Wednesday, July 2, 2014

மலிவு விலையில்....தமிழகம்

ஒரு அரசு என்பது என்ன? 
ஆட்சி என்பது என்ன??
ஆட்சியாளர் என்பவரின் கடமைகள் என்ன???

ஒரு ஆட்சியாளர் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு அரசவையைக் கட்டியமைத்து ஆட்சி செய்வதன் பிரதான கடமைகள்....

முதலில் அந்த அரசாங்கத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு என்றால் உடனே, எதிரிகள் ஏதோ கத்தியை எடுத்துக் குத்துவதும், அதை இந்த ஆட்சியாளர் பறந்து பறந்து சென்று ஃபைட் பண்ணி காப்பதும் என்பது கிடையாது....

மாறாக, குடிமக்களின் பணம், பொருள் உட்பட அவர்களது அடிப்படை தேவைகளான நல்ல குடிநீர், தரமான உணவு, தங்குவதற்கு அனைத்து காலநிலையையும் சமாளிக்கக் கூடிய வீடு, இவை அனைத்தையும் அந்த குடிமகன் தானே உருவாக்கிக் கொள்ளக் கூடிய வகையில் 


##   அவனுக்கான நியாயமான ஊதியத்தில் வேலை வாய்ப்பு, 
##   அதற்கு ஆதாரமான கல்வி, 
##   போக்குவரத்திற்கு தேவையான சாலை வசதிகள், 
##   அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 
##   விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை உருவாக்குவது, 
##   இருப்பதைப் பேணிப் பாதுகாப்பது, 
##   அதிக வேலை வாய்ப்பளிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுவர பாடுபடுவது, 
##   அவைகளுக்குத் தேவையான மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும்                                உருவாக்கித் தருவது, 
##   சிறு, குறு தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு மக்களை ஊக்கப்படுத்தி 
##   அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி... 
##   லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்த வழி வகுப்பது...., 
##   குடிமக்களுக்கான சுகாதார சீர்கேடு மற்றும் நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு                     அரசே முழு ஒத்துழைப்பு நல்கி தரமான மருத்துவ 
                    சேவையை  உறுதிப்படுத்துவது.....
இப்படியாக ஒரு அரசின் கடமைகள் நீண்டு கொண்டிருக்க....

நம் தமிழகத்தில் ஒரு ஆட்சியாளர் இதையெல்லாம் விடுத்து, ஜனதா டைப்பில் மலிவு விலை.... உணவகங்கள், குடி தண்ணீர், உப்பு, மருந்தகம்... லொட்டு லொசுக்குன்னு.....தொடர்ந்து மூளையைக் கசக்கி, இதே வழியில் சென்று ஒரு சிறு, குறு தொழிற்சாலையாகவே இந்த தமிழக அரசு இயந்திரத்தை மாற்றிவிடும் முடிவோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

தமிழகம் இதுவரையிலும் கண்டிராத அளவிற்கான ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு இலவசங்களை வாரி இறைத்ததன் காரணமாக மின் உற்பத்தி உள்ளிட்ட வேறு எந்த உட்கட்டமைப்பு மற்றும் தொலை நோக்குத் திட்டங்களுக்கும் பணம் இல்லாத நிலையில் அதையெல்லாம் மக்களிடமிருந்து மறைப்பதற்காக இன்னும் 20 மாதங்களுக்கு தாக்குப் பிடித்து ஓட்டினால் அடுத்த தேர்தலிலும் வெற்றிடலாம் என்ற எண்ணத்தில்....

இந்த மாதிரியான மலிவு விலை சமாச்சாரங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தமிழக அரசினை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. போற போக்கைப் பார்த்தால், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்குப் பதிலாக எம் பி ஏ மாணவர்களை அரசுப் பணிக்கு அமர்த்தி தமிழக அரசை வியாபார ஸ்தாபனமாக மாற்றி ஒட்டுமொத்த தமிழக தமிழர்களின் எதிர்காலத்திற்குப் பக்கத்தில் மிகப் பெரிய கேள்விக் குறியையும், அபாயக் குறியையும் அவர் வரைந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

தமிழகத்தின் படித்த இளைஞர்களும், உண்மையான நடுநிலையாளர்களும், சுற்றி வளைத்து அரசின் இந்த மாதிரியான செயல்பாடுகளை ஊக்கப்படுத்திக் கொண்டிராமல், தொலைநோக்கில் இதன் பாதகங்களை உணர்ந்து அரசின் இந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக களம் காண வேண்டும். 

இந்த ஆட்சியில் இதுவரையிலும் எந்த தொலைநோக்குத் திட்டங்களும், தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி திட்டங்களும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை என்பதையும் பொது மக்கள் உணர்ந்து... இப்படியான செயலற்ற அரசின் தன்மையானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை பொட்டல் காடாக மாற்றி, நம்மவர்களை வேலை வாய்ப்பிற்காக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் கூலி வேலை செய்ய மீண்டும் துரத்துகின்ற சூழ்நிலை உருவாகிவிடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆகவே மக்களே....

சிந்திப்பீர்... செயல்படுவீர்....

இனி... தமிழகத்திற்கு... வரப்போகும் ஆட்சி....

 தன்னிகரில்லா ஆட்சியாக....அமைய செயல்படுவோம்...!!!

No comments: