Saturday, December 9, 2017

இவர் அரசியல் சாணக்கியரா..?!



இயற்கையிலேயே தந்தையாகிவிட்ட...
இவரது தலைவரிடமிருந்து....
அவரது தமிழை இவர் வரமாக கேட்டிடவில்லை...
அவரது இலக்கிய ஆற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது அபரிமிதமான பேச்சாற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது கவிதைகள் ஆக்கும் திறனை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது எழுத்தாற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது திரைக்கதை அமைத்து, வசனங்கள் ஆக்கும் திறனையும் கூட இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
வேறு என்ன தான் வேண்டும் தனையனே...
இல்லை இல்லை... இந்த பேரியக்கத்தின் அடுத்த தலைவனாக பொறுப்பேற்கவிருக்கும் என் ஆகச் சிறந்த சீடனே....
கேள்... என்ன வேண்டும் கேள்... உனக்கு ஏதாவது வரம் தரவேண்டிய கடமை எனக்கிருக்கிறது... கேள்....
என்று... தன் தலைவன் கேட்டதற்கு இவர் இப்படித்தான் வரம் கேட்டிருப்பார் போலும்...!
அந்த இயற்கை என்னிடம், இவர் உனக்கு தந்தையாக இருக்க வேண்டுமா? அல்லது தலைவனாக இருக்க வேண்டுமா? இரண்டில் ஒன்றினை மட்டுமே அருள முடியும் என்று கேட்டால்...
நீங்கள் என் தலைவனாக இருக்கும் பேரினை மட்டுமே கேட்டிருப்பேன்...!
காலத்தின் நீட்சியில் இயற்கையும் எனக்கு அந்த வரத்தினை நல்கி விட்டதாகவே கருதுகிறேன்...!
இப்பொழுது நீங்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விக்கு... நான் ஒரே ஒரு வரத்தினை மட்டுமே உங்களிடமிருந்து கேட்பேன்... அது எதுவாயின்...
தாங்கள் மேலே பட்டியலிட்டுள்ள உங்களின் ஆற்றல்கள் அனைத்தினையும் ஒருங்கே திரட்டி... அதை தங்களிடமிருக்கும் இன்னுமொரு ஆற்றலான அரசியல் சாணக்கியத்தனம் என்ற ஒன்றினோடு இணைத்துத் தாருங்கள்.. என்பேன்....!
அப்படியே ஆகட்டும்... என்று தான் அந்த தலைவரும் தந்துவிட்டார் போலிருக்கிறது...!
உண்மை தான் இந்த நேரத்தில் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியலில் மட்டுமல்ல... அகில இந்திய அளவிலேயே ஆகச் சிறந்த ராஜதந்திரியாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அது மிகையல்ல்ல. இதை வெறும் புகழ் வார்த்தைகளுக்காகச் சொல்லவில்லை...!
இரண்டே இரண்டு விஷயங்கள் போதும், இதை நிரூபிக்க...!
இந்தியாவில் எந்த மாநிலக் கட்சியானாலும், பிராந்தியக் கட்சியானாலும் சரி... தேசிய அளவில் இரண்டில் ஒரு தேசியக் கட்சியின் நட்போடு தான் செயல்பட்டாக வேண்டும், என்ற நிலையில்... அவர்களை நாடியே அல்லது சார்ந்தே தான் இருக்க வேண்டும் என்ற நிலையில்...
இத்தனைக் காலம், கூட்டணியிலும், கூட்டணி ஆட்சியிலும் இருந்த காலத்தில் கூட வந்து சந்திக்காத ராகுல் காந்தியும்,
அரசியலில் நேருக்கு நேர் எதிர்நிலை எடுத்து மிகப் பலமாக எதிர்ப்பரசியல் செய்து வரும் நிலையில்... பிரதமர் #மோடியும்...
கிட்டத்தட்ட சம காலத்தில்.... தங்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தை வந்து சந்தித்து ஆசி பெற வைக்கும் அளவிற்கு காய்களை நகர்த்தியிருக்கின்றார்... அல்லது... அந்த அளவிற்கு தனது மக்கள் செல்வாக்கினை உயர்த்தி வைத்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்..?!
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக போக்குக் காட்டிக்கொண்டு, திமுக ஆட்சிக்கு வரவிடாமல், மீண்டும் மீண்டும் ஜெயலலிதா அரியணை ஏற ராஜபாட்டை அமைப்பதையே தங்கள் கடமையாக செய்து வந்து கொண்டிருந்த, தமிழகத்தின் சிறு குறு கட்சிகள் அனைத்தினையும்.....
போட்டி போட்டுக்கொண்டு வந்து திமுகழகத்திற்கு ஆதரவளிக்கச் செய்த அந்த ராஜதந்திரம்... கிட்டத்தட்ட யாராலுமே கணிக்க முடியாத ஒன்று...!
அவர் எங்கு பேசினார்? யாரிடம் பேசினார்? எப்படிப் பேசினார்? யார் மூலமாகப் பேசினார்? இப்படி எந்த கந்தாயமுமே புரியாமல், பிடிபடாமல் அத்தனைபேரும் வரிசை கட்டி வந்து திமுகழகத்திற்கு ஆதரவளித்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள்...!


எந்த ஒரு நேர்மையான அரசியல் விமர்சகரும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்சர்யத்துடன் யோசித்துக்கொண்டு தான் இருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகியிருப்பினும், இவ்வளவு பெரிய அரசியல் மூவ் என்பது, ஆகச் சிறந்த அரசியல் சாணக்கியர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை அவர்களால் மறுக்க இயலாது.
ஒருவேளை அவர்கள் தளபதி மு.க. ஸ்ஸ்டாலின் அவர்களுடைய இந்த அற்புதமான அரசியல் நகர்வை பாராட்டாமல் கடந்து செல்வார்களேயானால்... அது நிச்சயமாக ஏதோவொரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது எதாவது ஒரு பயத்தின் காரணமாகவோ இருக்கலாமே தவிர வேறொன்றுமில்லை..!
ஆனால் ஒவ்வொரு திமுகழக தொண்டனும், தங்களுக்கு ஆகச் சிறந்த தலைவன் ஒருவன் கிடைத்து விட்டான் என்று ஆனந்தக் கூத்தாட வேண்டிய தருணம் இது...!
வாழ்த்துக்கள் தளபதியாரே....!!


No comments: