Wednesday, June 22, 2016

ஜெயலலிதா, ஸ்டாலின், எதிர்க்கட்சி, கடவுள்... இன்னபிற..!


தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை...

விவசாய சங்கத்தினர் வந்து சந்தித்து, அவர்களது விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கின்றார்கள்..!

சிறு, குறு தொழில் முனைவோர் வந்து சந்தித்து, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மனு கொடுக்கின்றார்கள்..!

இன்றைக்கு பால் உற்பத்தியாளர் சங்கத்தினரும் வந்து தளபதியைச் சந்தித்து கோரிக்கை வைக்கின்றார்கள்...!!

இப்ப தமிழ்நாட்டுல என்ன தான் நடக்குது?!

மக்களுக்கே தெரியுது...! ஸ்டாலின் தான் தங்களுடைய முதல்வர் என்று...!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே தென்படவில்லை - ஜெயலலிதா..!

இப்போ பார் கண் கொள்ளா அளவிற்கு உன் எதிரே எதிரிகள் நிரம்பி வழிய வைத்து விட்டேன் - கடவுள்..!

முதல்வர் பதவியின் மேல் எனக்கு ஆசையே இல்லை. அது தானாக என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது - ஜெயலலிதா..!

கவலைப்படாதே நீ ஆசைப்படாதது விரைவில் உன்னைவிட்டு விலக ஆசீர்வதிக்கிறேன் - அதே கடவுள்..!

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இப்படி ஜெயித்தால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன்... ஜெயலலிதா (நக்கீரன் செய்தியில்)

உன் விருப்பப்படியே நடக்கட்டும் ஆமென் - அதே கடவுள்.


2 comments:

Unknown said...

Ok. Neenga Nakkeeran standarda?

Anonymous said...

Jayalalitha has given super punch through her speech about kactha theevu.