Tuesday, July 1, 2014

விஷன் 2016....!!! எப்படி...??

இதோ மோடி ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டிருக்கின்றது. அதற்குள் மோடியை இதற்கு முன்பு ஆதரித்தவர்கள் வாயடைத்துப் போயும், மோடி எதிர்ப்பாளர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை மோடி ஆட்சிக்கு எதிராக வைக்கின்ற அளவிற்கும், ஏதோ சிலவற்றை மோடி செய்திருக்கின்றார்...

அதாவது, நல்லதோ கெட்டதோ... ஏதோ ஒரு வகையில் அல்லது திட்டத்தில் மோடி செயல்பட ஆரம்பித்திருக்கின்றார். அவரது செயல்பாடுகள் என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது என்பது இன்னும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் தெரிந்துவிட்டிருக்கும்.

இதெல்லாம் போகட்டும்...

இங்கே நம்ம தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு ஆட்சி அமைந்ததே... அது இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றது???? இது நல்ல ஆட்சியா? அல்லது கெட்ட ஆட்சியா? என்றே யாரும் சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கின்றது!!! இதற்கான விடை தேடித்தான் இந்தப் பதிவின் பயணம் தொடர்கிறது......

ஆட்சிக்கு வந்தவுடனேயே தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்திலும் விலை உயர்வைக் கொண்டு வந்து, கசப்பு மருந்து தருகிறேன் என்று தான் ஆரம்பித்தார்கள்.... “விஷன் 2023” என்று ஒரு மோஷன் கிராஃபிக்ஸ் ஃபிலிம் காட்டினார்கள். அதுக்கு அர்த்தம் என்னன்னா? இந்த ஃபிலிம்ல நாங்க காட்டுற ரீல் எல்லாம் ரியல் ஆகனும்ன்னா 2016லயும் தங்களுக்கு வாக்களித்தால் தான் சாத்தியமாகும்ன்னு அர்த்தம்....!!!

  • ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சொல்லிக்கொள்கின்ற மாதிரியாக ஏதாவது ஒரு தொலை நோக்குத் திட்டமாவது துவங்கப்பட்டிருக்கின்றதா??
  • எத்தனை புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது??
  • 50 சதவிகிதம் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களைக் கொண்டு, பழைய திமுக ஆட்சியை விட எத்தனை பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது??? அல்லது முன்பிருந்த போக்குவரத்துக்கழகத்தின் கடன்கள் அடைந்து விட்டிருக்கின்றதா? அல்லது கடன் இன்னும் கூடியிருக்கின்றதா????
  • ஆட்சிக்கு வந்தவுடனேயே உயர்த்தப்பட்ட வாட் வரியினால் வருடத்திற்கு 5200 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ள நிலையில், அதைக் கொண்டு அதற்கு முன்பு திமுக ஆட்சியில் பெரிய கடன் சுமை இருப்பதாக கூத்தடித்தீர்களே... அந்தக் கடன்களில் இதுவரை எவ்வளவு அடைத்து வட்டியை மிச்சப்படுத்தியிருக்கின்றீர்களா???
  • இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு பெரிய தொழிற்சாலையையாவது தமிழகத்திற்கு கொண்டு வந்து ஒரு ஆயிரம் இளைஞர்களுக்காவது புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கின்றீர்களா?
  • முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டு பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயிகள் பலனடைந்து கொண்டிருக்கின்றார்களா????
  • காவிரியில் மூன்று வருடமாக தொடர்ந்து உங்களால் ஜூன் 12இல் தண்ணீர் திறந்து விட முடிந்ததா???
  • காவிரி டெல்ட்டாவில்.... விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மானியங்கள், குறுகிய கால பயிர்க்கடன், 24 மணி நேர மும்முனை மின்சாரம் போன்றவை வழங்கி கடந்த ஆட்சியை விட விளைச்சலை அதிகப்படுத்தியிருக்கின்றீர்களா? அல்லது கடந்த திமுக ஆட்சியில் இருந்ததை விட விளைச்சல் படுபாதாளத்திற்கு சென்றிருக்கின்றதா?????
  • தாங்கள் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த மின்வெட்டை இந்த மூன்றாண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்களா???? 100 சதவிகிதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் கொண்டு மின்சார வாரியத்தின் கடன் அடைக்கப்பட்டிருக்கின்றது??? அல்லது அது இன்னும் அதிகரித்திருக்கின்றதா???
  • தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது நின்று போயிருக்கின்றதாஆஆஆ????
  • இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைத்து விட்டதா? அதற்காக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? அல்லது குறைந்த பட்சம், அங்குள்ள முள்வேலி முகாம தமிழர்களின் வாழ்க்கையிலாவது ஒரு நிம்மதி ஒளியை ஏற்றி வைத்திருக்கின்றீர்களா???
  • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கடந்த திமுக ஆட்சியை விட சிறப்பாக இருக்கின்றதா? அதை மக்கள் ஒத்துக்கொள்வார்களா?
  • எத்தனை புதிய அரசு அலுவலக கட்டிடங்கள், புதிய பாலங்கள், புதிய சாலைத் திட்டங்களைப் போட்டு நிறைவேற்றியிருக்கின்றீர்கள்?
  • அரசு அலுவலகங்களில் நிர்வாகம் கடந்த ஆட்சியை விட மேம்பட்டதாகவும், வேகமானதாகவும் செயல்படுகின்றதா??
  • மூன்று ஆண்டுகளில் காவிரியும் அதன் கிளை ஆறுகளும் எத்தனை முறை தூர் வாரப்பட்டிருக்கின்றன?
  • கடந்த மூன்று ஆண்டுகளில் பெருவாரியான இலவசங்கள் அளித்தது தவிர்த்து வேறு என்னென்ன தொலை நோக்குத் திட்டங்களை செயல்படுத்த துவங்கியிருக்கின்றீர்கள்???
  • இப்படி எந்த தொலைநோக்குத்திட்டமுமே இல்லாமல் இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி 15 ஆண்டுகள் பின் தங்கி விடாதா?????
  • அதைத்தான் இந்த ஆட்சியாளரான ஜெயலலிதா விரும்புகிறாரா??? 

இப்படி எந்த தொலை நோக்குத்திட்டங்களும், தொழிற்சாலைகளும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்காமல், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி அல்லது அதிகப்படுத்தி, மக்களை இலவசங்கள் கொடுத்து மூளையை மழுங்கடித்து, மலிவுவிலை சாமான்கள் விற்பனை என்ற தொழில் முனைவோர் செய்ய வேண்டியதை ஒரு அரசாங்கமே செய்து கொண்டு... அதை ஒரு சாதனையாகவும் கூறிக்கொண்டு..., ஊடகங்களின் பலத்தால் அதை சில பல அப்பாவி மக்களும் நம்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி......
  • இப்படியே சென்று கொண்டிருந்தால், தமிழகத்தின் அடுத்த தலைமுறையே..., சொந்தமாக உழைத்து சுயமாக வாழ இயலாமல் அல்லது முடியாமல் அரசாங்கத்திடம் அனைத்திற்குமே கையேந்தி நிற்கும் அவலம் ஏற்பட்டு விடாதா????
இதைத் தான் இந்த ஆட்சியாளராகிய ஜெயலலிதா விரும்புகின்றார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்ட நிலையில்....

இனி தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினர் தான் விழித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அரசாங்கத்தின் இது போன்ற இலவச போதைக்கும், மலிவு விலை சமாச்சாரங்களுக்கும் மயங்கி நின்று தன்னுடைய சந்ததியினரை படுகுழியில் தள்ளி விடாமல்.......

இன்றைக்கு தாம் படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற வேலைகளுக்கும், எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற திமுகவின் ஆட்சிக்காலங்களே காரணம் என்பதை திறந்த மனதுடன் யோசித்து உணர்ந்து கொண்டு இந்த ஆட்சியைப் புறம் தள்ளி, மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியானது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உருவாகிட வாய்ப்பளிக்க வேண்டும்...!!

3 comments:

Anonymous said...

romba koovatha dmk sombu kanavu kanatha loosu

நெல்லைத் தமிழன் said...

பேராசை பெருநஷ்டம். வாங்கின காசுக்கு நல்லா கூவறீங்க.

Anonymous said...

DMK sombu thooki