Tuesday, September 17, 2013

சொத்துக்குவிப்பு வழக்கும், ஜெ. வை போட்டுத்தாக்கிய கலைஞரும்!!

நீதித்துறையை எந்த அளவிற்கு வளைக்கலாம், அதுவும் அதிகாரம் கையிலிருந்தால் ஒருவர் இவ்வளவு அசிங்கமாகக் கூட நடந்து கொள்ளலாம் என்பதை  கலைஞர் அவர்களின் இந்த அறிக்கைஅப்பட்டமாக தோலுரித்துக்காட்டுகிறது. உண்மையான நடுநிலையாளர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அறிக்கை இது. இந்த உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற அயோக்கியத்தனங்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள் பற்றியும் பொதுமக்கள் உணர வேண்டிய தருணம் இது!
=========================================
கலைஞர் அறிக்கை:

எந்தவித சிக்கல் வந்தாலும் அதை ஏற்பது என்ற ஒரே முடிவோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏனென்றால் நீதி நிலைக்க வேண்டும் என்பதில் எனக்குள்ள அசையா நம்பிக்கை தான்.


பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு சார்பில் வழக்கறிஞராக இருந்தவர் திரு. பவானி சிங். இவருக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர் திரு. ஆச்சார்யா.
ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருந்த போது, அவர் மீது ஜெயலலிதா தரப்பில் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், அங்கே பா.ஜ.க. ஆட்சி இருந்த போது, சென்னையிலிருந்து அதிகார பலமிக்க ஒரு குழு, பெங்களூர் சென்று, முகாமிட்டு பணியாற்றியதன் விளைவாக, கனத்த மனதுடன், வெளிப்படையாக தனது மன சங்கடத்தைத் தெரிவித்து விட்டு இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார். சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா பதவி விலகல் கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதிக்கு அனுப்பிய போது, தலைமை நீதிபதியாக இருந்த திரு. விக்ரமஜித் சென் அவர்கள் அந்தப் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த தலைமை நீதிபதி உச்ச நீதி மன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சென்ற பிறகு, பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் திரு. ஸ்ரீதர் ராவ். அவர் ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
ஆச்சார்யா அவர்கள் விலகிய பின், அவருடைய இடத்திற்கு கர்நாடக அரசால் அரசு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடு வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் பவானி சிங். ஆனால் அவரது நடை முறைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்தன. ஜெயலலிதாவின் சாட்சியங்கள் விசாரணை முடிவுற்றபின், அரசு வழக்கறிஞர் தான் தன் வாதங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்க, அரசு வழக்கறிஞர் அதை கண்டு கொள்ளவே இல்லை.


உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு வாகனவதி; திரு. பவானி சிங் அவர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று கர்நாடக அரசு பரிந்துரையே செய்யவில்லை என்றும், கர்நாடக அரசு வேறு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிலே ஒருவரை கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி நியமித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்த விவரத்தைக் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.


அப்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் தான் இந்த வழக்கில் ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் பொறுப்பு தலைமை நீதிபதி அரசு ஏற்கனவே பரிந்துரை செய்த நான்கு வழக்கறிஞர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், தன்னிச்சையாக இந்த பவானி சிங் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்தார்.
இந்த வழக்கின் விசாரண அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் சாட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்றால், நீதி மன்றம் தான் அவரை சம்மன் செய்து அழைக்க வேண்டும். அந்தக் குறைந்த பட்ச நடைமுறை கூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதி மன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டு, சாட்சி ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு விசாரணை அதிகாரி இப்படி சாட்சியம் அளித்ததற்கு தனது உயர் அதிகாரிகளின் அனுமதியைக் கூட முறையாகப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை. நீதிபதியும் அதை அனுமதித்திருக்கிறார்.
இதே பொறுப்பு விசாரணை அதிகாரி தான், அரசு வழக்கறிஞரை மீறி, நேரடியாக சிறப்பு நீதிபதிக்கு இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று முன்பு கடிதம் எழுதியவர். இதுகுறித்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நாம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, டி.எஸ்.பி.. சம்மந்தத்தின் கோரிக்கையைத் நிராகரித்ததுடன், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி செயல்படும் பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தத்தையும் கண்டித்தது.


பவானி சிங் பொறுப்பேற்றவுடன் அரசு தரப்பு சாட்சிகளான 259 பேர், மற்றும் ஆயிரக்கணக்கான ஆவணச் சாட்சியங்களைப் படித்து தெரிந்து கொள்ள இரண்டு மாதம் அவகாசம் வேண்டுமென்று கோரி 28-2-2013 அன்று மனு தாக்கல் செய்தார். இதுநாள் வரை இந்த மனு மீது சிறப்பு நீதி மன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் கேட்ட அவகாசமும் தரப்படவில்லை. அதற்காக அவர் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவே இல்லை.
இதையெல்லாம் கண்டபிறகு தான், இந்த வழக்கில் அரசு தரப்புடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட எங்களை அனுமதிக்க வேண்டு மென்று கோரி சிறப்பு நீதி மன்றத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப் பட்டது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா எழுத்துப் பூர்வமாக உங்கள் கருத்துகளை எழுதித் தாக்கல் செய்யலாமே தவிர, வாதாட அனுமதியில்லை என்று தெரிவித்து விட்டார். விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு வை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கும் இது நாள் வரை பதில் இல்லை.
இந்த முக்கியமான வழக்கின் சான்றாவணங்களாக உள்ள கைப்பற்றப் பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, அந்தச் சொத்துக்களான நகைகள் எல்லாம் நீதி மன்றத்தின் பொறுப்பிற்குக் கொண்டு வரப்படவேண்டும். அவ்வாறு இது வரை கொண்டு வரப்படவில்லை. இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதி மன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதி மன்றம் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி அவசரப்படுவது, அவர் தன் பதவி ஓய்வுக்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்று கருதினார் போலும்! நகைகளை நீதி மன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது.


அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டுமென்று கோரி கர்நாடக உயர் நீதி மன்றத்தில் 23-8-2013 அன்று பொது;ச செயலாளர் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார். 26-8-2013 அன்று கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி திரு. போபன்னா, கர்நாடக மாநில சட்டத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதி மன்றம், நியாயமான விசாரணை நடைபெறுவதை கர்நாடக உயர் நீதி மன்றம் உறுதி செய்ய வேண்டுமென்று தெரிவித்திருந்தது. அதனால் தான் கர்நாடக மாநில உயர் நீதி மன்றம் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்றையதினமே கர்நாடக மாநில அரசு, பவானிசிங் அவர்களை மாற்றி உத்தரவிட்டது.


கர்நாடாக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி 26ஆம் தேதியே ஆணை பிறப்பித்த போதும், 27ஆம் தேதியன்று சிறப்பு நீதி மன்றத்தில் பவானி சிங் ஆஜராகி வாதிடுவதில் முனைப்பு காட்டினார். அவர் அவ்வாறு வாதிட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவரை அந்தப் பதவியிலிருந்து கர்நாடக மாநில அரசு நீக்கிய ஆணை பற்றி நீதிபதிக்குத் தெரிய வந்து விட்டதால், நீதிபதி நீதி மன்ற நடவடிக்கைகளை அப்படியே நிறுத்தி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டார். அப்போது பவானி சிங் நீதி மன்றத்திலிருந்து வெளியேறி அ.தி.மு.க. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! புலியும் மானும் ஒரே இடத்தில் நீர் அருந்திய கதையைப் படித்தது இல்லையா? அதைப் போல, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களும், அவர்களை எதிர்த்து வாதிட வேண்டிய வழக்கறி ஞரும் கூடி ஆலோசனை நடத்திய வேடிக்கையும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்திலே நடைபெற்றிருக்கிறது.


கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி யிருக்கா விட்டால், 27ஆம் தேதியன்றே அரசு தரப்பின் வாதத்தை பவானி சிங் முடித்துவிட்டதாகத் தெரிவித்து, நீதிபதியும் தீர்ப்பிற்கான தேதியை அறிவித்திருப்பார்.


கர்நாடகாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிப்பு செய்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய சிறப்பு நீதிபதியாக திரு. பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அதற்காகவே அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டு மென்று கேட்டதைக் கூட அளிக்காமல், தன்னுடைய பதவி ஓய்வு நாளான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் அவசரத்துடன் செயல்பட்டதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பில் முதலில் 133 சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்தனர். ஆனால் 99 சாட்சிகளை மட்டும் விசாரித்து விட்டு, தங்களுடைய சாட்சிப் பட்டியலை திடீரென்று குறைத்துக் கொண்டனர். இந்த 99 சாட்சிகளிடமும் கூட, அரசு வழக்கறிஞரான பவானி சிங் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.


குற்றம் சாட்டப்பட்ட தரப்பு முக்கியமான ஆவணங்களை """"ஜெராக்ஸ்"" நகல் களாகக் கொடுத்த போதிலும், சிறப்பு நீதிபதி அதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்காமல் பெற்றுக் கொண்டார். இது """"ஒரிஜினல்"" ஆவணங்களையே சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை மீறியதாகும். """"ஜெராக்ஸ்"" நகல்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.


அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்ததும், தனது பதவி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்லப் போவதாக 28ஆம் தேதி பவானி சிங் அறிவித்த நிலையில், 29ஆம் தேதி யன்று அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது நியாயமற்ற செயல் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன வேடிக்கை? எதிர் தரப்பு வழக்கறிஞரை மாற்றியது தவறு என்று ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதி மன்றத்திற்கே சென்று விட்டார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டவரே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த விநோதத்தை டெல்லியிலே உள்ள மூத்த வழக்கறிஞர்கள் எல்லாம் பார்த்து தங்களுக்குத் தாங்களே சிரித்துக் கொண்டார்களாம்!


உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா தாக்கல் செய்த இந்த வழக்கினை 30ஆம் தேதியன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை கர்நாடக மாநில அரசு நீக்கியதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்ற ஜெய லலிதாவின் கோரிக்கையை ஏற்று, தடை விதிக்க மறுத்த உச்ச நீதி மன்றம், புதிய அரசு வழக்கறிஞரை அந்த இடத்திலே நியமிக்கவும் கூடாது என்று கூறியதுடன், அந்த மனு மீது கர்நாடக மாநில அரசின் கருத்தினை தெரிவிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியது.
6-9-2013 அன்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பவானி சிங்கின் நியமனமே சரியானது அல்ல என்பதால் அவரைத் திரும்பப் பெற முடிவு செய்வதாகவும், தலைமை நீதிபதியுடன் கலந்து புதிய வழக்கறிஞரை நியமனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அதையேற்ற நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


10-9-2013 அன்று பவானி சிங் அவர்களுக்கே கர்நாடக மாநில அரசின் சார்பாக அதன் சட்டத் துறை செயலாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் குறிப்பாக, """"ஹள வாந ழுடிஎநசnஅநவே டிக முயசயேவயமய றயள டிக வாந எநைற வாயவ லடிரச யயீயீடிiவேஅநவே றயள nடிவ அயனந in யஉஉடிசனயnஉந றiவா வாந னசைநஉவiடிளே ளைளரநன லெ வாந ளுரயீசநஅந ஊடிரசவ in வாயவ வாந சநளூரசைநஅநவே டிக உடிளேரடவயவiடிn hயள nடிவ நெநn உடிஅயீடநைன றiவா, வாந ழுடிஎநசnஅநவே றiவானசநற லடிரச யயீயீடிiவேஅநவே..... ஐn வாந உசைஉரஅளவயnஉநள வாந ழுடிஎநசnஅநவே ளை டிக வாந எநைற வாயவ வை றடிரடன நெ யயீயீசடியீசயைவந வாயவ யீநனேiபே உடிளேனைநசயவiடிn டிக வாந அயவவநச லெ ழடிn’டெந வாந ஊhநைக துரளவiஉந, லடிர னடி nடிவ iளேளைவ ரயீடிn யயீயீநயசiபே நெகடிசந வாந ஊடிரசவ in வாந யகடிசநளயனை உயளந யள ளுயீநஉயைட ஞரடெiஉ ஞசடிளநஉரவடிச"" என்று தெரிவித்து விட்டது. அதாவது தங்களின் நியமனம் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமையவில்லை என்று கர்நாடக அரசு கருதுவதால் தங்களின் நியமன உத்தரவை இந்த அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது; இப்போதுள்ள சூழ்நிலை யில் தலைமை நீதிபதியின் முன்னால் புதிய வழக்கறிஞர் குறித்த நடவடிக்கை நிலுவையில் இருப்பதை மனதிலே கொண்டு, சிறப்பு அரசு வழக்கறிஞராக நீங்கள் ஆஜராக வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடாது என்று அரசு கருதுகிறது என்று கர்நாடக அரசு கடிதமே எழுதியிருக்கின்றது.


10ஆம் தேதி கர்நாடக அரசு இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தவுடன், பவானி சிங் என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஜெயலலிதா தரப்பினர் முடிவெடுத்து விட்டார்கள். அதாவது இன்று (13-9-2013) மதியம் 1 மணி அளவில் உச்ச நீதி மன்றத்தில் பவானி சிங் இந்த வழக்கிலே ஆஜராகக் கூடாது என்று கர்நாடக மாநில அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இடைக்காலத் தடை வழங்கிட வேண்டுமென்று ஜெயலலிதா கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
பவானி சிங் அரசு வழக்கறிஞர் - ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடு வதற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் - அவரே இந்த வழக்கில் நீடிக்க வேண்டு மென்று ஜெயலலிதா எதற்காகத் துடிக்கிறார்? உச்ச நீதி மன்றமும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா தரப்பிலே அதற்காக எடுத்து வைத்த வாதம் என்ன? அதைப் பற்றி யெல்லாம் பின்னர் எழுதுகிறேன்.


உச்ச நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக, இந்த வழக்கு சிறப்பு நீதி மன்றத்தில் 17ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே பவானி சிங் அவர்கள் வாதாடக் கூடாது என்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் கழகத்தின் சார்பில் தொடுத்த வழக்கின் விசாரணை 16ஆம் தேதி யன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
எப்படியோ கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா இந்த மாதம் 30ஆம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கிறார். அதற்குள் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதுகிறார்கள். நீதிபதி அவர்களும் தான் ஓய்வு பெறுவதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கருதினார். இதிலே இடையிலே ஒரு சிக்கல். சிறப்பு நீதி மன்ற நீதிபதியின் பிறந்த நாள்படி அவர் இந்த மாதம் 12ஆம் தேதியோடு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மாதத்தின் மத்தியில் யாராவது ஓய்வு பெற நேரிட்டால், அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏதுவாக, அந்த மாதக் கடைசி வரையிலே தொடர்ந்து பணியாற்றலாம் என்று அரசு அளித்த சலுகை காரணமாக, நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் 30ஆம் தேதி வரை பணியாற்றலாம். ஆனால் அவர் இயற்கையாக ஓய்வு பெற வேண்டிய 12ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மாதம் 30ஆம் தேதி வரை அவர் பணியாற்றினாலுங்கூட, முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கக் கூடாது என்பது நீதி மன்ற மரபு. அதன்படி அவர் 30ஆம் தேதிவரை நீதிபதியாக பணி நீடித்தாலும், இனிமேல் அவரால் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கிட இயலாது என்பது தான் உண்மை. இதையும் மீறி சிறப்பு நீதி மன்ற நீதிபதி வழக்கினை நடத்துவாரா என்பது கேள்விக் குறி!


பேரறிஞர் அண்ணா அவர்கள் """"நீதி தேவன் மயக்கம்"" என்று ஒரு புகழ் பெற்ற நாடகம் எழுதினார். அதில் அண்ணா அவர்களே நடிப்பார். அதைப் போல இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலும் நீதி தேவன் மயக்கம் அடையப் போகிறரா? நிமிர்ந்து நிற்கப் போகிறாரா? நீதி தேவன் மயக்கம் அடைந்தாலும், உண்மையான நீதிபதிகளாகிய தமிழ் நாட்டு மக்கள் முன்பாக இந்த வழக்கின் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலைமைகளை எடுத்து வைத்திருக்கிறேன்.

மு.க


4 comments:

vijayan said...

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு,தினகரன் ஊழியர் கொலைவழக்கு,தா.கிருஷ்ணன் கொலைவழக்கு,தர்மபுரியில் கோவை மாணவியர் பஸ்சுடன் எரிப்பு அதனுடன் ஜெயலலிதா சொத்து வழக்கும் இருக்கட்டுமே ?ஜெயலலிதா சொத்து வழக்கில் இவ்வளவு அக்கறை காட்டும் கருணாநிதி மேற்கண்ட வழக்குகள் பற்றியும் கடிதம் எழுதுவாரா?

கொக்கரக்கோ..!!! said...

நல்லதொரு கருத்தைச் சொன்னதற்கு நன்றி விஜயன்!!!

இனிமேல் எந்த அரசியல்வாதி செய்யும் தவறையும் நாம் பொருட்படுத்த தேவையில்லை என்கிற உங்கள் கொள்கை புல்லரிக்க வைக்கிறது.

கும்மாச்சி said...

நீதி நேர்மை நியாயம் எல்லாம் நமது அரசியவாதி புன்னியவான்களால் என்றைக்கோ குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி அழுது உபயோகமில்லை.

Anonymous said...

நமது அரசின் நீதி மன்றம் இந்த அளவிலா உள்ளது ..
இப்படியெல்லாம் நடந்தால் நீதி மேல் எப்படி நம்பிக்கை வரும்.