Friday, November 13, 2015

நமக்கு நாமே நாடகம்

நமக்கு நாமே நாடகத்தின் நேற்றைய சீன்...

ஸ்டாலின் சீன் ஸ்பாட்டுல வந்து நிக்குறாரு. நாளஞ்சு குடிசை வீடு பிய்ந்து போன நிலையில் அங்கே செட் போடப்பட்டிருக்கு, ஐந்தாறு பேர் கிராமத்து கெட்டப்பில் அழுக்கு வேட்டி, சட்டையுடன் நிற்கிறார்கள், கேமெரா லைட்டிங் எல்லாம் ரெடியா? என்று இயக்குனர் சபரீஷ் கேட்கிறார், ரெடி சார்ன்னு குரல் வந்தவுடன், இயக்குனர் கை அசைக்க, வரிசையாக நான்கு டேங்கர்களில் மினரல் வாட்டர் அங்கு கொட்டப்படுகிறது....
இப்பொழுது அந்த இடம் வெள்ளம் சூழ்ந்த குடிசைப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இயக்குனர் ரெடி ஆக்‌ஷன் என்றவுடன்...
அந்த ஐந்தாறு பேரும் ஸ்டாலினிடம் ஏதேதோ பேசுவது போல் பாவனை செய்கிறார்கள்..., அவரும் அதைக் கேட்பது போல பாவனை செய்கிறார். இந்தக் காட்சியை பல்வேறு கோணங்களில் ஸ்டில் மற்றும் மூவி கேமராக்கள் பதிவு செய்கின்றன. எல்லாம் திருப்தியாக முடிந்தவுடன் இயக்குனர் கட் சொல்கிறார்.
இந்தக் காட்சியின் ஒரு படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கின்றீகள். நமக்கு நாமே படத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் காட்சி தான் மேலே நடந்த உண்மைச் சம்பவம்....!!!
கடலூர்ல என்னவோ மழை பேஞ்சுதாமா... அங்க வெள்ளக்காடா ஆயிட்டுதாமா.... மக்கள் வீடுகள் எல்லாம் இடிஞ்சி போயி ரோட்டுல நிக்கிறாங்களாமா... சாப்பாடுக்கே வழி இல்லாம அல்லாடுறாங்களாமா... அமைச்சருங்க, அதிகாரிங்க எல்லாம் அவங்கள வந்து பார்க்கலயாமா.... இவரு மட்டும் போயி பார்த்தாராமா...

யாருட்ட காது குத்துறீங்க...! தமிழ் நாட்டுல பாலாறும், தேனாறும் ஓடுறது எங்களுக்குத் தெரியாதா? தெரியலன்னா போயி ஜெயா டீவி பாருங்கய்யா. தமிழ்நாட்டுல சின்னதா ஒரு தூவானம் போட்டாக் கூட, அமைச்சருங்க ஓடிப்போயி, அங்க இருக்குற மக்களுக்கு அரிசி கொடுக்குறது என்ன? பருப்பு குடுகுறது என்ன? வேட்டி சேலை கொடுக்குறது என்ன? இதெல்லாம் போய் ஜெயா டீவில பாருங்கய்யா.., அதுல தெளிவா காட்டுறாங்க.

அத விட்டுட்டு இப்புடி டிராமா போட்டுக்கிட்டு இருக்கீங்களே... இதெல்லாம் நியாயமா? இதுல ஆயிரம் பேருக்கு காசு கொடுத்து சாலை மறியல் டிராமா வேற போடுறீங்க. அதான் போலீஸ வச்சி அடி அடின்னு அடிச்சி வச்சாங்கள்ல ஆப்பு?!

இனிமே இப்புடி டிராமா கீமா போட்டீங்க... இப்புடித்தான் போலீஸ் லத்தி சார்ஜ் வரும்... ஆமா...!
இப்படிக்கு....

300 வருடங்களாக திமுகவுக்கே வாக்களித்து வந்த பரம்பரையைச் சேர்ந்த இப்பொழுதைய நட்டநடுநிலையாளர்..!!

No comments: