Thursday, July 14, 2011

"என்னய வச்சி காமடி கீமடி பண்ணலயே"...? இப்படிக்கு ராமதாஸ்.

2011 ஆம் வருடம், பிப்ரவரி 4  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


'போகணும்னு தோன்றது... எங்க போறதுன்னு தோனலயே...' இப்படித்தான் இருக்கு நம்ம பாமக ராமதாஸோட நிலைமை. ஒரு ஆறு மாசமா திமுக வுக்கு நூல் நூலா விட்டு, ஒரு ஃபார்ம் -ல இருந்த திமுக - பாமக கூட்டணிய 'வாயில வாஸ்த்து சரியில்லாம'! பேசி தனக்குத் தானே ஆப்படிச்சிகிட்டார் நம்ம ராமதாஸ்.

அப்படி என்ன சொல்லிட்டேன், கலைஞரோட சொந்த கருத்து அது-ன்னு சொன்னது ஒரு தப்பா? எனக்கு அப்படி கலைஞர்ட்ட பேச உரிமையில்லையா? அப்டின்னு இந்தியன் பட கமல்ஹாசன் ரேஞ்சுக்கு முந்தா நாள் பூரா ராமு ஃபீல் வுட, இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே என்று காடுவெட்டியார், கவுண்டமணி ஸ்டைலுல சுத்திமுத்தி பார்க்க ஆரம்பிச்சிட்டார்.

இதுக்கு மத்தில கோ.க. மணியும், வேல்முருகனும், ஐயா.. இதுக்கு மேல வேண்டாம்.., முடியல... தாங்காது!......அவ்வ்வ்வ்... என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்ன இருக்காதா, ஆறு மாசமா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க! தூதுவர்கள் ன்னுட்டு திமுக பக்கம் போனாலே முதல்ல இந்த துரைமுருகன் பிடிச்சிப்பார். அவரு நக்கல் இருக்கே... வேண்டாம் அதுக்கு காதுல விஷத்த ஊத்திகிட்டு செத்துடலாம்! அவரு எங்கள முடிச்சிட்டு அப்படியே ஆற்காடு ரூமுக்கு அனுப்பி வைப்பார். அவரு மாதிரியெல்லாம் இவரு நக்கல் அடிக்க மாட்டாரு, ரொம்ப தன்மையா பேசுவாரு.... பேசிட்டு கெலம்பும் போது தான் அந்த சந்தேகத்த கேப்பாரு.. 'ஏம்பா இப்ப நாம பேசுனது இரண்டாயிரத்து பதினாறுக்கா இல்ல இருவத்தியொன்னுக்கா?' ன்னு. யோவ் இப்புடி வர்றவனுக்கெல்லாம் டன்னு டன்னா ஷாக் கொடுத்துகிட்டிருந்தா பின்ன எப்படிய்யா நாட்டுல கரண்ட் இருக்கும்.. னு நெனச்சிகிட்டு இருக்கும் போதே ஸ்டாலின பாத்து ஒரு வார்த்த சொல்லிட்டு போயிடுங்கம்பாரு.

அவரு ரொம்ப நல்லவரு தான். ஒக்கார சொல்வாரு, காப்பி வரவழிச்சி குடிக்க சொல்வாரு, ஆனா பேச மாட்டாரு! அவ்ளோ பிஸி, ஐ.ஏ.எஸ் ஆபீஸர்ஸ் வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க, நடு நடுவுல வெள்ளகாரங்க கூட்டமா வந்து எங்கள ஓரமா நிப்பாட்டி வச்சிட்டு பேசிட்டு போவாங்க. அவங்க போனவுடனே நிக்க வச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு எங்கள ஒக்கார சொல்வாரு, தங்கமான மனுஷன். இப்புடியே ஒரு அரை நாள் காலியாகிடும், ஆனா நல்லா பொழுது போவும். அப்புறம் சாப்பாட்டு கேரியர தூக்கிகிட்டு துர்காம்மா வந்துடுவாங்க. சாப்பாட்டு நேரத்துல வந்துட்டிங்க, கண்டிப்பா சாப்டுட்டுதான் போகணும்னு ரெண்டு பேருமே சொல்வாங்க. இல்ல... கூட்டணி முடிவாகாம எப்படி கைய நனைக்கிறதுன்னு மணி ஒரு மாதிரியா விஷயத்துக்கு வர, அதுனால என்ன சாப்பாட்டுல கூட்டு இருக்கு, ஆனியன் பச்சடி இருக்கு (வெளில போனா கிடைக்காது), நல்லா சாப்புடுங்க, புடிச்சிருந்தா திரும்பவும் வாங்க சாப்பிடலாம், இல்லன்னா ஒங்க விருப்பம்னு சொல்வார்.

ஒரு வழியா சாப்ட்டு முடிச்சி வந்துடுவோம். இதே போல ஒரு ஆறு மாசமா போயிட்டு போயிட்டு வந்து, இவங்க ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்கன்னு மனசு இறங்கி, கலைஞர் டில்லில வச்சி நம்ம கூட்டணி பத்தி பேட்டி கொடுத்தா.., நாங்க ஆனந்தத்துல கண்ணுல ஜலம் வச்சிட்டிருக்கும் போதே, நீங்க பீத்த லாத்தலா இப்டி ஒரு பேட்டி குடுத்துடீங்களே... இது நியாயமான்னு, ரெண்டு பேரும் கோரஸா அழ ஆரம்பிச்சிட்டாங்க.

இப்ப வீரபாண்டியாருட்ட வேற தூது போக சொல்றிங்க. துரைமுருகனாவது வெறும் நக்கல் தான் அடிப்பார், ஆனா இவரு ஆளயே அடிச்சாலும் அடிச்சிடுவார்..! வேணாம்... வலிக்குது... அழுதுடுவோம்னு....  ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டிருக்கப்போ, ஐயா, வேண்டாம்யா, இவங்கள பாக்கவே பாவமா இருக்குய்யா என்று, ஏ.கே. மூர்த்தி சொல்ல...  'நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவர்கள்' என்று, ராமதாஸ் அவரை அன்போடு பார்க்க, மூர்த்தி ஆடிப்போய் தள்ளாட, பக்கத்தில் நின்றிருந்த முன்னால் இஆப வேலு அவரை அப்படியே தாங்கிக் கொண்டார்.

இதுவரைக்கும் காமெடியாக சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இனிமேல் சீரியஸ் டிராக்கில் செல்ல வேண்டிய நிலை.

அந்த நேரம் பார்த்து செல்லும் கையுமாக அங்கு வந்து சேர்ந்த அன்புமணி, ராமதாஸைப் பார்த்து ஏதோ கோபமாக பேச எத்தனித்து, பிறகு எல்லோரையும் ஒருமுறை பார்த்துட்டு, கொஞ்சம் உள்ள வாங்க தனியா பேசணும்னு சொல்ல, நான் வேற, கட்சி வேற இல்ல, அதுனால எதுவா இருந்தாலும் இங்கயே பேசு என்று பம்ம... இது குடும்ப பிரச்சினை புள்ள கூப்புடுறான்ல கொஞ்சம் உள்ள வந்துட்டு போங்க என்று சரஸ்வதி அம்மாளின் குரல் உள்ளிருந்து வர, எழுந்து சட்டையை இழுத்து விட்டு சரி செய்து கொண்டு ...தோ வந்துடறேன்னுட்டு உள்ளே போனார். பின்னாலேயே அன்புமணியும்  உள்ளே போக, இங்கிருப்பவர்களுக்கெல்லாம், பட்ட காயத்திற்கு மருந்து போட்டது போன்ற ஒரு குளுமை மனதுக்குள் குடி கொண்டது...!
  

No comments: