Thursday, August 13, 2015

மாற்றம்- அன்புமணி- அதிமுக அடிமை

திமுகவினர் சார்பாக நடத்தப்படும் சாராய ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் 50 சதவிகிதம் மதுவிலக்கு அமலுக்கு வந்துவிடும் என்ற... ஒரு கடைந்தெடுத்த முட்டாள்தனமான வாதம் என்கிற பெயரில் வாந்தி எடுத்திருக்கின்றார் அன்புமணி.

அந்த வாந்தியை ஆரிய சார்பு பத்திரிகைகளும், ஊடகங்களும் பிரசுரித்தும், விவாதப் பொருளாக்கியும், மக்கள் மன்றத்தில் இதை நம்ப வைக்கும் கோயபல்ஸ் வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றன.

திமுகவின் தலைவரும், அக் கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியினராலும், மக்களாலும், ஏன்? இந்த வாந்தியை எடுத்திருக்கும் அன்புமணியாலுமே நம்பப்படுகின்ற மு.க.ஸ்டாலின் அவர்களும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்குத் தான் என்ற பட்டவர்த்தனமாக அறிவித்தும், இந்த ஆட்சியிலேயே மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக் கோரி, கடந்த 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில், லட்சக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் திரட்டி பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, மக்கள் மன்றத்தில் இது பற்றிய தங்கள் கட்சியின் நிலைப்பாட்டினை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்ற நிலையில்....

மதுவிலக்கை உண்மையாகவே விரும்பக்கூடிய ஒரு நியாயமான அரசியல் கட்சியின் தலைவர் மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போட்டு, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டி கைது செய்யும் நடப்பு அதிமுக அரசினைக் கண்டித்து அறிக்கையோ, போராட்டமோ நடத்துவது தான் ஒரு இயல்பான செயலாக இருக்க முடியும்.

அதற்கும் மேலாக, ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா நடத்துகின்ற மிடாஸ் மற்றும் இன்னபிற ஆலைகளில் இருந்தே 80 சதவிகித சாராயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்கின்ற நிலையில், அதைக் கண்டிக்காமல், திமுகவினர் சார்பாக நடத்தப்படும் ஆலைகளை மட்டும் மூட வேண்டும் என்றும், அதனால் தான் தமிழகத்தில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது போலவும், அதிமுகவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டோடு அன்புமணி அறிக்கைக்கள் கொடுத்துக்கொண்டிருப்பதும், அதை அதிமுக ஆதரவு ஊடகங்கள் பெரிய அளவில் முன்னெடுப்பதும்....
இதையெல்லாம் தமிழக மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்று நம்பித்தான் இப்படிச் செய்கின்றார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது..! திமுகவுக்கு எதிராக எதைச் சொன்னாலும் நம்புகின்ற அளவிற்கு தமிழக மக்களின் மனதை கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இவர்கள் திட்டமிட்டு மூளைச்சலவை செய்து வைத்திருப்பதன் உச்சக்கட்ட விஷ(ம) பிரச்சாரமாகவே இதை புத்தியுள்ள உண்மையான நடுநிலையாளர்கள் அணுக வேண்டியிருக்கின்றது..!
தமிழர்களை மிக மோசமாக மூளைச்சலவை செய்து இப்படி ஒரு அப்பட்டமான முட்டாள்தனமான வாதத்தைக் கூட நம்ப வைத்து விடலாம் என்ற அந்த ஆரிய மற்றும் ஆரிய அடிவருடிக் கூட்டங்களின் எண்ணம் ஒரு வேளை வெற்றிபெறுமாயின்... அதாவது தமிழர்கள் இதையும் நம்பி, திமுகவை குறை கூறுவார்களாயின்... அதற்காக வருத்தப்பட வேண்டியது நிச்சயமாக திமுகவாக இருக்க முடியாது.
அப்படியொரு சூழ்நிலை உருவாகும் நிலையில், திமுக அடுத்த தேர்தலுக்கான தனது வெற்றி/தோல்வி அரசியலை எல்லாம் இரண்டாம்பட்சமாக வைத்துவிட்டு, மீண்டுமொரு சமூக மாற்றத்திற்கான, தமிழர்களிடம் மீண்டும் பகுத்தறிவை மீட்டெடுக்கும் முனைப்பிலான, பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து, திமுக என்பது வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல, அது ஒரு சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் என்பதை மக்களிடம்... இல்லை இல்லை, இந்த உலகத்திற்கு இன்னொரு முறை பரைசாற்ற வேண்டும்.

1 comment:

vijayan said...

சாராய ஆலைகளை மூடு என்றாலே தி.மு.க.தம்பி சண்டப்ரசண்டன் ஆகிறானே அதன் ரகசியம் என்ன?