Wednesday, November 18, 2015

மழை பாதிப்புக்கு திமுகவும் காரணமா?!

ஆஹா.... ஒவ்வொரு அதிமுக அடிவருடியும் என்னமா எழுதுறாங்கப்பாஆஆ??!

இந்த ஒரு வார மழையில் வட மாவட்டங்களும், சென்னையும் பாதிக்கப்பட்டதுக்கு, அதிமுக ஆட்சியின் செயல்படாத நிலையும், வடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த பெருமளவிலான முறைகேடுகளும் தான் காரணம் என்பதையும்...,

இந்தத் தவறுகளால் ஏற்பட்ட சேதங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிப்பதையும் கூட இந்த அரசு ஒட்டுமொத்த அமைச்சரவை, அதிகாரிகளை களமிறக்கி (அதாவது இடைத்தேர்தலுக்காக அந்தத் தொகுதிகளில் செய்வது போல) மத்திய பாதுகாப்புப் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் என்று அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வைத்து....

மத்திய அரசு, பெரிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவிகளைப் பெற்று... பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உரிய நிவாரணங்களை செய்து முடித்து நிலைமையை... மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் செய்யத் தவறிய ஒரு அரசினை, அதன் ஆட்சியாளர் மேல் தனக்கிருக்கும் ஏதோவொரு பாசம் அல்லது ஈர்ப்பு அல்லது சிலபல பலன்களைக் குறிவைத்ததன் காரணமாக கண்டித்து, குறைகூறி, விமர்சித்து எழுதாமல், பேசாமல் கை கட்டி, வாய் மூடி மௌன சாட்சியாய் ஊடகங்கள் நின்று கொண்டிருக்கின்ற நிலையில்...

நடுநிலையாளர் முகமூடி அணிந்து அதிமுகவின் விசுவாசிகளாக உலாவரும் அதிமுக அடிவருடிகள் சமூக வலைத்தளங்களில் அதிமுக அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களை அப்பாவி பொது மக்கள் மற்றும் இளைஞர்களிடம் சென்றடையாமல் மடைமாற்றும் முயற்சியாக எழுதுவதையெல்லாம் பார்த்ததும் தான் இந்தப் பதிவின் முதல் பத்திக்கான காரணமாக அமைந்தது...!

ஒருத்தர் எழுதறார்... அமெரிகாவுல எல்லாம் புயல் வந்துச்சின்னா, ஒரு வாரம் கரண்ட் இருக்காதாம்... அப்பக் கூட மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேத்திக்குவாளாம்..., அரசாங்கம் செய்யவில்லை என்று அங்கலாய்க்க மாட்டார்களாம்... தமிழ்நாட்டு மக்களும் அப்படித்தான் இருக்காங்களாம்... ஆனா, எதிர்க்கட்சிகள் தான் அரசியலுக்காக அலப்பறை செய்கின்றார்களாம்...!

இன்னொருத்தர் எழுதறார்... பிரிட்டிஷ் கால வடிகால் வசதிகளைத் தவிற வேற எந்த கழக ஆட்சியிலும் வசதியே செய்யவில்லையாம்... அதனால், இதற்கு அதிமுகவை மட்டும் குற்றம் சொல்லவே முடியாதாம்...!

ஒரு கேணையன் எழுதறான், வெள்ளத்தைப் பார்வையிடச் செல்லும் ஸ்டாலின் நீரில் நனையாத முழங்கால் அளவு ஷூ போட்டுட்டு போறாரம்... அதனால இது அரசியல் நாடகமாம்....

ஏய் பண்ணாட, ஃபோட்டோவுக்கு போஸ் குடுத்து ஷோ காமிக்க மட்டும் போறவன் தாண்டா, நீ சொல்ற மாதிரி எல்லாம் போவான். இவரு ஆளுங்கள கூட்டிக்கிட்டு, ஒவ்வொரு இடமா போயி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போகும் போது, அதுக்கு ஏத்த மாதிரி இலகுவா வேலை செய்யற மாதிரியான ஆடைகள், உபகரணங்களோட போனாத்தான் வேலை செய்ய முடியும். மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போனா இப்படித்தான் போகனும், வேன்ல போறதுக்கே தண்ணி நிக்காத இடத்துக்குத்தான் போவேன்னு அடம்பிடிச்ச உன் ஆத்தா மாதிரியா போவாங்க... லூஸு பயலே...!

சாக்கடைய சுத்தம் பண்ண போறவன் சாராயம் குடிக்கிறது, அவன் ஜாலிக்காக இல்லடா. அந்த நாற்றம் அவனுக்குத் தெரியாம இருக்கனும், அருவறுப்பு அவனை அண்டாம இருக்கணும்ங்கறதுக்காக தாண்டா.

இன்னொருத்தன் எழுதறான்.... மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூனே நாள்ல பேய்ஞ்சிடிச்சாம்...! அதுனால எந்த ஆட்சியா இருந்தாலும் எதுவும் செய்ய முடியாதாம்.

இத மாதிரி திரும்பத் திரும்ப நீங்க சொன்னா மக்களை நம்ப வைத்து விடலாம் என்ற எண்ணமா? தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பரை மையப்படுத்தி மூன்று மாதங்களுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இயற்கை விதி தான். அதில் குறிப்பாக ஒரு பத்து நாட்கள், ஒன்றோ இரண்டோ அல்லது மூன்று புயல் சின்னங்களுக்கான அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், அந்த புயல் சின்னம் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆந்திரா, ஒடிசா என்று சென்று கரையைக் கடப்பதும், நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழகத்தை செம்மையாக பதம் பார்ப்பதும் என்பது நாம் காலம் காலமாக கண்டு அனுபவித்து வரும் ஒரு நிகழ்வு தான்.

புயல் காற்று அல்லது சுனாமி போன்ற பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அதற்கு நிவாரணம் தான் செய்ய முடியும் என்றாலும்...

எப்படிப் பட்ட கன மழை பெய்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கையோடு இருந்தால் நிச்சயம் உயிர்ச் சேதங்களை முற்றிலும் தவிர்க்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்தலாம். இதற்கெல்லாம் மேலாக அந்த மழை நீரை நல்ல விதமாக பாசனத்திற்கும், குடிநீருக்குமாக அடுத்து வரும் கோடைக்காலத்திற்காக பயன்படுத்தவும் முடியும்

இதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, காவிரி மற்றும் கொள்ளிடம் நீர்ப்பாசன பகுதிகளில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இருக்கின்றவற்றை சுத்தமாக இந்த அரசு தூர் வாறியிருக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளையும், குளங்களையும், வடிகால் வாய்க்கால்களையும் சுத்தமாக தூர்வாறி, வடிகால்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் மற்றும் பழுதுகளை மாநகர நிர்வாகம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எப்பொழுதுமே இது போன்ற பேரழிவுகள் அதிமுக ஆட்சி நடக்கின்ற போது மட்டுமே ஏற்படுகின்றனவே? என்ற கேள்வியை இந்த நடுநிலை நாதாறிகள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிமுக அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதில்லை என்பது தான் இதற்கான காரணம். அதை மறைத்து விட்டு பொத்தாம் பொதுவாக இந்த அவலங்களுக்கு அதிமுகவோடு சேர்த்து திமுக ஆட்சியையும் குற்றம் சொல்வது அயோக்கியதனத்தின் உச்சம்.

மேலும் ஒரு அப்பாடக்கர் சொல்கிறார், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், உறைவிடப் பள்ளிகளும் தான் பெரும்பாலான ஏரிகளை ஆக்கிரமித்துள்ளதாம், அதனால் தான் இந்த மழையினாலான பாதிப்பாம். அந்த கல்வி நிலையங்கள் எல்லாம் திமுக அதிமுகவினரின் ஊழல் பணத்தில் வந்ததாம், அதிலும் கடந்த 15 ஆண்டுகளில் வந்தது தானாம்...!!

அட லூஸு பன்னாட, தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பொற்காலமே எம் ஜி ஆர் ஆட்சி தான். அன்றைக்கு துவங்கப்பட்ட கல்லூரிகள் தான் இன்றைக்கு பல்கலைக் கழகங்களாக உருவெடுத்து இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களை கபளீகரம் செய்து நிற்கின்றன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எழுதுகின்றார்கள்.

சரி அனைத்துக் கல்லூரிகளையும் வேண்டாம், திமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டு கட்டப்பட்ட கல்லூரிகளில் இது போன்ற ஏரி, குளம் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா அதை உடனடியாக கையகப்படுத்திவிடலாமே?! ஆட்சி ஜெயலலிதா கைகளில் தானே இருக்கிறது? இந்தக் கோரிக்கையை முன்வைத்து இந்த கூமுட்டைகள் எழுதலாம் அல்லது போராட்டம் கூட நடத்தலாமே?!

1996 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், காவிரி மற்றும் அதன் முப்பதுக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாய்க்கால்களை மூன்று மாதகாலத்தில், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் வேலைக்கு உணவு திட்டங்களின் மூலம் தூர் வாறி, நவீன ராஜராஜ சோழன் என்று மக்களும் ஊடகங்களும் அவரை புகழ்ந்த உன்னதமான நிலையை அடைந்தார்.

ஏன்? இன்றைக்கு சென்னையில் இவ்வளவு பெரிய அழிவிலும் மக்கள் ஓரளவிற்கு போக்குவரத்தை தொடர முடிகின்றது என்றால், திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட 42 தரமான பாலங்கள் தான் காரணம் என்பதை சென்னையில் முப்பாதாண்டுகளாக வசிக்கின்ற எந்த உண்மையான நடுநிலையாளராலாவது மறுக்க முடியுமா?

மக்கள் நலனுக்கான இயக்கம் நடுத்துறோம்ன்னு சொல்ற ஒரு கருங்காலி ஒன்று... அரசை இந்த நேரத்தில் குறை சொல்லக் கூடாதுன்னு, பொத்தாம் பொதுவாகப் பேசி..., அதிமுக ஜெயலலிதா அரசினை மக்கள் கோபத்திலிருந்து விலக்கி வைக்கும் மாமா வேலையை தன் அளவிற்கு செய்து ராஜ விசுவாசத்தை காண்பித்திருக்கின்றது.

ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், திமுகவும், அதன் தலைவரும், வருங்காலத் தலைவரும், மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் தான், களத்தில் இறங்கி நின்று மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி, நிவாரண உதவிகளை உடனுக்குடன் தேவைப் படுவோருக்கு, தேவை அறிந்து வழங்கி, அரசுக்கும் ஒத்துழைப்பு தருவதாக அறிவித்து...., செம்மையாக சேவைபுரிந்து வருகின்றார்கள்.

இதை உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். அறிவுஜீவிகளாக காட்டிக்கொண்டு, நடுநிலை போன்று நடித்துக்கொண்டு;;;, வெளிநாடுகளிலும், ஏஸி ரூமில் அமர்ந்து காசுக்காக எழுதும் கட்டுரையாளர்களாலும்..., நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்களால் வீசப்படும் கணைகளை திமுக பக்கமும் திருப்பி விடச்செய்யும் முயற்சி ஒருக்காலும் பலிக்காது.


1 comment:

Anonymous said...

briyabi