Monday, July 28, 2014

அழிந்துவரும் அரிசிஆலை

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் இணைந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தவிர்த்த பிரதான தொழில் என்றால் அது அரிசி ஆலைகள் தான். இதை நம்பி பல்லாயிரக் கணக்கானோர் வேலை செய்து வந்த நிலையில்....


கடந்த மூன்றாண்டுகளாக இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பொய்துப் போயிருக்கும் குறுவை சாகுபடியும், மாநில அரசின் குறைவான நெல் கொள்முதலும் தான்.

இதைத் தவிர, குவிண்ட்டாலுக்கு 21 ரூபாய் மின் கட்டணம் ஆகின்ற நிலையில் அரசு தரும் கூலி வெறும் 20 ரூபாய் தான். அரவையில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் தவிட்டை விற்றுத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த வருடம் குறுவை முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாலும், மோடி கா சர்க்காரின் நெல் கொள்முதல் மானிய கட்டுப்பாட்டினை எதிர்க்காமல் ஜெயலலிதா பதுங்கியிருப்பதாலும், மன்னிக்கவும் பம்மிக் கொண்டிருப்பதாலும், அந்த விலையை மாநில அரசே விவசாயிகளுக்கு வழங்கும் என்ற எந்த உத்திரவாதத்தையும் ஜெயலலிதா வழங்காததாலும், இனி அரசின் நெல் கொள்முதல் என்பது கிட்டத்தட்ட கலைஞர் ஆட்சியில் இருந்ததில் 20 சதவிகித அளவிற்கே இருக்கும் என்பதாலும்.....

...இதற்கு மேல் நட்டத்தில் ஆலையை ஓட்ட முடியாத நிலையில் பெரும்பாலான அரிசி ஆலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்திருக்கின்றனர்....!!

ஒரு மோசமான ஆட்சி, திறனற்ற நிர்வாகம் என்பதற்கு இது போன்ற விடயங்கள் தான் சான்று!!!

முதல்வரின் வெற்று அறிக்கைகள், காகித திட்டங்கள், மலிவு விலை சமாச்சாரங்கள் எல்லாம் மிக மோசமான பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்றி விடாது. இதெல்லாமே கனவில் சாப்பிடும் பாயாசங்கள் தான்!!

No comments: