Tuesday, September 3, 2013

ஆடி 18

ஆனியிலேயே நாற்றுவிட்டு பறித்து, ஆடி ஆரம்பத்திலேயே நடவு முடித்து பயிர் எல்லாம் மண் பிடித்து வளர ஆரம்பித்தவுடன், விவசாயிகள் எல்லாம் ஒரு வித பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நேரம் இது. இந்த நேரத்தில் தான் இரண்டு மாதங்களாக தனது சொந்த குடும்ப வேலைகளை கவனிக்க முடியாமல் இருந்ததை சமன் செய்யும் நிகழ்வுகளையும், இந்த விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் ஆற்றில் வரும் தண்ணீரை பாராட்டி கௌரவித்து நன்றி தெரிவிக்கும் முகமாகவும், ஆடி 18 அன்றைய தினத்தை ஆதி காலம் தொட்டு தமிழர்கள் அனைவரும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தனது ஆத்மார்த்தமான சொந்த விழாவாக, தத்தமது ஊரின் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங்கரைகளில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

அதன் பொருட்டு, கடந்த வருடம் ஆவணி மாதத்திற்கு பிறகு தங்கள் இல்லங்களில் திருமணம் செய்து வாழ வந்திருக்கும் பறித்த நாற்றாக வந்திருக்கும் நாற்றுப் பெண்ணை (அது தான் இப்பொழுது மறுவி நாட்டுப்பெண் என்றாகிவிட்டிருக்கிறது) தங்கள் இல்லத்தில் நட்டு வைத்து, தங்கள் குலம் தழைக்க வந்த தெய்வமாக போற்றிப் பாதுக்காக வேண்டிய சொந்தப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணும் இனி இது தான் நம் சொந்த ஊர், சொந்த வீடு என்ற எண்ணத்தோடு முழு அதிகாரம் பெற்றவளாக வலம் வர ஆரம்பிக்க வைக்கும் சடங்குகளும் நிறைவேற்றப்படும்.

அதன் பொருட்டுத் தான், திருமண விழாவின் போது அணிவிக்கப்பட்ட தாலியின் கயிற்றையும், அணிந்திருந்த மாலையையும் ஆற்றில் மரியாதை செய்து விட்டு விட்டு, தாலியோடு இந்த குடும்பத்தின் பாரம்பரிய சொர்ணங்கள் அல்லது செல்வங்களின் அடையாளங்களையும் சேர்த்துப் பெறுக்கி அதையும் புது கயிற்றில் கோர்த்து, இனி இந்தக் குடும்பத்தின் முழு அதிகாரம் பெற்று குலக் கொழுந்து என்று அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது.

இதை பல இடங்களில் பெண் வீடு இருக்கும் ஊரின் ஆற்றங்கரையில் நிறைவேற்றி சடங்கை முடிப்பதும் வழக்கம்.

அந்த நேரத்திலேயே அனைவரும் ஆற்றுக்கு மாவிளக்கு, காப்பு அரிசி எல்லாம் வைத்து படைத்து நன்றி தெரிவிக்கும் சடங்கும் பெண்களால் மனதார செய்யப்படும். இவை அனைத்தும் முடிந்து வீடு திரும்பிய நிலையில், ஆட்டுக்கிடா வெட்டி சமையல் சாப்பாடும் அமர்க்களப்படும். ஆச்சு அந்த ஒரு நாள் கூத்தோடு முடித்துக் கொண்டு அனைவரும் விவசாயத்திற்கு போய்விட வேண்டியது தான். இதற்கடுத்து சம்பா சாகுபடியும் முடித்து தைப் பொங்கல் கொண்டாட்டங்கள் தான் ஒரு வாரம் நடக்கும்.

இவை இரண்டும் தான் ஆதி காலம் தொட்டு தமிழர்களின் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத தங்கள் வாழ்வு முறை சம்பந்தப்பட்ட இயல்பான விழாவாக இருந்து வந்துள்ளது. எப்பவுமே இந்த ஆடிப்பெருக்கு விழாவுக்கு தமிழக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும்.

ஆனால் கடந்த இரண்டு வருடமாக அது தடைபட்டுப்போயிருக்கிறது. காவிரியின் கடை மடையில் இருக்கும் கடைசி முக்கிய நகரமான மயிலாடுதுறையில் இன்றைக்கு அதாவது ஆடிப்பெருக்கான இன்றைக்கு இப்படித்தான் காவிரி ஆறு வரண்டு கிடக்கிறது.

ஆனால் மக்களை ஏமாற்றம் அடைய வைத்துவிடக்கூடாது என்பதன் பொறுட்டு, திமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பவானி சீனிவாசன் மற்றும் துணைத்தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்களின் முயற்சியினால் கடந்த வருடத்திலிருந்து ஆற்றின் நடுவில் போர் இறக்கி இரவு முழுவதும் ஒரு பள்ளத்தில் (நடு ஆற்றில்) நீர் நிரப்பி மக்கள் வந்து நீராடி கடைமையை நிறைவேற்றவும் ஏமாற்றம் இல்லாமல் இருக்கவும் சிறப்பான வழி வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தேவை அறிந்து எப்பவுது தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் சேவையாற்றும் இயக்கமாக திமுக தான் எப்பவுமே இருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.

மேட்டூர் அணைத் தண்ணீரை எப்படி எந்தந்த நேரத்தில் எவ்வாறு பகிர்ந்தளித்து, நெற்களஞ்சியத்தின் இரு போக விளைச்சலுக்கு உறுதி செய்வதோடு, தமிழக மக்களின் அடிப்படியான வாழ்வாதார நிகழ்வுகளோடு இரண்டரக் கலந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நிகர் தமிழகத்தில் வேறு எவரும் கிடையாது....! கிடையாது.....!! கிடையவே கிடையாது......!!!

அதனால் தான் சொல்கிறேன் எப்பவுமே.....

கலைஞர் ஆட்சியே நல்லாட்சி

No comments: