Saturday, February 9, 2019

அந்த நாற்பத்தி ஓராயிரம் கோடியை என்ன தான்யா பண்ணுணீங்க..?!


தமிழக அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி அறிவுஜீவிகள் எல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வரட்டும்...
ஆனால் ஒரு ஆர்டினரி குடிமகனா ஓபிஎஸ் சொன்ன கணக்குலேர்ந்தே எனக்கு வருகின்ற கேள்வி இது தான்...
போன வருஷ கடன் 3 லட்சத்தி 56 ஆயிரம் கோடியா இருந்துச்சாம்...
இந்த வருஷ கடன் 3 லட்சத்தி 97 ஆயிரம் கோடியா உயர்ந்திருக்காம்...

ஒரே வருஷத்துல நம்ம எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து 41 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்காங்களாம்...

இருந்துட்டு போவட்டும்... வாங்குன கடனை என்ன பண்ணினாய்ங்க..?! இது தான் என்னைய மாதிரி அப்பாவி குடிமகனின் கேள்வி.
தமிழ்நாட்டுல ஒரே ஒரு ரோடு கூட உருப்படியா இல்ல.

கலைஞர் ஆட்சியில கட்டுன மாதிரி மதுரவாயல் பறக்கும் சாலையோ, கத்திப்பாரா பட்டர்ஃபளை பாலமோ, கொள்ளிடம் ஆற்றுக்கு குறுக்கே கட்டுன மாதிரியோ, எல்லா ஊருலயும் ரிங் ரோடு போட்டாரே அது மாதிரியோ... இப்புடி இந்த ஒரு வருஷத்துல இவிங்க எதையுமே போடல..!

அது போவட்டும், கலைஞர் ஆட்சியில 8 மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7400 மெகாவாட் மின் உற்பத்தி செஞ்சு கொடுத்தாரே... அதே மாதிரி ஒரே ஒரு திட்டமாவது போட்டு நிதி ஒதுக்கினீங்களா? அவர் போட்ட திட்டத்துல வர்ற மின்சாரத்தை இப்ப பயன் படுத்தி மின் வெட்டு இல்ல... மின் மிகை மாநிலம்ன்னு எல்லாம் வேற பீத்திக்கிறீங்க..! உரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையேங்கற மாதிரி..!

சரி போகட்டும், கலைஞர் எல்லா அரசு அலுவலகங்களையும் சொந்த கட்டிடமா மாத்தி... ஒவ்வொரு மாவட்டத்துலயும் கலெக்ட்டர் ஆஃபீஸ், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகங்கள் என்று தமிழ்நாடு முழுக்க நிதி ஒதுக்கி சூப்பர் சூப்பரா கட்டிக் கொடுத்தாரு. இந்த உட்கட்டமைப்பு எல்லாம் செய்யும் போது பணப்புழக்கம், பல லட்சம் பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு, இது சம்பந்தப்பட்ட சிறு, குறு, மத்திய தர நிறுவனங்களுக்கான உற்பத்தி, அதன் மூலமான வேலை வாய்ப்பு, அது மூலமான வரி வருவாய்... இப்படியாக மக்கள் கிட்ட நல்ல பணப்புழக்கமும், சுபிட்சமும் இருந்திச்சி... அது மாதிரி எதாவது ஒரு உட்கட்டமைப்பு வேலையாவது புதுசா நீங்க பண்ணிணீங்களா?! நாடே ஏதோ மந்திரிச்சி வுட்ட மாதிரி கையில பணம் இல்லாம ஒவ்வொருத்தனும் சுத்திக்கிட்டிருக்கான்..!

இதெல்லாம் கூட விடுங்கப்பா.... அவர் பண்ணின மாதிரி ஒரு ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நதி நீர் இணைப்பு, கடல் நீரை குடி நீராக்குறது, மெட்ரோ ரயில்... இப்படி எதையாச்சும் புதுசா பண்ணி நிதி ஒதுக்கியிருக்கீங்களாய்யா...?!
அது கூட பரவாயில்லை... திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி மாநாடு, அதை காரணமா வச்சி கோம்புத்தூருக்கு எக்கச்சக்கச்சக்க நிதி ஒதுக்கியது, செம்மொழி பூங்காக்கள்... இப்படியெல்லாம் எதுனாச்சும் செஞ்சீங்களாய்யா..?!
இப்படி எதுவுமே சொல்லிக்கிறா மாதிரி ஒரு நல்ல திட்டமும் செய்யாம அதுக்கு பணம் ஒதுக்கினதா எங்களுக்கும் தெரியாம... ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடன் வாங்கி என்ன தான்யா பண்ணுணீங்க..?!
அந்த ஆளு, விவரம் தெரியாம... அஞ்சு வருஷத்துக்கு வெறும் 46 ஆயிரம் கோடி மட்டும் கடனை வாங்கி மேல சொன்ன அவ்ளோத்தையும் செஞ்சி... இதைத்தவிரவும், இலவச கான்கிரீட் வீடு திட்டம், டீவி, மருத்துவ காப்பீடு திட்டம்... இப்டி எல்லாம் கூட நிறைய செஞ்சுட்டு... இதையெல்லாம் விளம்பரப்படுத்தாமலேயே... உங்க கிட்ட ஆட்சியை கொடுத்துட்டு தெய்வமாயிட்டார்..!

உங்களை மாதிரி ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடனை வாங்கிக்கிட்டு...
ஒரு இலவச திட்டமும் புதுசா போடாம, ஒரு உட்கட்டமைப்பு வேலையும் புதுசா செய்யாம, இருக்குற ரோட்டையும் பராமரிக்காம, யாருக்கும் ஊதிய உயர்வும் கொடுக்காம, விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை ஏத்திக் கொடுக்காம, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணம் எதையும் கொடுக்காம, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களோட சேமிப்பையும் ஆட்டைய போட்டுட்டு...
கெத்தா யோக்கியனுங்க மாதிரியே பேட்டி குடுக்குறீங்க பாருங்க... உங்க திறமை எல்லாம் திமுககாரவிங்களுக்கு பத்தாதுய்யா...!

திமுக தலைவர் நீங்க போட்டத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டுன்னு லைட்டா திட்டிட்டு விட்டுட்டார். நியாயமா பார்த்தா அவரு நாலு நல்ல கெட்ட வார்த்தைல திட்டியிருந்தா, குடிமக்களுக்கு இன்னும் கொஞ்சம் திருப்தியா இருந்திருக்கும்..!

No comments: