Thursday, December 18, 2014

மக்கள் முதல்வருக்கு, ஒரு அப்புறாணியின் மனம் திறந்த மடல்..!


மதிப்பிற்குறிய மக்கள் முதல்வர் அவர்களுக்கு.... ஒரு அப்புறானி தமிழக வாக்காளனின் வேண்டுகோள்....!!

மூனறை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு தேர்தல் வந்திச்சி. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆட்சி செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தரோட ஆட்சியில விலைவாசி எல்லாம் எக்கச்சக்கமா ஏறிப்போச்சின்னு நீங்க திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டிருந்தீங்க. உங்க கட்சி ஆளுங்களை எல்லாம் விட்டு முக்குக்கு முக்கு போராட்டம் எல்லாம் நடத்துனீங்க. உங்க ஜெயா டீவிய எப்ப திறந்தாலும் இதே பாட்டு தான் பாடிட்டிருந்திச்சி....

எங்க மக்களும் நீங்க சொல்றத எல்லாம் நம்பி... (நாங்க தான் அப்புறானின்னு ஏற்கனவே சொல்லிட்டேனே!) நீங்க ஆட்சிக்கு வந்தா, விலைவாசிய எல்லாம் குறைச்சிடுவீங்க, அதுனால, நாங்களும் மாசாமாசம் இன்னும் கூடுதலா சேமிச்சி சொந்த வீடு கட்டி சந்தோஷமா வாழலாம்ன்னு நினைச்சி உங்களுக்கு ஓட்ட குத்தி ஆட்சியில உக்கார வச்சோம்...!!!
ஆனா நீங்க வந்ததும் வராங்காட்டியுமா, ஒரே மாசத்துல வணிக வரியில ஐயாயிரத்தி ஐநூறு கோடி ஓவாக்கு வரிய ஏத்திப்புட்டீங்க, அதுனால, வீட்டை விட்டு வெளில போயி எந்த கடைல என்ன பொருள் வாங்கினாலும், 5 பர்செண்ட் விலை ஏறிப்போச்சி...!
அப்பாலிக்கா, மின் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்துனீங்க. அதுல மாசத்துக்கு ஐநூறுலேர்ந்து ஐயாயிரம் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆப்பு விழுந்திச்சி....!!
சரி போவுட்டும்ன்னு சொல்லி, இருக்கச்சே... திடீர்னு பஸ் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்திட்டீங்க. அதுனால என்னா ஆச்சுன்னு கேட்டீங்கன்னா.. எங்கூருலேர்ந்து 36 கிமீ தள்ளியுள்ள ஊருல தான் நான் வேல பார்க்குறேன், அதுக்கு பஸ்ஸு டிக்கெட்டு 10 ஓவா அம்பது காசு, நீங்க வெல ஏத்துனதால 20 ஓவாயா மாத்திட்டானுவோ....! அப்பண்டவுனுக்கு 40 ஓவா... ரோசிச்சி பாருங்க நெதத்துக்கு 19 ஓவா எனக்கு தெண்டம். மாசத்துக்கு 500 ரூவா சொளையா போச்சு... ஆத்தா ஒனக்கு ஓட்டுப்போட்ட தெண்டம்... எனக்கு சேமிப்புங்கற ஒரு விஷயத்தையே இல்லாம பண்ணிட்ட தாயி..!!
அதோட வுட்டியா? அடுத்ததா பால் விலைய ஏத்துன... அதுல மாசத்துக்கு மூன்னூறு ஓவா ஆட்டைய போட்டுட்ட...! நீயி ஏத்திப்புட்ட, அதனால நான் டேரக்ட்டா இழந்தது தான் இந்த தொகை எல்லாம். ஆனா, மின்சாரத்துலேர்ந்து போக்குவரத்து வரைக்கும் விலை ஏறுனதால, எல்லா பொருளும் உற்பத்தி அடக்கம் அதிகமாச்சின்னு சொல்லி இன்னும் கூடுதலா ஏத்திப்புட்டானுவோ....!!!
இந்த நேரத்துல தான் அஞ்சு மாசம் முன்னாடி ஒரு தேர்தல் வந்திச்சி. அப்ப உம்மேல கோவமா இருந்த எங்ககிட்ட நீ என்னா சொன்ன? ....போன தபா ஆட்சி செஞ்சவரு நெம்ப தப்புத்தப்பா செஞ்சிட்டாரு, அதெல்லாத்தையும் சரி பண்ணத்தான் வெலவாசிய நான் இம்புட்டு ஏத்த வேண்டீயதா போச்சி. அப்புடி ஏத்துனா தான் இந்த நாட்ட தூக்கி நிப்பாட்ட முடியும், அல்லாங்காட்டி அல்லாரும் கீழ போய்டுவோம்... அது இதுன்னு புலம்புன... அதுக்கப்பறம் வூடா வூட்டுக்கு வந்து 200 ஓவாய உங்காளுங்க கையில திணிச்சிட்டு, இந்த தபா நீங்க மாத்தி ஓட்டு போட்டாலும் மாநிலத்துல எங்கம்மா தான் முதல்வரா தொடருவாங்க, அதோட இப்ப கெலிச்சி செண்ட்ரலுக்கு போனா தான் இந்த பிரச்சினையை எல்லாம் சரி பண்ணி, வெலவாசிய குறைக்க முடியும்... அப்புடி இப்புடின்னெல்லாம் பேசுனாங்க...!!
அப்ப நாங்க கொஞ்சம் ரோசிச்சி பாத்தப்ப, இப்ப ஓட்ட மாத்தி குத்துனாலும், இந்தம்மா தான் இங்க ஆளப்போவுது. இதுக்கு ஓட்டுப்போடாம செண்டரல்ல இதுக்கு பலம் இல்லாம போச்சுன்னா, திரும்பயும் அதயே காரணம் காட்டி வெலைய ஏத்தும்ன்னு முடிவு பண்ணி, உனக்கு எம்பிக்கள் நிறையா கொடுத்தா, அங்க போயி பேசி கீசி, வெலவாசிய குறைப்பியோன்னு ஒரு நப்பாசைல, அப்பவும் உனக்கே ஓட்டப்போட்டோம்....!!!
40க்கு 37 மார்க்கு வாங்கின ஒடனே, உனக்கு மாநில முதல்வர் பதவியை விட உயர்வா மக்கள் முதல்வர்ன்னு ஒரு பதவி கிடைச்சிருக்குறதா, உங்க ஆளுங்களும், டீவியும் சொல்லிக்கிட்டு திரியறாய்ங்க. நீங்க இருந்த எடத்துக்கு ஒரு அட்டு பீஸ நீங்களே வச்சி, உங்க டைரக்‌ஷன் படியே ஆட்சி நடக்குறதா உங்க ஆளுங்களே ஒங்க டீவி பொட்டிய தொறந்தாலே, காது கிழியிற மாதிரி கத்துறாய்ங்க. நடுவால கொஞ்ச நாளு வழக்கமா போற கொடநாட்டுக்கு பதிலா, நீங்க பொறந்த ஊருக்கு பக்கத்துல இருக்குற ஒரு அக்கிரஹாரத்துக்கு போயிட்டு வந்ததா, பெரிய வரவேற்பு எல்லாம் கொடுத்து, அத எல்லா டீவி காரய்ங்களூம் லைவ் ரிலே எல்லாம் போட்டு காமிச்சாய்ங்க!!!
அத்த வுடுங்க..! ஆன இப்ப என்னடான்னா? பழைய குருடி கதவ தெறடிங்கற கதையா..., திரும்பவும் பால் கட்டணத்தை ஏத்திட்டு, அடுத்ததா இப்ப மின் கட்டணத்தையும் ஏத்திட்டீங்க....!! இதுக்கே மாசத்துக்கு இப்ப ஆயிரம் ஓவா எக்ஸ்ட்ரா துண்டு விழுது!! இதுக்கு நடுவுல இப்பத்தான் சில பத்திரிக்கை காரனுங்க, பருப்பு வாங்குறதுல ஊழல், பால் வாங்குறதுல ஊழல், முட்டை வாங்குறதுல ஊழல், எல்லாத்துக்கும் கமிஷன்,.... இதெல்லாம் பத்தாதுன்னு உங்க மினிஸ்டருங்க, ஊருல இருக்குறவன் பொண்டாட்டிய எல்லாம் தள்ளிட்டு போயிடுறான்னு வேற எழுதறாங்க....!!!
இந்த மூனறை வருஷத்துல எங்க பசங்க பல லட்சம் பேரு படிச்சி முடிச்சி, குடும்ப பாரத்தை சுமக்க வந்து நிக்கறாங்க, அவங்களுக்கு எல்லாம் வேலை கொடுக்குற மாதிரி ஒரே ஒரு தொழிற்சாலையை கூட நீங்க ஆரம்பிக்கவே இல்லை. இதுல இருக்குற தொழிற்சாலை எல்லாம் மூடிட்டு வேற மாநிலத்துக்கு ஓடுறான்... ! ஏன் ஓடுறான்? நீங்க ஏன் அவனை எல்லாம் தடுத்து நிப்பாட்ட மாட்டேங்கறீங்கன்னும் புரிய மாட்டேங்குது...!!!
மூனறை வருஷத்துக்கு முன்னாடி அப்பல்லாம் அந்த அப்புறாணி பழைய முதல்வர், துணை முதல்வர் ஆட்சியில வெலவாசியே ஏறாததனால, மாசாமாசம் கொஞ்சம் மிச்சம் புடிச்சி ஒரு அமௌண்ட் சேர்த்து வச்சிருந்தேன். அப்பவே வீடு கட்டலாம்ன்னு நினைச்ச போது, எங்க பக்கத்து வூட்டு மன்னாரு, ஏய்.., முட்டாப்பயலே, இப்ப கட்டாதடா, இந்தம்மா ஆட்சிக்கு வந்துச்சினா எல்லா வெலவாசியையும் இன்னும் குறைக்கப் போறதா சொல்லிக்கிட்டிருக்கு. இது ஆட்சிக்கு வந்தோடுன கட்டினீன்னா... சிமெண்ட்டு, கம்பி, மணலு, ஜல்லி எல்லாம் சல்லிசா கிடைக்கும்டா, இப்ப நீயி கட்டுறத விட மூனு லட்ச ஓவா மிச்சம் புடிக்கலாம்டான்னு சொன்னான்!!!
அவன் பேச்சைக் கேட்டு நானும் வெயிட் பண்ணினேன். இப்ப ஒரு மேஸ்திரிய கூப்பிட்டு, அந்தப் பணத்துக்கு ஆயிரம் சதுர அடியில வீடு கட்டித்தர சொன்னா... அந்தாளு என்னையப் பார்த்து வாயை மூடிக்கிட்டே சிரிச்சிட்டு சொல்றான்.....
......சார் இது என்ன கலைஞர் ஆட்சின்னு நினைச்சீங்களா நீங்க கொடுக்குற பணத்துக்கு ஆயிரம் சதுர அடிக்கு வீடு கட்ட?!! இப்ப நடக்குறது மக்கள் முதல்வர் ஆட்சி சார்... மக்கள் முதல்வர் ஆட்சி...!!! இந்தப் பணத்துக்கு 500 சதுர அடிக்கு வேனா வீடு கட்டித்தர்றேங்கறான்....!!!!
இப்ப சொல்லுங்க மக்கள் முதல்வரே... இதெல்லாம் நியாயமா??? என்னைய மாதிரி அப்புறாணி மக்களை எல்லாம் நம்ப வச்சி கழுத்தறுத்திட்டீங்களே...!! இது நியாயமா??!!!

சொல்லுங்க மக்கள் முதல்வரே... சொல்லுங்க...!!!!!

3 comments:

Anonymous said...

poda paithiakara

'பசி'பரமசிவம் said...

மனதைக் கவரும் வகையில், நளின நடையில், நக்கல் நையாண்டி கலந்து அருமையாக எழுதுகிறீர்கள்.

எப்போதோ உங்களின் பதிவைப் படித்த நினைவு. தொடர்ந்து படிக்காதது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

aravi said...

Nanba naatu nadapathane sollierukar.
Unmai silarai sudum.