Wednesday, September 4, 2013

பொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு? கதம்ப மாலை...!

எங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு.

இதுக்கு என்ன அர்த்தம்ன்னா?????

வள்ளுவர் கோட்டம் கட்டுனது யாரு??? திறந்து வச்சது யாரு? யாரு?

கோயம்பேட்டில் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தை கட்டுனது யாரு??? அதை திறந்து வச்சது யாரு? யாரு?

தருமபுரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது யாரு??? திறந்து வச்சது யாரு? யாரு?

நெம்மேலி கடல் நீர், குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தியது யாரு?? அதை திறந்து வச்சது யாரு? யாரு?

பெரிய பெரிய பாலங்களை கட்டி வச்சது யாரு??? இப்ப அதையெல்லாம் வீடியோ கான்ஃபரன்ஸ்ல திறந்து வக்கிறது யாரு? யாரு?

உழவன் ரயில் கொண்டு வந்தது யாரு??? அதன் துவக்க விழாவில் உள்ளே புகுந்து தள்ளு முள்ளு நடக்க.... நம் கழக தொண்டன் உயிர் விட்டானே... அதுக்கு காரணம் யாரு? யாரு???????

===========================

இப்பச் சொல்லுங்க மக்கா....

சோற்றைப் பொங்கி வைத்தது யாரு???? அதில் கொண்டு வந்து மாங்காயை வைத்து படையல் போட்டு பரப்புரை செய்வது யாரு? யாரு????

=====================================================

தீர்க்கதரிசி...!

ச்சே... நான் கூட, அவாள்லாம் இவோ மேல இருக்குற அவா பாசத்துனால தான் ஆதரவா எழுதறாளோன்னு நம்பிட்டேனேய்யாஆஆஆஆ......!

நம்ம தலைவர் போட்டு உடைச்ச மாதிரி ஒரே வாரத்துல பன்னிரெண்டே முக்கால் கோடிக்கு விளம்பரமா வருவாய் கொடுக்கறதுனால தான் இந்தப் பாசம்ன்னு இப்பத்தான்யா புரியுது!!!

தலைவரோட பராசக்தி படத்துல பாடுனது மாதிரி.....

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே”

என்னாஆஆஆ ஒரு தீர்க்க தரிசனம்?!

==================================================

திராவிடம் சாதித்தது என்ன??????

பிராமணரல்லாதோர், இந்த இணையத்தின் உள்ளே நுழைந்து கலைஞரை திட்டுவதற்க்கு திராவிடத்தை திட்டுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்!!!!!

இன்றைக்கு டேய்.... விச்சு என்று கூப்பிடும் தோழனை... குழந்தே என்று கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும்!!!!

அக்கிரஹாரங்களில் செருப்பில்லாமல் இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு மட்டுமே நுழைய முடிந்திருக்கும்.... இங்கிருக்கும் பாதிப்பேருக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டியிருக்காது.....!!!

வெளிநாட்டு வேலை என்றாலே அடிமட்ட கூலித் தொழிலாளியாக குடும்பத்தை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து வா(டு)ழும் நிலை மட்டுமே தொடர்ந்திருக்கும்....!!!!

குடும்பத்தோடு சென்று வெளிநாட்டில் செட்டில் ஆகி, ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் கலைஞரை திட்டி ஸ்டேடஸ் போடும் வாய்ப்பே வாய்த்திருக்காது.....!!!!
 

===================================================

 

No comments: