Wednesday, June 15, 2016

அவர் தான் தளபதி...!



கடலில் தூக்கி வீசப்பட்ட கைக்குழந்தை போலத்தான் அவரும்.... 

கையில் சிக்கிய கட்டைகளை எல்லாம் பிடித்துக் கொண்டு சாமர்த்தியத்திலும், அதீத உழைப்பிலும் கரையை நோக்கி நீந்தி வருபவர்..!

ராஜா வீட்டு கன்றுக்குட்டி தான் என்றாலும்...   அதை உதறிவிட்டு..

இளம் வயதில் திமுகவின் இளைஞரணியை உருவாக்கியவர்.... 

திருமணமான நான்காவது மாதம் திராவிட இயக்கத்தின் ஆகப்பெரிய அழிப்புப் போரான மிசாவில் ஓராண்டு சிறைத்தண்டனைப் பெற்று, உடல் நலிவுற்றவர்... 

வைக்கோ போன்ற துரோகிகள் வெளியேறி கட்சியைப் பிளந்த போது.... 
இளைஞர்களின் துணை கொண்டு அதை முறியடித்தவர்.... 

2ஜி போன்ற ஆயிரம் பிரச்சினைகள் திமுகவுக்கு எதிராக வந்த போதும்... 
கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற இமேஜ் வுடன் திமுகவை மீண்டும் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியவர்.... 

கடந்த தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் மூலை முடிக்கு இண்டு இடுக்கு என்று இதுவரை எந்த தலைவரும் செய்யாத பிரச்சாரத்தை மேற்கொண்டவர்......... 

ஆமாம் அவர் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியல்ல.... 
பதவி அதிகாரத்துணையோடு ஆட்டம் போட்டவர் அல்ல.... 

எதிரி ஜெயலலிதாவே மிரளும்... 
மரியாதையோடு நோக்கும் மாண்பு மிக்க ஆகச் சிறந்த அரசியல் வாதி.... 

கறை படியாத கரங்களுக்குச் சொந்தமான நிர்வாகி....! 
ம் அவர் ராஜாவீட்டுக் கன்றுக்குட்டியல்ல..!

அவர் தான் தளபதி மு.க.ஸ்டாலின்...!


2 comments:

Anonymous said...

innum intha oru ungale nambuthaa

Anonymous said...

udan pirappe

kanavu kandathu podhum.. elunthu vaa nithi alli thaa..