Friday, November 13, 2015

உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...


உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...

இது எங்க ஊருல ரொம்ப ஃபேமஸான பழமொழி. அதாவது ஆட்சில இருக்குறவங்க, ஏ சி ரூமுல உட்கார்ந்துகிட்டு, அஞ்சு ஐ ஏ எஸ்ஸ அனுப்பினேன், பத்து கலெக்டர அனுப்பினேன்..., போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதுன்னு அறிக்கை மட்டும் கொடுத்தா போதாது...

அப்படி செஞ்சா, நாலு நாள் ஆனாலும் வெள்ளத்துக்கு நடுவுல தத்தளிக்கிற மக்களுக்கு குடி தண்ணி கிடைக்கல, சாப்பாடு கிடைக்கல, உட்கார வீடு கூட இல்ல, மாத்து துணி இல்ல, குழந்தைங்களுக்கு பால் இல்ல, மின்சாரம் இல்ல....

இதையெல்லாம் அங்க போற ஊடகங்களிடம் மக்கள் தெரிவிக்கிறாங்க..., கதறுறாங்க..., ஆனா அதிகாரிகள் மட்டும் இன்னும் அங்க போக முடியலன்னு புலம்புறாங்க.
இது தான் ஆட்சியாளருக்கும் (உடையவனுக்கும்) அதிகாரிகளுக்கும் (மற்றவர்களுக்கும்) உள்ள வித்தியாசம்.

இதோ..........


இப்ப ஆட்சில இல்லன்னாலும், தளபதி மு.க.ஸ்டாலின் களத்துல இறங்கிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரா வந்து நிக்கிறார். இனிமே இந்த அரசாங்கம், இறங்கி வேலை செஞ்சே ஆகணும். அதிகாரிகள் சுற்றிச் சுழன்றே ஆகணும்...!

ஏன்னா?

உடையவர்... கீழே இறங்கி விட்டார். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அதிகாரிகளை விட, மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளருக்குத் தான் பொறுப்பு அதிகம். அவர் மக்களிடம் சென்றால் தான், அதிகாரிகளும் செல்வார்கள், அரசு இயந்திரமும் முழுமையாக வேலை செய்யும்.

ஜெயலலிதா செய்ய வேண்டியதை, மு.க. ஸ்டாலின் செய்கிறார்.

இனி அந்த மக்களுக்கு எல்லாம் தானாகவே, கிடு கிடுவென நடக்கும்.

இது தான் தளபதி எஃபக்ட்...!


2 comments:

Anonymous said...

yappa..build up thaanga mudiyalaida saami..

Anonymous said...

yappa..build up thaanga mudiyalaida saami..