Monday, January 14, 2019

திமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா?!


இன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரும்.....

திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி.....

என்று ஒரு கான்செப்ட்டை பலமாக முன்வைக்கின்றனர்.
இதை திமுக மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்து பார்ப்பனர்களை விட.... ஆர் எஸ் எஸ்ஸை விட.... பாஜகவினரை விட.... சங்கிகளை விட.... சங்கிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட பார்ப்பனரல்லாத பக்தாஸை விட....

ஒருபடி மேலே சிந்தித்து செயல்பட்டு முறியடிக்க வேண்டும்..!
ஏனெனில் வாக்கு வங்கி என்பது ஆதரவுக்கானது..! எதிர்ப்பு வாக்கு வங்கி என்ற பதம் முதன்முறையாக இப்பொழுது உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த... அசைக்க முடியாத ஆதரவு வாக்கு வங்கி இருக்கும். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை என்பது மட்டுமே உருவாகும். அந்த அலையானது பொதுவாக அந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடும்..!

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 91 தேர்தலில், திமுக சொல்லித்தான் விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்று மக்களை நம்ப வைத்து... திமுகவுக்கு எதிரான அலையை உருவாக்கி முதன் முறையாக பார்ப்பன லாபி அதிமுகவின் பார்ப்பன முகமாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைத்தது..!

ஆனால் இந்த தேர்தலில் அப்படியான திமுக எதிர்ப்பு அலை என்பது எதுவுமே இல்லாத நிலையில்.....

ஆளும் அதிமுகவிற்கும், மோடிக்கும் எதிரான அலை மட்டுமே மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருக்கின்ற நிலையில்....

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திமுக எதிப்பு வாக்கு வங்கி என்ற ஒரு இல்லாத கான்செப்ட்டை ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் முன்னெடுக்கின்றது..!

திமுகவின் எதிர்ப்பு வாக்கு வங்கி என்பது வெறும் மூன்று சதவிகிதமே உள்ள பார்ப்பனர் வாக்குகள் மட்டுமே..! அந்த எதிர்ப்பு வாக்கு வங்கியை மார்பில் தாங்கிய எதிரி ஆயுதத்தின் வடுக்கலாகவே திமுக சந்தோஷமாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும்..!

ஆனால் பார்ப்பனரல்லாதோரை திமுகவின் எதிர் நிலைப்பாட்டில் தொடர்ந்து நிறுத்தி... அதை நிரந்தர திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியாக நிறுவ முனையும் இந்த சதியினை திமுக முளையிலேயே கிள்ளி எரிய திமுகவும் மிகப் பலமாக தனது பிரச்சாரத்தினை முன்னெடுத்து விட்டதாகவே தெரிகிறது..!

இணையதள திமுகவினரும்.....  திமுக ஐடி விங்கும்.....கலைஞர் டீவியும்.... ஒட்டுமொத்த இணையதளத்தையும்.... அதாவது சமூக வலைத்தளங்களையும் தங்கள் கைகளில் கொண்டு வந்து, இது மாதிரியான அவதூறுகளுக்கு உடனுக்குடன் ஆதாரத்துடன் மறுத்து பல்வேறு வகைகளில் பரப்புரை செய்து வருகின்றனர்..!

திமுக தலைவரும், இரண்டாம் கட்ட தலைவர்களும்,.. அவதூறுகளுக்கு ஏற்ற வகையில் உடனுக்குடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியாகவும் அறிக்கையாகவும் வெளியிட்டு.....  அதுவும் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படுக்கொண்டிருக்கின்றது..!

மஞ்சள் பை, சர்க்காரியா, ஈழப்பிரச்சினை, 2ஜி போன்றவற்றில் அலட்சியமாக இருந்து விட்டு ஆட்சியை இழந்தது போல் இல்லாமல்....   இப்பொழுது திமுக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அத்தனை புகழும் திமுகவின் புதிய தலைவர் மு.க. ஸ்டாலினையே சாரும்..!



No comments: