Tuesday, July 16, 2019

உதயநிதி நியமனமும்... சமஸ் ஊளையிடலும்...!

Image may contain: 1 person, smiling, standing
தமிழ் இந்துவில் அகில உலக தமிழ் அரசியல் எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன், திரு. சமஸ் ஒரு பெரிய்ய்ய்ய கட்டுரையை எழுதியிருக்கின்றார்..!
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுகழக இளைஞரணி செயலாளராக நியமித்ததற்கு பத்து நாட்களாக அன்னம் தண்ணி புழங்காமல், கீழே விழுந்து புரண்டு அழுது... கலைஞர்களை உதயநிதிகள்... என்னவோ செஞ்சுட்டாங்கன்னெல்லாம் புலம்பி தள்ளியிருக்கின்றார்..!
அதை படிக்கப் படிக்க பேரானந்தமாக இருந்தது.... காரணம் நரி ஊளையிட்டால் நல்ல சகுனம் தானே..?!
இதை ஏதோ உதயநிதிக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டிற்கான டெம்ப்ளேட்டான எள்ளல் எதிர்வினை என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
காரணத்தோடு தான் சொல்கிறேன்...! ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2016 தேர்தல் சமயத்தில்... அஸ்தமிக்கும் பேரியக்கம் என்ற தலைப்பில்... இதேப் போன்று மிகப் பெரிய்ய கட்டுரை ஒன்றினை திமுகழகத்திற்கு எதிராக இதே சமஸ் தான் எழுதினார்..!
அதைப் படிக்கின்ற அப்பாவி பொது மக்கள் அனைவரும்... இன்னும் சொல்லப்போனால்... திமுகவினர் பலரே கூட திமுக அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றதோ என்று தான் எண்ணினர்..! உண்மையைச் சொல்லப்போனால் 2016 தோல்விக்குப் பின் திமுக தொண்டர்களே கூட கொஞ்சம் களங்கித்தான் போயிருந்தார்கள்... அந்த நேரத்தில் வந்த இவரது கட்டுரை திமுக எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டத்தையும், திமுக ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்த தவறவில்லை..!
ஆனால் இவர் கட்டுரை வெளிவந்த பிறகு திரும்பவும் திமுக டாப் கியருக்குச் செல்கிறது... இன்னும் சொல்லப்போனால், இந்த சமஸே தனது வயிற்றுப் பிழைப்புக்கு தலைவர் கலைஞரை வைத்து... அவரைப் பற்றிய பல்வேறு பிரபலங்களின் கருத்துக்களை தொகுத்து... தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு... திமுகவினரின் ஏகோபித்த ஆதரவோடு வெகுவாக கல்லா கட்டுகின்றார்..!
அதன் பிறகு கலைஞர் மறைந்த நிலையில்... அவருக்கான பத்திரிக்கையாளர்கள் நடத்திய புகழஞ்சலியில் கூட அத்தனை பேரும் கலைஞர் என்று விளித்தே அஞ்சலி செலுத்த... கலைஞரை வைத்து கல்லா கட்டிய இந்த சமஸ் மட்டும் தன் சாதி சனாதன தர்மத்தின் நியதிப்படி... கலைஞரை கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைத்து பேசவே... அங்கேயே திமுகழக தொண்டர்களின் கண்டிப்புக்கும் ஆளானார்..!
இந்த நிலையில் தான்... அஸ்தமிக்கவிருப்பதாக இவர் எழுதிய திமுக... இன்றைக்கு தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய பலம்மிக்க கட்சியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற நிலையில்...
உதயாவின் இளைஞரணி செயலாளர் நியமனத்தை கைகளில் எடுத்துக் கொண்டு... ஒரு பெரிய்ய கட்டுரையை வார்த்து, திமுகவினர் மத்தியில் கலகத்தையும், பொது மக்கள் மத்தியில் திமுக மீதான வெறுப்பையும், எதிர்க்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும் தூண்டி விட எத்தனிக்கின்றார்..!
ஆனால் வழக்கமாக அண்ணனின் ராசிப்படி... அவர் ஊளையிட்டு விட்டதால்... இனிமேல் தான் திரு. உதயநிதி அவர்கள் டாப் கியருக்கு செல்லவிருக்கின்றார் என்பது தெளிவாகப் புரிகின்றது..! ஒருவேளை இந்த நியமனத்தை சமஸ் ஆதரித்து எழுதியிருந்தால் தான் நாம் கவலை கொள்ள நேரிடும்..!
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து இதே சமஸ் தெற்கிலிருந்து இன்னுமொரு சூரியன்னு ஒரு புத்தம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!
அல்லது... இந்த சமஸ்ஸை விட மிகக் கேவலமாக திமுகவையும், கலைஞரையும், தளபதையையும் விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த திருமாவேளனை கலைஞர் டீவியில் கட்டிப் போட்டது போல... இந்த சமஸ்சுக்கு ஒரு பொறையைக் காட்டி முரசொலியில் கட்டிப் போட்டாலும் போடலாம்... யார் கண்டது..?! தலைமையின் பல்வேறு ராஜதந்திர உத்திகளில் இதுவும் கூட ஒன்று தானே..?!

No comments: