Sunday, October 25, 2015

2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கேய்யா போனாங்க?!


என்ன தான் நடக்குது இங்க நம்ம தமிழ்நாட்டுல? ஆட்சின்னு ஒன்னு நடக்குதா இல்லியா?
கடந்த 2011இல் திமுக ஆட்சியை விட்டு விலகும் போது வெளிச்சந்தையில் வெறும் 62 ரூபாய்க்கும், ரேஷனில் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு,..,

இன்றைக்கு வெளிச்சந்தையில் 220 ஐ கடந்து உயரே சென்று கொண்டிருக்கின்றது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் மாநகரங்களில் மட்டும் வெறும் 91 கடைகளில் 110 ரூபாய்க்கு மலிவு விலையில் 1ஆம் தேதி முதல் துவரம் பருப்பு தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் என்கிறார்...!!

ஒரு நாள் கூட தமிழர்களின் உணவு வகைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை தவிர்த்து சமைக்கவே முடியாது. என்கிற நிலையில்....

இவ்வகைப் பொருட்களின் விலை திமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட 200 லிருந்து 300 சதவிகிதம் வரை கூடியிருக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?????

இதை எந்த ஒரு ஊடகமாவது தட்டிக்கேட்டிருக்கின்றதா? அல்லது விவாதப் பொருளாக்கி அரசை உடனடியாக இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் படி நெருக்கடி கொடுத்திருக்கின்றதா?
இந்த ஆட்சி வந்ததில் இருந்து, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் ஜமுக்காளமே விழுந்திருக்கின்றது.

திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் பேருந்து கட்டணத்திற்காக மாதச் செலவு 300 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 660 ரூபாயாக உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் பால் செலவு 600 ரூபாயாக இருந்தால், அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 1500 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் மின் கட்டணம் 600 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில்2000 ஐ கடந்திருக்கின்றது.

இவை அனைத்துமே தமிழகத்தில் உள்ள ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் மாதா மாதம் தவிர்க்க முடியாத அதிகரிக்கப்பட்ட செலவுகள்... அதாவது இப்படியான ஒரு குடும்பத்தின் மாதச் செலவில் கிட்டத்தட்ட 3000 அதாவது மூவாயிரம் ரூபாயை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு கீழ் நடுத்தர குடும்பமும் மொய் வைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் தற்பொழுதையை இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு. அரசின் அலட்சியத்தால் அல்லது ஏதோ ஒரு வகையில் கமிஷன், கிமிஷன் என்ற தவறுகளால் இப்படி திடீரென உயர்ந்திருக்கும் இந்த விலையேற்றம் வரும் தீபாவளிக்கு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும், கூடுதலாக 1500 லிருந்து 10000 ரூபாய் வரை சூடு வைக்க்கும் என்பது சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தவர்களுக்கே புரியும்.

ஆக மொத்தம் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது நாள் வரை ஒவ்வொரு தமிழக குடும்பமும் சராசரியாக மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் என்றால் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாயும், நான்கு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாயும், ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேட்டால் கூடுதலாக செலவு செய்து விட்டது.

இதில் சொந்தமாக இந்த நான்கரை ஆண்டுகளில் வீடு கட்டியவர்களின் நிலை அதைவிட பரிதாபம். சிமெண்ட் மற்றும் மணல் விலை மட்டுமே திமுக ஆட்சியில் இருந்ததை விட 100 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

இதை ஏதோ திமுக ஆதரவாளின் பதிவாக கருதாமல், உழைத்து சம்பாதித்து, பட்ஜெட் போட்டு நேர்மையக வாழும் ஒரு தமிழக குடும்பத் தலைவர் தன் மனைவியுடன் அமைதியாக உட்கார்ந்து கணக்கெழுதிப் பார்த்தாலே தெளிவாகப் புரியும்.
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி என்ற காரணம் தெளிவாகும்...!!

3 comments:

Anonymous said...

what is the cost of the same dal(s) in other state all over india.
Pls let us know in which state it is lesser. thanx in advance.

Anonymous said...

அந்த கருணாநிதி கும்பல் இனிமேல் எழுந்துவர வாய்ப்பே இல்லை. தயாளு என்ற அம்மையாரும் கனிமொழி நாடார் என்ற அம்மையாரும் திகார் செல்லும் நாள் வந்தாச்சு. இசுடாலின் லண்டன் சென்று ,,,கருணாநிதி என்ற நபர் ராசாத்தியுடன் டூயட் பாடவேண்டியதுதான்.

Anonymous said...

It no use talking nonsense here. People of Tamilnadu have always changed the governing parties expecting a better governance. It is very likely to happen in the coming election too.