Tuesday, February 5, 2019

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அமோக வெற்றி - இதற்கு காரணம் திராவிட சிஸ்டமா? சங்கிகளின் திட்டமா?!


நீட் முதுகலை தேர்வில் வெற்றிபெற்ற 79,633பேரில், 11,121 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் - செய்தி..!
அதாவது MBBS படித்து முடித்து விட்டு, அதற்கு மேல் முதுகலை படிப்பிற்காக... அதாவது எம் டி, எம் எஸ்... இப்படியான படிப்புக்கு இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழக மாணவர்கள் பதினோராயிரத்தி நூற்றி இருபத்தி ஓரு பேர் வென்றுள்ளார்கள்..!
ஒட்டுமொத்தமாக இத்தேர்வினை எழுதிய இந்திய மாணவர்களில் 14 சதவிகிதம்... அதாவது 100 மாணாக்கர்களுக்கு 14 பேர் தமிழர்கள்..!
மக்கள் தொகையின் படி பார்த்தால் 100 இந்தியர்களில் 6 லிருந்து 7 பேர் மட்டுமே தமிழர்கள். ஆனால் மருத்துவ மேல் படிப்பு தேர்வில் 100க்கு 14 பேர் தமிழர்கள் வரும் வாய்ப்பு இருக்கின்றது..!
ஓக்கே மேட்டருக்கு வருவோம்..!
இப்போ சங்கிகள் இந்த தேர்வு முடிவினை கைகளில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றார்கள்.
பார்த்தீர்களா மக்களே... நீட் தேர்வு வந்தால் தமிழர்கள் மருத்துவமே படிக்க முடியாது.. தோற்று விடுவார்கள்... அனைத்து சீட்டினையும் இந்திக்காரன் அபகரித்துவிடுவான் என்றெல்லாம் திமுகவினர் ஓலமிட்டார்களே... இப்பொழுது புரிகிறதா? நீட்டால் அதிகம் பயன் பெற்றது தமிழக மாணவர்களே...! ஆகவே திமுக சொல்வதை நம்பாதீர்கள்..!
இப்படிக்கா.... இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல இணையமெங்கும் கூத்தடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..!
சரி... உண்மையில் இதை யார் தான் கொண்டாட வேண்டும்?!
தமிழக மாணவர்கள் தான்....! ஆம் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று தமிழக மாணவர்கள் தான் இதை கொண்டாட வேண்டும்.
நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனால் நீட்டால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படவில்லையே...?! பிறகு ஏன் திமுக நீட்டால் பாதிப்பு என்று போராடுகிறது?!
சார்... இப்போ பாஸ் பண்ணியிருக்கின்ற மாணவர்கள் அனைவருமே, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து MBBS பட்டம் பெற்றவர்கள் தான்.
அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது நீட் தேர்வு இல்லை. தமிழக பாடத்திட்டத்தில் மட்டுமே படித்து... கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல்...
+2வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அடிப்படையில் மட்டுமே, அதிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்து இன்றைக்கு MBBS பட்டம் பெற்று... நீட் அடிப்படையில் முதுகலை படிப்பதற்கான தேர்வில் வென்றுள்ளார்கள்..!
ஆனால் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் +2 முடித்து வரும் மாணவர்களுக்கு திடீரென்று நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்வது இயலாத காரியம். ஆகையினால் அவர்கள் பழைய முறைப்படி மெடிக்கல் சேர்வர்தற்கு தேவையான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட அதில் சேர முடியாமல் போகின்றது..!
அதே சமயம் நகரப்புற மாணவர்களோ, அல்லது மத்திய பாடத்திட்டமான சி பி எஸ்ஸியில் படித்தவர்களோ கூட லட்சங்களில் ஃபீஸ் கட்டி தனியார் இன்ஸ்டிடியூட்டில் படிக்காமல் அந்த நீட் தேர்வில் வெல்லவோ.... அதிக மதிப்பெண்கள் பெறவோ முடியவில்லை என்பது தான் இன்றைய யதார்த்தம்..!
ஆகையால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது கிராமப்புற மாணவர்கள் அல்லது நகரப்புர மற்றும் சிபிஎஸ்ஸி மாணவர்கள் என்பதல்ல...
நீட்டில் தேர்ச்சி பெற அந்த மாணவன் பணக்காரனாக இருக்க வேண்டுமா? அல்லது ஏழையாக இருந்தாலும் போதுமா?! என்ற வாதத்தைத் தான்..!
ஆகவே பழைய திராவிட சிஸ்டத்தின் படி, ஏழை / பணக்காரன், கிராமத்தான் / நகரத்தான், சி பி எஸ்சி / தமிழக பாடத்திட்டம்... இந்த எந்த கந்தாயமுமே... மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்க தமிழக மாணவர்களுக்கு தடையாக இல்லை..!
நீட் மூலமாக அந்த தடை ஏற்பட்ட காரணத்தினால் மட்டுமே அனித்தாக்கள் உயிர் விடவும்.... இன்னும் பல அனித்தாக்கள் தாங்கள் விரும்பிய மருத்துவப் படிப்பு அதிக மதிப்பெண் எடுத்தும் கிடைக்காமல் போன காரணத்தினால் நடைப் பிணமாகவும் ஆக வேண்டியதாயிற்று..!
நீட் தேர்வு போராட்டத்தின் போது இதே சங்கிகள் இன்னுமொரு முக்கிய வாதத்தினை வைத்தார்கள். தமிழக பாடத்திட்டத்தில் படித்துவிட்டு மட்டுமே வந்தால் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியாது.... ஆகவே தான் அவர்களை மதிப்புக் கூட்டி தரம் உயர்ந்த மருத்துவர்களை உருவாக்க இடைநிலையில் இந்த நீட் தேர்வு அவசியமாகிறது என்பது தான் அந்த அடிமுட்டாள்களின் வாதம்..!
ஆனால் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி வெளியேறச் சொன்னது போல, இந்த வாதம் வைத்த சங்கிகளின் முகத்தில் கரியைப் பூசும் வண்ணமாகத்தான்...
இன்றைக்கு தமிழக பாடத்திட்டத்தில் பயின்று.... மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து 6 ஆண்டுகளில் தங்களை பல்வேறு வகைகளில் மேம்படுத்திக் கொண்டு.... இன்றைக்கு மருத்துவ மேல் படிப்புக்கான நீட் தேர்வில் இந்திய அளவில் மிக அதிகமாக நம் திராவிடத்தால் வாழ்ந்த தமிழ் மாணவர்கள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்..!
ஆகவே தமிழக பாடத்திட்டமே போதுமானது.... நீட் என்ற இடைச்செறுகல் தேவையே இல்லாத ஆணி என்பது தான் இன்றைய நீட் தேர்வின் முதுகலை படிப்புக்கான முடிவுகள் உணர்த்துகின்ற படிப்பினை..!!
ஆகவே... ஆல் சங்கீஸ்.... நீங்க ஓரமா போய் உட்கார்ந்து ஒப்பாரி வையுங்கள்..! நீட் எங்களுக்கு டோண்ட் நீட் என்று நாங்கள் ஆட வேண்டிய காலம் இது..!

1 comment:

Anonymous said...

How many Govt.school students got MBBS seat in TN before NEET ? Only FIVE.After NEEET it 30