Thursday, July 3, 2014

அம்மா ஆட்சியும்...மக்கள் காணும் காட்சியும்..!!!

ஆட்சிக்கு வந்து மூனு வருஷம் முடிந்தது.... இப்ப மூனு மணி நேரமா கரண்ட்டு இல்ல. அடிக்கிற வெய்யில்ல உடம்புல அத்தன பார்ட்டும் வெந்து கருகுது.... மிஷின் எல்லாம் ஓட்டாம நிக்குது, பச்சப் புள்ளைங்க எல்லாம் அழுகுது.....

இதுல பேச்சப்பாரு??? மின் மிகை மாநிலம் ஆக்குவோம், மின் மிகை மாநிலம் ஆக்குவோம்ன்னு...!!!

உபயோகமற்று இருக்கும் எழில்மிகு பூங்கா
கேக்குறவன் கேணையனா இருந்தா நீங்க எத வேணாலும் சொல்லுவீங்களா? மூனு வருஷத்துல முப்பது நாற்பது தடவ மந்திரிய எல்லாம் மாத்துனீங்க, நூற்றுக்கணக்கான தடவை அதிகாரிங்கள மாத்துனீங்க, மொதோ ஒரு வருஷத்துக்கு திமுக காரங்க மேல கேஸு போடுறதுலயே உங்க கவனம் எல்லாம் கழிஞ்சிது, மிச்ச நாள் எல்லாம் உங்க பெங்களூரு கேஸுல எப்படி எப்படியெல்லாம் சொல்லி வாய்தா வாங்குறதுங்கறதுலயே ஓடுச்சி, நடுவால மூனு மாசத்துக்கு

ஒருவாட்டி மாசக்கணக்குல கொடநாட்டுல போயி தங்கிக்கிறது, இதுக்கு மத்தியில கலைஞர் செஞ்சி வச்ச திருவள்ளுவர் சிலை தொடங்கி, சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப்பூங்கா, தொல்காப்பியப் பூங்கான்னு இப்புடி எல்லாத்தையும் முடக்கிப் போடுறதுக்கு திட்டம் போடுறதுலயே கொஞ்ச காலம் ஓடிடிச்சி, இதெல்லாம் பத்தாதுன்னு, எந்தெந்த நடிகருங்கள புடிக்கலையோ அவங்க படத்தையெல்லாம் நிப்பாட்ட கேஸு மேல கேஸா போடுறது.......

எந்தவொரு மந்திரிக்கும், அதிகாரிக்கும் பவரே கொடுக்காம எல்லாத்தையும் இவங்களே செய்யனும்ன்னு வச்சிட்டிருந்தா??????

எப்படிய்யா மக்கள் பிரச்சினை எல்லாம் சால்வ் ஆகும்?! கொஞ்சம் சிந்திச்சிப் பாருங்க மக்கா, மேல சொன்ன எல்லாம் கடந்த மூனு வருஷத்துல நடந்திச்சா இல்லியா? இதெல்லாம் மட்டும் செஞ்சிட்டிருந்தா எப்படி நிர்வாகத்தை ஒழுங்கா கவனிக்க முடியும்?!

இப்ப மக்கள் எல்லாம் வெந்து சாகறாங்க!! மந்திரிங்க எல்லாம் கூழக் கும்பிடு போட்டுக்கிட்டும், எப்ப பதவி காலியாகுமோன்னும் பயந்துக்கிட்டிருந்தா எந்த அதிகாரியாவது மதிப்பானா? அவன்கிட்ட வேலை தான் வாங்க முடியுமா?!

எதோ இந்த ஆரிய பத்திரிக்கையெல்லம சொன்னத நம்பி, இருக்குறத விட பெருசா எதோ கிடைக்கப்போகுதுன்னு எதிர்பார்த்து, உன்னைய கொண்டு வந்து உக்கார வச்சதுக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!!!

என்ன வேனா சொல்லுங்க....நல்லா யோசிங்க......


வரப்போகும்....

 ஆட்சியை... தன்னிகரில்லா ஆட்சியாக்குவோம்...!!!

2 comments:

Anonymous said...

dmk somboo dmk ooo always oooo

நெல்லைத் தமிழன் said...

வாங்கின காசுக்கு நல்லாக் கூவறீங்க. ஆதாயம் இல்லாமலா செட்டியார் ஆத்தோட போறாரு.. எப்படியோ..உங்களை வளப் படுத்திக்கொள்ளுங்கள்.