Tuesday, March 4, 2014

பாராளுமன்ற தேர்தலும்... திமுகவின் முஸ்தீபுகளும்...!


பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு மூன்று மாத கால இடைவெளி இருக்கின்ற நிலையில், நாற்பது தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக களம் இறங்க விருப்பமுள்ள தகுதியானவர்கள், இன்ன தேதியிலிருந்து... இந்த தேதிக்குள்ளாக விருப்பமனு அளிக்கலாம் என்று தலைமைக் கழகத்தில் இருந்து வெளிப்படையான அறிவுப்பு வருகிறது. அந்த விருப்ப மனுக்கள் இன்னின்ன தேதிகளில் இந்தந்த மாவட்டத்திற்கு பரிசீலனை செய்யப்பட்டு நேர்காணல் நடைபெறும் என்ற அறிவுப்பும் சேர்ந்தே வருகிறது.

அதே தேதியில்.. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திட ஒன்றும், தேர்தல் அறிக்கை தயாரிக்கு ஒன்றுமாய் இரண்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டுகிறது. 

கூட்டணி பேச்சுவார்த்தை குழு, சில கட்சிகளுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து, வந்தால் சேர்த்துக்கொள்வோம் (கண்டிஷன்ஸ் அப்ளை என்று மெல்லியதாக சொல்லிவிட்டு) என்று பகிரங்கமாக ஒளிவு மறைவின்றி அறிவிக்கிறது. 

தேர்தல் அறிக்கைக் குழுவோ, அறிக்கையில் மக்களுக்கு அத்தியாவசியமான திட்டங்களைச் சேர்ப்பதற்கு தொண்டர்களிடம் கூட கருத்துக்களை பகிருமாறு கோறுகின்றது!

சொன்ன தேதிகளில் விருப்ப மனுக்கள் வந்து குவிகின்றன. சொன்ன தேதிகளில் நேர்காணல் நடந்து முடிகிறது. 

இதற்கிடையில் கூட்டணிக் கட்சிகளின் வரவுகளும், அவர்களிடமான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும், தேர்தல் அறிக்கை கிட்டத்தட்ட முழுவதுமாக தயாரான நிலையும் ஏற்படுகின்றது.....

நேர்காணல் முடிந்த அடுத்த நாள் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு கட்சித் தலைவராக முறைப்படி அழைக்கப்பட்டு, தொகுதி எண்ணிக்கையும், எந்தெந்த தொகுதிகள் என்பதும் பேசி இறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இவை அனைத்துமே ஏதோ மீடியா ஸ்கூப் செய்தி போன்று பரவாமல், கட்சித் தலைமையே புகைப்படங்களுடன் மணிக்கு மணி நடப்பவைகளை வெளிப்படையாக அறிவித்துச் செய்து கொண்டிருக்கின்றது.....

இது கட்சி... இது தான் ஒரு நேர்மையான கட்சியின், கட்சித் தலைமையின் செயல்பாடு... 

இதை விட்டு ஒரு ஆளு நாடு விட்டு நாடு ஓடிக்கிட்டே கோயிங் ஸ்டடி பண்னிட்டிருக்காரு... விட்டாக்கா அவர் குடும்பத்தினர் லீக்வான்யூ கிட்டக் கூட சிங்கப்பூர்ல ஒரு துறை முகம் கட்ட அனுமதி வேணும்ன்னு பேரம் பேசுவாரு போலருக்கு....

இன்னோரு கட்சி என்னடான்னா? 40 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிச்சிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கும் கிளம்பிட்டாங்க. கூட்டணின்னு நம்பிக்கிட்டு உண்டியல் குலுக்குனவன் எல்லாம் அன்னாந்து ஹெலிகாப்ட்டரை வாயப் பொளந்துக்கிட்டு வேடிக்கை பார்க்குறான்...

இன்னோரு தேசிய கட்சி சீட்டு பேரம் பேசிப் பேசி... கடேசீல பார்த்தா, அவங்க நிக்கறதுக்கே தென்னிந்தியாவ தாண்டித்தான் போயி நிக்கனும் போல இருக்கு....

இன்னோரு தேசிய கட்சியோ.... காம்ப்ளான் குடிக்குது, காவடி தூக்குது, வெய்யில் காலத்துல நடைபயணத்துக்கு கிளம்புது.....

பொதுவான அரசியல் பார்வையாளர்களுக்கும், நடுநிலையான பொதுமக்களுக்கும் புரியும். எப்பவுமே திமுக தான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்குமான கட்சின்னு. 

ராணுவம், வெளிவிவகாரம், நிதி, சட்டம், இது மாதிரியான மேட்டர்கள்ல, 40க்கும் குறைவான எம்பிக்களை வைத்துக்கொண்டு ஒன்னும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாதுன்னு திமுகவுக்கும் தெரியும், பொது மக்களுக்கும் புரியும். நம்ம தயவுல மேல ஆட்சி அமைஞ்சிதுன்னா, நாலு நல்ல தொழிற்சாலையை கொண்டு வந்து நம்ம தமிழ்கார பசங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம். நல்ல சாலைகள் அமைத்துக்கொடுக்கலாம், நிறைய பாலங்கள் கட்டலாம், நிறைய ரயில்களைக் கொண்டு வரலாம், அதிக நிதி பெற்று கிராம வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் வழி பண்ணலாம்..... 

இப்படியாக நம்ம தமிழகத்தின் செழுமைக்கு மத்த மாநிலங்களை விட கொஞ்சம் அதிகமா வாங்கி பயன்படுத்திக்கலாம். மாநிலத்தின் வளர்ச்சி என்பதை ஆமை வேகத்திலிருந்து முயல் வேகத்திற்கு மாற்றலாம். இது மட்டுமே இன்றைக்கு இருக்கின்ற இந்திய ஆட்சி முறை சட்டத்தின் படி சாத்தியம். இந்த கோரிக்கைகளை மையப்படுத்தியே திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்...

இதை விடுத்து, நான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவேன், இலங்கையைப் பிடிப்பேன், லொட்டு லொசுக்குங்கற மாதிரி பேசிட்டிருந்தா, கேக்கும் போதே அலுப்புத்தட்டிடும். வெத்து ஜம்பம் எல்லாம் இங்க தமிழ்நாட்டுல தான் காட்டலாம். அங்க ஒன்னும் வேலைக்காகாது!!

மூனு மாசத்துல கரண்ட்டு கொண்டுட்டு வருவேன்னு சொல்லிட்டு, மூனு வருஷம் ஆகியும் இன்னிக்கும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின் தடை பண்றவங்களால டெல்லிக்குப் போனாலும் எதையும் மாத்த முடியாது. ஒன்னே ஒன்ன வேணா மாத்தலாம்.....!

கொடநாட்டு வசிப்பிடத்தை.... குளூமணாலிக்கு மாத்தலாம்....!!

இளைய தலைமுறையினர் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்!!



2 comments:

அரவிந்த் குமார்.பா said...

மன்னிக்கவும்.. ஏதோ நடுநிலைப் பதிவென்று நினைத்து படித்துவிட்டேன்.. ஒரு சார்பு தளமென்று தெரியாது..

அரவிந்த் குமார்.பா said...

மன்னிக்கவும்.. ஏதோ நடுநிலைப் பதிவென்று நினைத்து படித்துவிட்டேன்.. ஒரு சார்பு தளமென்று தெரியாது..