Thursday, November 14, 2013

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி...?!

நேத்து தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” பார்த்தேன். ... 

நல்லாருக்கு..., இந்தப் படத்தை எடுப்பதற்கு, வெளியிடுவதற்கு, திரையிடுவதற்கு என்ற வகையில் முதலீடு செய்திருக்கின்ற எவராக இருந்தாலும் அவர்கள் முழுக்க முழுக்க நன்றி சொல்ல வேண்டியது படத்தின் இயக்குனருக்குத் தான். 

டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டு போடும் வரை அசராமல் தன்னுடைய முத்திரையை சீரான இடைவெளிகளில் தெளிவாக வைத்திருக்கின்றார். பட வியாபாரத்திற்கும், முதல் ஒன்றிரண்டு நாட்கள் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கவுமே விஜய் சேதுபதி பயன்பட்டிருக்கின்றார் அவ்வளவே!

படம் மிகச் சரியாக இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பகுதி இயக்குனரின் ஆத்ம திருப்திக்காக அழகாகவும், சுத்தமாகவும், யதார்த்தமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னொரு பகுதி, வியாபார சமரசங்களுக்காக ஓடும் குதிரை விஜய சேதுபதிக்கான ட்ரெண்ட் என்ற நிர்ப்பந்தத்திற்காக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

ரொம்ப அழுக்கு, அவர்கள் பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் கலீஜாக இருக்கின்றது. இன்னும் ஒரு படம் இதே டெம்ப்ளேட்டில் நடித்தால், விஜய் சேதுபதி சொந்த ஊருக்கு ரயில் ஏறிவிட வேண்டியதிருக்கும்....!

ரசனையே இல்லாத அல்லது ரசிக்கவே முடியாத ஒரு முக பாவனையுடனே எல்லா படங்களிலும் இவர் காட்சியளிப்பது பெரிய அலுப்பை இலக்கியவாதிகள் அல்லாத யதார்த்த மனிதர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இயக்குனரிடம் மட்டும் அவர் தன்னை இயக்குனரின் நடிகராக விட்டுக் கொடுத்திருந்தால், அந்த கேரக்டரை தமிழ் திரையுலகில் சிறப்பாக பேசப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பார்த்துப் பார்த்து செதுக்கித் தந்திருப்பார் அந்த இயக்குனர்.

எனக்கு சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி மேல் அடுத்த ரஜினி கமல் என்பது மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சிகா இதுவரை சொதப்பவில்லை, ஆனால் விசே தடம் புரண்டு விட்டார். இனியாவது சுதாரித்துக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஓரம் கட்டிவிட்டு, நல்ல நல்ல இயக்குனர்களிடம் பக்குவமான களிமண்ணாக இவர் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்...

அதைச் செய்தால் தமிழ் திரை வரலாற்றில் கமலஹாசனின் கலை வாரிசாக உருவாவதற்கு விஜய் சேதுபதிக்கு நல்ல வாய்ப்பிருக்கு!

2 comments:

Sabareesan said...

It looks like you have an attitude of நான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல்.

Read your review again.

If you do not get what I mean, leave it. You might just be another hypocrite.

Unknown said...

Hi Sabareesan,

It is my opinion that the review by the author is fine if not perfect and just wonder what itched you.. Its your wish to opine and I ain't interested getting into this moot point.

I commend the author for his courage to let your post out and lets not discourage a growing critic..

A great job done my friend and my wishes for you to make the negatives a positive stepping stone and continue with your good work but get it diversified to make it something useful for everyone in the future..

All the best..