Saturday, March 1, 2014

ஒரு தனையன்.... தலைவனாகிறான்...!


அப்பழுக்கற்ற மனிதர் அவர்...
அகவை அறுபத்தொன்றை கடந்து வருகிறார்...!

ஆளுமைத்திறன் கொண்ட தலைவர் அவர்...
ஆற்றல் மிக்க செயல்வீரராய் வலம் வருகிறார்...!!

இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை அவர்...
இருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்க வருகிறார்...!!!

ஈடு இணையில்லா உழைப்பாளி அவர்...
ஈடுபாட்டுடன் கழகம் காக்க வருகிறார்...!!!

உண்மைக்கோர் இலக்கணம் அவர்...
உத்தமர் இவர் என்று எதிரிகளே வாழ்த்தும்படி வருகிறார்...!!!

ஊர் ஊராய்ச் சுற்றிச் சுழன்று வருகின்றார் அவர்...
ஊக்கமுடன் உடன்பிறப்புக்கள் களமாட வழி வகுத்து வருகிறார்...!!!

எழுந்து நிற்கும் உதயசூரியன் அவர்....
எதிரிகளை சுட்டெரிக்க ஓடி வருகின்றார்....!!!

ஏற்றமிகு இளைஞர்படை கொண்டவர் அவர்...
ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்ட சூளுரைத்து வருகின்றார்...!!!

ஐயம் என்பதை அறியாதவர் அவர்....
ஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் சலாமடிக்க பவனி வருகிறார்....!!!

ஒப்புமையில்லா தளபதி அவர்....
ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவராக மாறி வருகிறார்...!!!

ஓடி ஓடி உழைத்திடுவார் அவர்....
ஓங்கி உயர்ந்து வளருது அவர் புகழ்...!!!

அவ்வ்வ்.. என்று ஓலமிடுகின்றனர் எதிரிகள்....
இவரைக் கண்டு....
உ”ஃ’ப் என்று அதிர்ச்சியாகின்றனர் போட்டியாளர்கள்....!!!

அவர் தான் எங்கள் தளபதி... இல்லை இல்லை...

இனி அவர் தான் எங்கள் தலைவர்....!!!

பெற்றோருக்கு தனையனாக ஒரு சுற்றை (அறுபது ஆண்டுகள்) முடித்தவர்....

தம்பிமார்களுக்கு “தலைவனாக” அடுத்த சுற்றை (அகவை அறுபத்தொன்றை) ஆரம்பிக்கின்றார்....!!!

ஒரு தனையன்.... தலைவனாகிறான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!



No comments: