன்///
ஆனாலும் உங்களுக்கு மன உறுதி ஜாஸ்தி பாஸ்....I Like it.. :-)