Thursday, January 31, 2019

தந்தி டீவி நடத்தியது கருத்து கணிப்பா? கருத்து திணிப்பா?!


தமிழ்நாட்டுல எல்லா விஷயத்துலயும் தோத்துப் போய், மக்களின் கடும் கோபத்தை சம்பாதித்து வைத்திருக்கும் அதிமுகவும், இந்திய அளவில் இதே நிலையில் இருக்கின்ற பாஜகவும், அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் ஒரே ஒரு சீட்டு கூட வாங்க முடியாதுங்கறது தான் கள யதார்த்தம்.

இதைத்தான் அகில இந்திய அளவில் உள்ள முக்கியமான பெரிய தேசிய ஊடகங்கள், உலகின் பெரிய சர்வே நிறுவனங்களோடு இணைந்து எடுத்து வெளியிட்ட ஐந்து வெவ்வேறு கருத்துக் கணிப்புக்களும் துல்லியமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில் தான் தந்தி டீவி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுகிறது. தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் 10 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை மட்டும் வெளியிட்டிருக்கிறது.

அதில் பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்... 10இல் 7 தொகுதிகளில் திமுக வெல்லும், இரண்டில் இழுபறி என்று சொல்லியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், தேசிய ஊடகங்களும், தரமான சர்வே நிறுவனங்கள் சொன்ன கணிப்பை இது உறுதிப்படுத்துவது போலவும், அது மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தெளிவாகத் தெரியும் அந்த முடிவுகளோடு ஒத்துப் போவது போலவும் தான் இருக்கும்.

ஆனால் அந்த கருத்து திணிப்பில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை சதவிகிதம் வாக்குகள் வாங்கும் என்று தந்தி டீவி சொல்லியிருக்கும் விஷயம் தான் விஷம் கலந்தது..! அது தான் பாஜகவுக்கு தந்தி டீவி செய்யும் அடிமை வேலைக்கான சான்று..!

இந்த கருத்து திணிப்பில் தந்தி செய்திருக்கும் விஷ(ம)த்தனங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் தினகரனின் பதிவு கூட செய்யப்படாத... தொண்டர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் எல்லாம் தினம் தினம் வெளியேறிக் கொண்டிருக்கின்ற கட்சியை திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக பட்டியலிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டதாகச் சொல்வது ஆகச் சிறந்த அயோக்கியத்தனம்.

இரண்டாவதாக.., திமுக மட்டுமல்ல அதிமுகவும் ஒரு கூட்டணி அமைத்துத் தான் போட்டியிடும். தினகரனோ எதாவது ஒரு மூன்றாவது அணியுடன் தன்னை இணைத்துக் கொள்வார் என்ற நிலையில்..., திமுகவை குறிப்பிடும் போது மட்டும் திமுக காங்கிரஸ் அணி என்றும்... அதிமுக மற்றும் அமமுகவை தனித்தனி கட்சியாக காட்டுவதும் மிகப் பெரிய மோசடி.

இதனால் என்ன வந்தது என்று கேட்பீர்களேயானால்...,

பொது மக்களிடம் திமுக தனித்து நின்று வெல்லவே முடியாது அதற்கென்று தனித்த பெரிய வாக்கு வங்கி இல்லை என்ற எண்ணத்தை பலமாக உருவாக்குவது ஒரு நோக்கம்.

மற்றொரு நோக்கம் என்னவென்றால், திமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெல்லும் என்று நேர்மையான கருத்துக் கணிப்புகள் உறுதி செய்து விட்ட நிலையில், காங்கிரஸின் சீட் பேரத்தை தூண்டி விட்டு, நாங்க உங்களோட இல்லன்னா நீங்க பல இடங்களில் தோத்துடுவீங்கன்னு சொல்லி பேரத்தை அதிகப்படுத்தி திமுகவை குறைவான தொகுதிகளில் நிற்க வைப்பது. அதன் மூலம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் போல, காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் நின்ற இடங்களில் அதிமுக மிகப்பெருமளவில் வென்றதைப் போல, காங்கிரஸ் மற்றும் திமுகவின் மற்ற சின்ன கூட்டணிக் கட்சிகள் நிற்கின்ற இடங்களில், பாஜக - அதிமுக கூட்டணி அதிகமாக அறுவடை செய்யலாம் என்ற கணக்கு தான் இதில் பிரதானம்...!

மூன்றாவதாக..., அரவக்குறிச்சி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் அமமுக வுக்கு தந்தி திணித்திருக்கும் வாக்கு சதவிகிதங்களைக் கூட்டினால் திமுகவை விட அதிகம் இருப்பதாக காட்டப்பட்டிருக்கின்றது.

2016இல், ஜெயலலிதா உயிரோடு இருந்த நிலையிலேயே..., தமிழகம் முழுக்க ஓட்டுக்கு 500 ரூபாய் வரை பணம் கொடுத்து அதிமுக தேர்தலை சந்தித்த செய்திகள் வந்த நிலையிலேயே... தமிழகம் தழுவிய அளவில் 1.1 சதவிகித வாக்கு வித்தியாசம் மட்டுமே திமுக மற்றும் அதிமுகவுக்கு இருந்த நிலையில்...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இறந்து போய், அந்த இறப்பும் மர்மம் நிறைந்ததாக இருக்கின்ற நிலையில், அதற்கான கோபங்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் மீது உண்மையான 

அதிமுகவினருக்கே இருக்கின்ற நிலையில்..., அவர்கள் செய்த ஊழல் நிரூபிக்கப்பட்டு சசிகலா சிறைவாசம் அனுபவிக்கின்ற நிலையில்..., உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்த வக்கில்லாமல் அதிமுக இருக்கின்ற நிலையில்..., அனைத்து துறைகளிலும் மக்களின் கடும் கோபத்தோடு அதிமுக ஆட்சி செய்கின்ற நிலையில்....

அதிமுக மற்றும் அமமுகவுக்கு எப்படி வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்?!
அதேப் போன்று...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் கலைஞர் மறைந்திருந்தாலும், அவர் மறைவிற்குப் பிறகு... அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சென்று, அவர் உயிரோடு இருந்த காலத்தை விட, இப்பொழுது பெருவாரியான நடுநிலை பொதுமக்களும், இளைஞர்களும் அவரது சாதனைகளை தேடிப்பிடித்து படித்து தெரிந்து கொண்டு... திமுகவுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில்...

திமுகவின் புதிய தலைவர் தளபதியார், கட்சியை மிகக் கட்டுக்கோப்பாக எந்த சிறு சேதாரமும் இல்லாமல் கொண்டு சென்று... ஒவ்வொரு தொகுதியிலும் கடைசி பூத் வரையிலும் 20 பேர் கொண்ட கமிட்டிகளை அமைத்து, இன்றைக்கு ஒட்டுமொத்த திமுகவினரையும் கிராம சபை நிகழ்ச்சியின் மூலம் கிராமத்து மக்களிடம் நெருங்கிப் பழக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்...

இனி அதிமுகவை தொடர விட்டால், தமிழகம் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போய்விடும்... வேறு ஆப்ஷன்கள் தேடி வாக்கினை விரயம் செய்து ரிஸ்க் எடுப்பதைக் காட்டிலும் நல்ல ஆட்சி அனுபவமும், சிறந்த நிர்வாக திறனும், எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்த திமுகவுக்குத் தான் இம்முறை ஆட்சி அதிகாரத்தை வழங்கிட வேண்டும் என்று.... கொள்கை ரீதியாக திமுகவின் எதிர்நிலையில் உள்ள... அதே சமயம் நாட்டின் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேரும் கூட வெளிப்படையாகப் பேசுகின்ற நிலையில்....

திமுகவின் வாக்கு சதவிகிதம் எப்படி கடந்த தேர்தலை விட குறைவாக இருக்கும்?!

இந்த இடத்தில் தான் தந்தி டீவியின் மட்டமான அயோக்கியத்தனம் வெளிப்படுகிறது. பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் கேவலமான புத்தி வெளிப்படுகிறது.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் நாம் பார்க்கலாம்...

எம் ஜி ஆர் காலத்திலிருந்தே எம் ஜி ஆரோ, ஜானகியோ, ஜெயலலிதாவோ சேஃப்டியாக நிற்கும்... அதிமுகவின் இரும்புக் கோட்டை போன்ற தொகுதி ஆண்டிப்பட்டி..!

இத்தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 37 சதவிகிதம்.

ஆனால் நேற்றைய தந்தி டீவி கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு வெறும் 31 சதவிகிதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது..!

அப்பொழுது ஜெயலலிதா தலைமையில் இருந்த ஒன்று பட்ட அதிமுக பெற்ற வாக்கு 53 சதவிகிதம் தான்..! இன்றைக்கு அதிமுக + அமமுக வுக்கு தந்தி டீவி கொடுத்திருக்கும் சதவிகிதமோ 60%...!

இப்போ புரிகிறதா... தந்தி டீவி எடுத்திருப்பது கணிப்பு அல்ல திணிப்பு என்று..?!

இன்னும் ஒரே ஒரு திணிப்பு மோசடியை மட்டும் பார்த்து விட்டால் போதும்...

அரவக்குறிச்சி தொகுதில் மட்டும் அதிமுக + அமமுக வாக்குகளை விட திமுகவுக்கு பலமான வாக்கு வங்கி இருப்பதாக தந்தியின் திணிப்பு சொல்கிறது.

இதன் மூலம் மக்கள் மூளையில் அது... அது Means பாஜக திணிக்க நினைக்கும் விஷயம் இது தான்...
திமுகவுக்கு என்று தனித்த பலம் எங்கும் கிடையாது. கொஞ்சநஞ்சம் இருப்பதும் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளால் மட்டுமே இருக்கின்றது. இப்போ அதிமுக தினகரனோடு ஒன்றிணைந்து, அதில் பாஜகவும் சேர்ந்தால், ஒட்டுமொத்த சீட்டுகளையும் அள்ளிவிடுவார்கள்.

அதிமுக அல்லது அமமுகவிலிருந்து யாரையாவது இழுத்தால் தான் திமுகவின் பலமே கூடும்..! என்பது தான் அது..!

அதாவது திமுகவே வெல்லும் என்கிற நிலையில் அதன் வெற்றியை இழிவு செய்வது தான் அவாள்களின் காலம் காலமாக இருந்து வரும் கோயபல்ஸ் வேலை..!

அரவக்குறிச்சிக்கு மட்டும் கூடுதல் சதவிகிதம் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்..!



1 comment:

Anonymous said...

Hello sir, Why DMK lose in RK nagar election?even, they cannot get 2016 election votes.