Thursday, November 14, 2013

On Your Mark.... கும்பகோணம்

ON YOUR MARK.... என்ற அடையாளத்தோடு ரோட்டரி மாவட்டம் 2980வின் 2014 - 15 க்கான “உச்சம் தொடும் வெற்றிப் பயணத்தின்” முதல் படியில் “டீம் பாலா” நேற்று (09.11.2013) ஏறி நின்று முதல் முத்திரையை அழகாக பதித்துள்ளது.... !

அடுத்த ஆண்டிற்கான தன்னுடைய குழுவின் பொறுப்பாளர்களை நியமித்து அவர்களுக்கான தொடர் பயிற்சிகளையும் அளித்து, அவர்கள் மூலமாக அனைத்து ரோட்டரி சங்கங்களையும் அவற்றின் அடுத்த ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலர் தேர்வுகளையும் ஒருங்கிணைத்து அந்தந்த சங்கங்களின் அடுத்த ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் பட்டியலைப் பெறுவது, மற்றும் ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான செயல்வீரர்களை நியமிப்பது வரையிலும் அனைத்து வேலைகளுமே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடந்து கொண்டு கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருந்தாலும்.....

ரோட்டரி மாவட்ட அளவிலான தலைவர் தேர்வுகளுக்கான பயிற்சிப் பட்டறை மலேஷியாவில் நடைபெறுவதற்கு முன்னால் ஒரு வெள்ளோட்டம் விட்டு தனித்தனிப் பகுதிகளாக சோதனை ஓட்டம் நடத்துகிற மாதிரியான "PRE PETS"என்று அழைக்கப்படும் பயிற்சிப் பாசறைக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளை உள்ளடக்கிய பத்து மண்டலங்களைச் சார்ந்த தலைவர் தேர்வுகளுக்கு நேற்று கும்பகோணம் பாரடைஸ் ரிஸார்ட்ஸில் வெற்றிகரமாக அரங்கேறியிருக்கிறது.

அடுத்த ரோட்டரி ஆண்டிற்கான பணிகள் இதுவரை எவ்வளவோ நடந்திருந்தாலும், ரோட்டரி என்ற மாபெரும் உலகமே அதன் ஒவ்வொரு சங்கத்தின் தலைவர்களை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்படும் அளவிற்கு சங்கத் தலைவர்களின் பங்களிப்பே பிரதானமானது என்கிற வகையில்.....

2014 - 15 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவர்களாக பொறுப்பேற்கப் போகின்றவர்கள் கலந்து கொள்ளும்“முதல்” நிகழ்வு என்பது நேற்று நடந்த ON YOUR MARK என்கிற PRE PETS தான்!!!

வரும் ஆண்டிற்கான இந்த முழு முதல் நிகழ்வு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்று “டீம் பாலா” ஒரு வித குறுகுறுப்புடனே ஒவ்வொரு செயலையும் தெளிவாக திட்டமிட்டு அதிக அக்கரையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்திருந்தது....!

பத்து மண்டலங்கள் கிட்டத்தட்ட அறுபது சங்கங்கள் அதன் தலைவர்கள்..... ஒவ்வொரு துணை ஆளுநருமே தத்தமது மண்டலத்தைச் சார்ந்த தலைவர் தேர்வுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை தொடர்ந்து உறுதி செய்து கொண்டே வந்து, அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் தாமும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு மாவட்டத்திற்கும் அனுப்பி வைத்ததில் ஆரம்பித்து.....

அவர்கள் அனைவரையும் தம்முடனேயே கும்பகோணம் கூட்ட அரங்கிற்கு கையோடு அழைத்து வரும் பணியையும் கச்சிதமாக நிறைவேற்றியிருந்தனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த துணை ஆளுநர்கள் மூத்தவர் கே.ஆர் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து வைத்திருந்தனர்.

அனைவரும் வந்தாச்சு...., நாலரை மணிக்கெல்லாம் விழா இனிதே துவங்க....

துணை ஆளுநர்கள் சார்பாக மண்டலம் 21ன் துணை ஆளுநர் தேர்வு மருத்துவர் பத்மானந்தம் அவர்கள் இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை இயல்பான நடையில் எடுத்துச் சொல்ல, வந்திருந்த தலைவர் தேர்வுகள் அனைவரும் அது வரையிலும் இருந்த ஒரு வித இருக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தனர்......!!!

ஆளுநர் தேர்வு பாலா அவர்கள், சங்க தலைவர்களின் பொறுப்புகளும், செயல்பாடுகளும் பற்றி கன கச்சிதமாக..., “இவ்ளோ தானா தலைவருக்கான வேலை?” என்று தலைவர் தேர்வுகள் எல்லாம் எண்ணுகின்ற அளவில் பதினைந்தே நிமிடத்தில் அற்புதமாக எடுத்துரைத்தார்.

அதன் பிறகு ரோட்டரியின் ஐந்து முக்கிய களங்களையும் அதை கையாள வேண்டிய விதங்கள் குறித்தும் முன்னால் மாவட்ட அளுநர்கள்..... சிவஞான செல்வன், அழகப்பன், ஜகன்லால், கேதார்நாதன், மருத்துவர் பழனிவேல் மற்றும் 2015 - 16 க்கான ஆளுநர் நியமனம் மருத்துவர் குணசேகரன் ஆகியோர் தலா இருபது நிமிடங்களுக்கு சுறுக்கமான ஒரு விளக்கவுரை ஆற்றி அமர்ந்தனர்.

இடையில் பதினைந்து நிமிடங்கள் தேநீர் இடைவெளி கொடுத்து, கடைசியில் பெட்ஸ் சேர்மன் தர்மேஷ் படேல் மஞ்சா மலேஷியா பற்றிய ஒரு காட்சிப் படத்துடன் தலைவர் தேர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார்.....!

நிறைவாக மாவட்ட ஆளுநர் தேர்வு பயிற்சிப் பாசறைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் பாலா அவர்களுக்கு துணை ஆளுநர்கள் சார்பில் மண்டலம் 22இன் துணை ஆளுநர் தேர்வு அண்ணன் ராஜகோபால் வாழ்த்துரையோடு வழியனுப்பு வைபவம் அன்போடு நடத்தி வைக்கப்பட்டது...!!!

அதன் பிறகு உற்சாகத்துடன் கூடிய இரவு விருந்து.....

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக நடைபெற்ற நமது ரோட்டரி மாவட்டத்தின் 2014 - 15க்கான இந்த முழு முதல் நிகழ்வு, வந்திருந்த தலைவர் தேர்வு அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும், மிடுக்கையும் கொடுத்து அடுத்த ஆண்டை ரோட்டரி மாவட்டம் 2980வின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சம் தொடும் ஆண்டாக அமைத்துக் கொடுக்கும் நிகழ்வாக வெற்றிகரமாக அமைந்திருந்தது....!

முதல் வெற்றி..... முற்றிலும் வெற்றி.....!

டீம் பாலா உச்சம் தொடும்!!!



No comments: