Thursday, August 20, 2015

ஒரே ரத்தம் - மு.க.ஸ்டாலின்

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தாழ்மையான மற்றும் கடுமையான வேண்டுகோள்.....!


உங்களுக்கு பிறந்தநாள் விழா வந்துச்சின்னா, எதுத்தாப்புல இருக்குற நமக்கு ஈக்வலான பெரிய கட்சியில செய்யிற மாதிரி... காவடி தூக்குறது, அலகு குத்திக்கிறது, மண் சோறு திங்கறது, சிலுவைல அறைஞ்சிக்கிறது.... இப்புடி எதையாவது செய்யச் சொல்லியிருந்தீங்கன்னா, அந்த ஆளுங்களை விட சூப்பர் டூப்பரா செஞ்சி உங்கள் அபிமானத்தைப் பெற்றிருப்போம்....!!
ஆனா அதை வுட்டுட்டு, பெண்கள் கல்விக்கு உதவி செய்யச் சொல்லிட்டீங்க, நலிந்த மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்யச்சொலிட்டீங்க..., இதெல்லாம் கூட பரவாயில்லை, செய்யும் போது பெரிய மன திருப்தி கிடைக்குது...., ஆனா ஒரே மாசத்துல ஒரு லட்சம் யூனிட் ரத்த தானம் செய்யச் சொன்னீங்க பாருங்க அங்க தான் பிரச்சினையே ஆரம்பமாச்சு...!!!
உண்மையிலேயே என் மேல பாசம் இருந்திச்சின்னா அதை செய்யறதுல என்னய்யா பிரச்சினைன்னு நீங்க கேக்குறது புரியுது...!!
ரத்தம் கொடுக்குறதுல தொண்டர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அதை எல்லாம் வாங்குறதுக்கும், சேமிச்சி வைக்கிறதுக்கும் நம்ம தமிழ்நாட்டுல முறையான ரத்த வங்கி இருக்காங்குறது தான் பிரச்சினையே....!!!
முக்கியமான மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் மட்டும் தான் ரத்த வங்கி இருக்குது. அதுலயும் பல இடங்கள் வேலை செய்யாமல் பழுதாக இருக்குது. அப்படியே சரியா வேலை செஞ்சாலும், நாற்பது யூனிட், ஐம்பது யூனிட் எடுக்கும் வசதி தான் இருக்குன்னு சொல்றாய்ங்க. அது கூட பரவாயில்லை, அவிங்க, ரத்தத்தை அப்படியே ரத்தமாத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பாங்களாம். அதுக்கு ஒரு மாசம் தான் லைஃபாம்.! ஒரு மாசத்துக்குள்ள யாருக்கும் தேவைப்படலன்னா, தூக்கி வீசிடுவாய்ங்களாம்...!!
என்ன கொடுமை சரவணா இதுன்னு கேக்க தோனுதுல்லா...??!!
திமுக உடன்பிறப்புக்கள் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக ஒவ்வொரு நகரத்திலும், ஒன்றியத்திலும் 100 யூனிட்டுக்கும் மேலாக கொடுக்க தயாரா இருக்காங்க. வந்து கியூ கட்டி நிக்கிறாய்ங்க. அதனால நீங்க சொன்ன டார்கெட்டை ரீச் பண்ண தனியார் ரத்த
வங்கியை அணுக வேண்டிய நிலை. அவர்கள் ரத்தத்தை மூன்றாக பிரித்து நான்கு மாதங்கள் வரை உபயோகிக்கின்றார்கள்.
இப்ப என்ன பிரச்சினைன்னா??? உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இளைஞர்கள் சாரை சாரையாக ரத்ததானம் செய்ய வர்றாங்க. ஆனா தனியார் ரத்த வங்கிகளும் கூட அவ்வளவு யூனிட் எடுக்க திணறுகின்ற நிலையில் தள்ளாடுகின்றார்கள்....!!!!


அதனால தான் தளபதியாரே உங்க கிட்ட ஒரு கோரிக்கையை இங்கே இந்த நேரத்தில் அதாவது இன்றைக்கு தங்கள் திருமண நாளை கொண்டாடும் இந்த நேரத்தில், இந்த இடத்தில் வைக்கின்றேன்...!!

அடுத்ததாக வரும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும், குறைந்தபட்சமாக 1000 யூனிட் ரத்தத்தை சேமிக்கும் ரத்த வங்கிகளை நிறுவி.... அவை அனைத்தும், ரத்தத்தை மூன்றாக அதாவது, பிளாஸ்மா, சிகப்பணுக்கள், பிளேட்லெட்ஸ் என்று பிரித்து, லட்சக்கணக்கானோருக்கு பயன்படும்படியாகவும், 4 மாதங்களுக்கு சேமித்து வைக்கும் படியும்.... அதி நவீன ரத்த வங்கிகளை நிறுவி, அவை அனைத்தும் மிகச் சாமான்ய மக்களுக்கும் இலவசமாக கிடைக்கும்படி செய்ய வேண்டுமாய்.... தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...!!

உங்களுக்கு இது சாத்தியமான ஒன்று தான்.. 

உங்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.


நன்றி... வணக்கம்...!


2 comments:

Anonymous said...

innuma nambali nambuthu......

Anonymous said...

ஹி ஹி அடுத்த வருசம் உங்க ஆட்சியில.. தமிழ்நாட்டு மக்கள் முழிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க...