Thursday, November 14, 2013

பெரியண்ணன் அரசு....!

இணையம்...!


உலக அளவில் இன்றைக்கு எந்த தரப்பாலும் ஒதுக்க இயலாத.... ஏன்? தவிர்க்கவே முடியாத ஒரு தளம் அல்லது களமாக உருவாகி விட்டது. இது போன்ற அறிவியல் வளர்ச்சிகள் இந்தியாவைப் பொறுத்தவரை கொஞ்சம் மெதுவாகத்தான் உள்ளே நுழையும். ஏனெனில் நம் மக்கள்ஒரு புது விடயத்தை அவ்வளவு எளிதில் அண்ட விட மாட்டார்கள். ஆனால் உள்ளே நுழைய அனுமதித்து விட்டால், காட்டுத் தீ போன்று அவ்வளவு விரைவாக நம் மக்களோடு அது ஒன்றிவிடும்!

கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் அமெரிக்கா உட்பட பல்வேறு மேலை நாடுகளில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாகவும், ஒரு சில நாடு தழுவிய புரட்சிகளுக்கு முக்கிய காரணியாகவும் இந்த இணைய தளம் என்கின்ற சமூக வலைத்தளங்கள் இருந்ததை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த இந்தியா, 2010 களில் தொடங்கி இணையத்தை தொழில் முறையாக இதன் பயன்பாடு உள்ளவர்களையும் தாண்டி அனைத்துத் தரப்பினருமே இந்த இணையத்தை ஆரத் தழுவி வரவேற்பது மட்டுமன்றி அதனுடன் ஒன்றி வாழவே ஆரம்பித்து விட்டனர்!

இனி வரும் தேர்தல்களில் இந்திய அளவில் இந்த இணையத்தின் தாக்கம் என்பதை எவராலும் தவிர்த்திட இயலாது. 2011க்கு முன்பு வரை அதிமுக (ஜெயலலிதா சமூகத்து) ஆதரவு மனப்பான்மை கொண்ட மக்களால் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு அல்லது கையாளப்பட்டு வந்த இந்த சமூக வலைத்தளங்கள்...,

“நாம் மக்களுக்குத் தேவையானதை சரியாகத்தானே செய்து கொண்டிருக்கின்றோம்” என்ற நினைப்பில் நின்று கொண்டிருந்த திமுகவினர் கைகளிலிருந்து தட்டிப் பறித்து ஜெயலலிதாவின் கைகளிள் தூக்கிக் கொடுத்த ஆட்சி என்னும் அந்த உயரிய பரிசு திமுகவினர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை தந்திருந்தாலும், இணையத்தில் அப்பொழுதிலிருந்தே புழங்கி வந்து கொண்டிருந்த உடன்பிறப்புக்களுக்கு அது எதிர்பார்த்த ஒரு விடயமாகத்தான் இருந்தது.

ஆனால் திமுக என்பது பெரும்பாலும் அறிவாளிகளை உள்ளடக்கிய ஒரு இயக்கம் என்பதால், தேர்தல் தோல்வியின் காரண காரியங்களை உடனடியாக உணர்ந்து கொண்ட உடன்பிறப்புக்கள், ஆட்சி பறிபோன நிலையிலேயே சுதாரித்துக் கொண்டு, தாங்களாகவே இணையதளம் என்ற களத்தில் இறங்கி, தாங்களாகவே ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பல்லாயிரக் கணக்கானவர்கள் ஒன்றிணைந்து... ஒரு வருட காலத்திற்குள்ளாகவே தமிழக அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை இணைய உலகில் வேறு எவரையும் விட மிகப் பெரிய போர்ப் படையாக உருவாகி உலா வந்தனர்.

ஆனால் இந்த காட்டாற்று வெள்ளத்தை கரையமைத்து கழனிக்கு திருப்பிவிட்டு வெள்ளாமையை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே....!! இதை யார் செய்வது?

கட்சித் தலைமை தான் செய்ய வேண்டும்! ஆனால் இது ஒரு புத்தம் புதிய களம். இதை எப்படி கட்டமைப்பது? அல்லது வடிவமைப்பது? பிரபஞ்சம் சார்ந்த அளவில் உறுப்பினர்களை கொண்டிருக்கும் இந்த அணிக்கு எப்படி பொறுப்புக்களை பிரித்தளிப்பது என்பது உட்பட எதற்குமே உலக அளவில் எந்த முன்னுதாரணமும் இல்லாத நிலையில், இது பற்றி சிந்தித்து திட்டங்களை வகுத்து அதை தெளிவாகவும் அழுத்தமாகவும் செயல்படுத்திட கட்சித் தலைமைக்கும் சிறிது அவகாசம் தேவைப்படும் தானே?!

ஆமாம் தேவைப் படும் தான்! ஆனால் அது வரை இந்த மாபெரும் எழுச்சியை, சக்தியை விரயமாக்கிக் கொண்டிருக்க முடியுமா? மேலும் மாபெரும் எழுச்சியினால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கால், சில சமயம் கட்சிக்கே கூட சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விடலாம்!!

கட்சித் தலைமை ஒரு முடிவுக்கு வரும் வரை, இந்த எழுச்சியையும் குன்றிப்போகாமல் பாதுகாத்திட வேண்டும், ஆதரவாளர்கள் எண்ணிக்கையையும் பெருக்கிட வேண்டும், ஒரு சுய கட்டுப்பாட்டுடனும் கட்சிக்கு களங்கம் ஏற்படாமலும் இவர்களை கழகப்பணியாற்றிடச் செய்ய வேண்டும்.......

இதையெல்லாம் யார் செய்வது? இதை யார் முன்னெடுப்பது? என்பது புரியாத புதிராக இருந்த தருணத்தில் தான்......

அவர் எழுந்து நின்றார்!! நான் இருக்கின்றேன்... இங்கே வாருங்கள் என்றழைத்தார்.... தமிழகம் முழுதும் என்று கூட சொல்லக் கூடாது... உலகம் முழுவதிலுமிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைய அணி தோழர்கள் அனைவரும் .......

.....அனைவரும் வந்தால் புதுகை தாங்காது என்பதை புரிந்து கொண்டு, அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் ஓரிருவர், அங்கிருக்கும் மற்ற அனைவரின் ஒப்புதலுடனும் சார்பாகவும் புதுகையில் முற்றுகையிட்டனர்......

அங்கு வர இயலாதவர்கள் உலகம் முழுமைக்கும் இந்த நிகழ்வை நொடிக்கு நொடி எந்த இடைவெளியும் விடாமல் கொண்டு சென்று சேர்த்தனர்.....!!!

அந்த நாள் கழகத்தின் இணைய அணி வரலாற்றில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறிப் போனது. நமது கழகத்தையும் ஒரு நிலையில் இருந்து உலகளாவிய அளவில் அடுத்தக் கட்ட உயர் நிலைக்கு கொண்டு சென்ற முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது, தமிழகம் தாண்டியும் இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளையும் நம் கழகத்தை நோக்கி ஒரு வித பயபக்தியுடன் திரும்பிப் பார்க்க வைத்த நாளாக அமைந்தது...... தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு இணைய அணியை அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை அந்த நாள் ஏற்படுத்திவிட்டது!

(அவர்கள் அணியை உருவாக்கலாம், அதில் செயல்படுவதற்கு திறம்படைத்த ஆட்கள் வேணாமா? அதை விடுங்கள்......!)

அன்றைக்கு நம் கழக இணைய அணி தோழர்களிடம் ஏற்பட்ட ஒரு எழுச்சி, வகுத்துக் கொடுக்கப்பட்ட செயல் திட்டங்கள், வழங்கப் பட்ட அறிவுரைகள், அளிக்கப்பட்ட பயிற்சிகள், அறிந்துகொள்ள வைக்கப்பட்ட கழக வரலாறுகள் அனைத்தும் தான்....

அதன்பிறகு ஒரு புது மிடுக்குடனும், புத்திக்கூர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும், நேர்த்தியான விவாதங்கள் மூலமாகவும்..., நம் கழகத்தையும் அதன் தலைவர்களையும, கழகத்தின் கொள்கைகளையும், இது வரை கலைஞர் ஆட்சியில் செய்திருக்கின்ற சாதனைகளையும் பற்றி, இணையத்தை நோக்கி நாள் தோரும் படையெடுத்து வரும் புத்தம் புது இளைஞர்களிடம் நல்ல முறையில் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

ஒவ்வொரு உடன்பிறப்பும், தத்தமக்கு கைவந்த வகையில் இணையத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் உட்புகுந்து கச்சிதமாக கழக்ப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தேவைப்படும் போது தங்களுக்குள்ளாக ஒன்றிணைந்து கூடிப்பேசி (இணைய வழியாகவே) முடிவெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு கழகத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் தனி நபர்கள் அல்ல. தங்களுக்கு பின்புலமாகவும், உறுதுணையாகவும் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் வரிசைகட்டி நிற்கின்றார்கள். தலைவரும், தளபதியும் நம்முடனேயே இருந்து இணைய களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள், என்கிற தைரியத்தோடு இணையத்தில் தெளிவாக கழகப்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நம் தோழமைகளால் தலைவர் மற்றும் தளபதியின் கரங்கள் இணைய உலகில் மிகப்பெருமளவில் பலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கழகத்தை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற வெறியோடு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.!

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் யார்? அந்த மாமனிதர் யார்? கழகத்தை அதன் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வதற்கான மாபெரும் போர்ப்படையை ஒருங்கிணைத்து கழகத்தின் கைகளில் ஒப்படைத்திருக்கும் அந்த ஒப்பற்ற தொலைநோக்குச் சிந்தனையாளர் யார்????

இன்றைய தினத்தின் பிறந்தநாள் குழந்தையான நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைய அணி தோழமைகள் அனைவரின் பாசத்திற்கும் அன்பிற்கும் பாத்திரமான, புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் Periyannan Arassu தான் அந்த மாமனிதர்!!!

அவர் நினைத்திருந்தால் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த இணைய தோழர்களுக்கு மட்டும் இப்படி ஒரு கூட்டம் நடத்திவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் இணையம் என்பது ஒரு சிறு பகுதிக்குள் அடைத்து விடும் அளவிற்கான பொருள் அல்ல. இது எல்லை கடந்தது. இனி வரும் தேர்தல்களில் இதில் நம்முடைய வீச்சும் நாம் ஏற்படுத்துகின்ற தாக்கமும் தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யப் போகின்றது. அது மட்டுமன்றி நம் கழகத்தின் கொள்கையான “மாநில சுயாட்சி” போன்ற விடயங்களில் அகில இந்திய அளவில் விவாதங்களை உருவாக்கி பெரும்பாலானவர்களை அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்து அது பற்றிய ஒரு புரட்சியை இந்திய அளவில் ஏற்படுத்துவதற்கும் இந்த மாதிரியான எல்லை கடந்த இணைய அணித் தோழர்களால் மட்டுமே சாத்தியப் படும் என்பதையெல்லாம் தொலை நோக்கில் இந்த மனிதர் சிந்தித்ததன் வெளிப்பாடே, அப்படியொரு எல்லை கடந்த திமுகழகத்தின் இணைய பயிற்சிப் பாசறைக் கூட்டத்தைக் கூட்டி... ஒரு மாபெரும் வரலாற்றின் முதல் அத்தியாயத்தை அரங்கேற்றியிருக்கும் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்களின் இந்த செயல்!

இத்தகைய அண்ணன் அவர்களுக்கு நம் இணைய தோழர்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியினையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

3 comments:

Anonymous said...

நல்ல முயற்சி மட்டுமல்ல இன்றைய அவசிய தேவையும் கூட.

இன்னொரு முக்கிய தேவை சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய இரண்டு (spokespersons) பேச்சாளர்கள்.

ஆங்கில (NDTV, CNN IBN) TV விவாதங்களில் வட இந்திய சிறு கட்சிகள் கூட அருமையான (spokesperson) பேச்சாளர்களை களம இறக்குகின்றன. கழகத்தின் சார்பில் நல்ல பேச்சாளர் இல்லாதது இந்திய அளவில் கட்சியின் இமேஜ்ஜை கண்டிப்பாக குறைக்கும்.

Anonymous said...

Nice article. Anyway maavatam annan was your classmate rite? long back your own brother abhiappa told me that you both are classmates.

Anonymous said...

//ஆனால் திமுக என்பது பெரும்பாலும் அறிவாளிகளை உள்ளடக்கிய ஒரு இயக்கம் என்பதால்//:-)